ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

100 நாள் வேலைத்திட்டத்தில் கூடுதலாக 50 நாட்கள்

வேலை வாய்ப்பு தமிழக அரசு அறிவிப்பு


சென்னை, பிப்.26 வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட 100 நாட்களுக்கும் கூடுதலாக 50 நாட்கள் வேலை வாய்ப்பினை வழங்க மத்திய அரசு அனு மதியளித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர் புத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தமிழ்நாட்டின் 31 கிராமப்புற மாவட்டங்களில் உள்ள 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சி களிலும் சிறப்பாக செயல்படுத் தப்படுகிறது. 2016--17-ஆம் ஆண் டில் இத்திட்டத்தின் கீழ் தமிழ கத்தில் இதுவரை 33.43 கோடி தொழிலாளர்கள் பயன்படுத்தப் பட்டதில் தொழிலாளர் களுக்கு ஊதியமாக 4,655 கோடி வழங் கப்பட்டுள்ளது. முந்தைய நிதி யாண்டுடன் ஒப்பிடு கையில், தமிழகத்தில் நிலவும் வறட்சி யின் காரணமாக, 2016-17-ஆம் ஆண்டில் மூன்று கோடி தொழி லாளர்கள் பயன்படுத்தும் நாட் கள் அதிகரித்துள்ளன.
இத்திட்டத்தின்கீழ் தினமும் சராசரியாக 12 லட்சம் தொழி லாளர்கள் பணிபுரிந்த நிலை யில், தற்போது வறட்சி காரண மாக இத்திட்டத்தின்கீழ் பயன டையும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 18 லட்சமாக உயர்ந்துள்ளது.
தமிழ்நாடு அரசு 32 மாவட் டங்களையும் வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்துள் ளதைத் தொடர்ந்து,  தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு விடுத்த கோரிக்கையினை ஏற்று, மத்திய அரசு நடப்பு நிதியாண்டில்,  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப் பட்ட 100 நாட்களுக்கும், கூடு தலாக 50 நாட்கள் வேலை வாய்ப்பினை வழங்க அனும தித்துள்ளது.
இதனால், தமிழகத்தில் உள்ள ஒரு கோடியே 23 லட்சம் கிராமப்புறத் தொழிலாளர்கள் பயனடைவார்கள். இத்திட்டத் தின் கீழ் வறட்சியிலிருந்து பாது காத்து கொள்ளும் நடவடிக்கை களாக குட்டைகள், ஏரிகளை தூர் வாருதல் மற்றும் பண் ணைக் குட்டைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

விடுதலை,26.2.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக