வியாழன், 23 பிப்ரவரி, 2017

அரசு ஊழியர்களின் ஊதிய விகிதத்தை மாற்றியமைக்க 5 பேர் கொண்ட குழு அமைப்பு

சென்னை, பிப். 23- 7ஆவது ஊதியக் குழுவின் அடிப்படையில் அரசு ஊழி யர்களின் ஊதிய விகிதத்தை மாற்றி யமைக்க 5 பேர் கொண்ட குழுவை அமைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 7ஆவது ஊதியக்குழுவை அமல்படுத் துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் எனது தலைமையில் நடை பெற்றது.இந்தக் கூட்டத்தில், மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு பரிந் துரைத்துள்ள திருத்திய ஊதிய விகி தங்கள் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகளை தொடர்ந்து தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற் கான பரிந்துரைகளை அளிக்க அலுவலர் குழு ஒன்றை உடனடியாக அமைக்க உத்தரவிட்டுள்ளேன்.

இக்குழுவில் உறுப்பினர்களாக, நிதித்துறை கூடுதல் தலைமை செய லாளர், உள்துறை முதன்மை செய லாளர், பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர், பணியாளர் மற்றும் நிர் வாகச் சீர்திருத்தத்துறை செயலாளர், பி.உமாநாத் (உறுப்பினர் செயலாளர்) ஆகியோர் இருப்பர்.இந்த அலுவலர் குழு மத்திய அரசின் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ள திருத்திய ஊதிய விகிதங்கள் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகளை ஆராய்ந்து, அவற்றை தமிழ்நாடு அரசு அலுவ லர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் அலுவ லர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றி யமைப்பதற்கான பரிந்துரைகளை வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஓய்வூதியம்

மேலும், இக்குழு மத்திய அரசு பரிந்துரைத்துள்ள திருத்திய ஓய்வூதியம் - குடும்ப ஓய்வூதியம் மற்றும் திருத்திய ஓய்வுக் கால பயன்கள் குறித்து ஆராய்ந்து அவற்றை தமிழ்நாடு அரசு ஓய்வூதிய தாரர்கள் மற்றும் அலுவலர்களுக்கு விரிவுபடுத்துவது குறித்தும் தக்க பரிந் துரைகள் அளிக்க கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது. இக்குழு, இதர படிகள் தொடர்பாக மத்திய அரசு அமைத்துள்ள உயர்மட்ட குழு அளிக்கும் அறிக்கையினையும் ஆராய்ந்து உரிய பரிந்துரை களை வழங்கும்.

அங்கீகரிக்கப்பட்ட அலுவலர் மற் றும் ஏனைய சங்கங்கள் இவ்வலுவலர் குழுவிற்கு ஊதிய விகிதம் / ஓய்வூதிய திருத்தம் குறித்த தங்கள் கோரிக்கையை அனுப்பி வைக்கவும், அவற்றை உரிய வாறு ஆராய்ந்து பரிந்துரைக்கவும் இக் குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இக்குழு தனது அறிக்கையை நான்கு மாத காலத்திற்குள், அதாவது 30.06.2017க்குள் அரசிற்கு அளிக்கும்படி உத்தர விட் டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன், பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் கே.ஏ. செங் கோட்டையன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணி உள்ளிட்ட அமைச்சர் களும், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்களும் பங்கேற்றனர்.

-விடுதலை,23.2.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக