அபராதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அபராதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 10 ஏப்ரல், 2025

10க்கும் மேற்பட்ட பெண்கள் பணி புரியும் நிறுவனங்களில் உள்ளக புகார் குழுவை அமைக்காவிட்டால் ரூ.50 ஆயிரம் அபராதம்

 

விடுதலை நாளேடு

சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

சென்னை, ஏப்.8 பத்துக்கும் மேற் பட்ட பெண்கள் பணி புரியும் அனைத்து நிறுவ னங்களிலும் உள்ளக புகார் குழுக்களை அமைக்க வேண்டும். அப்படி அமைக்காவிட்டால் அந்நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்

உள்ளூர் புகார் குழுக்கள்

பெண்களின் பாதுகாப் புக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் மூலம் ‘உள்ளூர் புகார் குழு’ அமைக்க ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. அதன்படி, சென்னை மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரியும் நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள், அரசு சாரா நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், மென்பொருள் தொழில் நுட்ப நிறுவனம் போன்ற வற்றில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன் புறுத்தல்களை தடுக்க ‘உள்ளக புகார் குழுக்கள்’ அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
இக்குழுவை குறைந்த பட்சம் 4 உறுப்பி னர்களை கொண்டு அமைக்க வேண்டும். அதில் 50 சதவீதம் பெண் உறுப்பினர்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். அதேபோல் ஒவ்வொரு நிறுவனங்களி லும் பெண்கள் தங்களது பிரச்சினைகளை தெரிவிக்க புகார் பெட்டி ஒன்றையும் அமைக்க வேண்டும். புகார் பெறப்பட்டவுடன் உள்ளக புகார் குழு உறுப்பினர்களை கொண்டு விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

ஆண்டுக்கு ஒருமுறை அறிக்கை

இந்த குழுவில் பதிவு செய்யப்படும் புகார் மற்றும் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ஆண்டுக்கு ஒருமுறை அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

அதேநேரம் புகார் குழுவை அமைக்காமல் இருந்தாலோ, புகாரின் அடிப்படையில் நடவ டிக்கை மேற்கொள்ளப் படாமல் இருந்தாலோ சம்பந்தப்பட்ட நிறுவ னங்களின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், அந்நிறுவனங்களின் உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். எனவே, சென்னை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து நிறுவனங்களிலும் உள்ளக புகார் குழுவை ஏற்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத் தியுள்ளார்.


திங்கள், 28 ஆகஸ்ட், 2023

18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை வேலைக்கு அனுப்பினால் பெற்றோருக்கு அபராதம் தொழிலாளர் உதவி ஆணையர் எச்சரிக்கை

 

 மதுரை,ஆக.9 - மதுரை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மதுரை மாவட்டத்தில் சிறுவர் கள் மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர்கள் உருவாகுவதை தடுத்தல் மற்றும் அனைத்து பள்ளி வயது சிறுவர்களும் இடைநிற்றல் இல்லாமல் பள்ளி செல்வதை உறுதி செய்வது மட்டுமே குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்காக விழிப்புணர்வு பிரச் சாரம் செய்யப்பட்டு வருகிறது. 

இதற்காக மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவுரைப்படி கூடுதல் தொழிலாளர் ஆணையர் ஜெய பாலன், இணை ஆணையர் சுப்பிரமணியன் ஆகியோர் வழிகாட்டுதலின் படி இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, 2022-_2023 கல்வியாண்டில் குழந்தை தொழி லாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்துடன் இணைந்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. 

இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். 1986ஆம் ஆண்டு குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தொழிலாளர்(தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டத் தின் கீழ் 14 வயது நிரம்பாத சிறு வர்களை அனைத்து விதமான பணிகளிலும், 18 வயது நிரம்பாத வளரிளம் பருவத்தினரை அபாய கரமான தொழில்களில் ஈடுபடுத்து வதும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தை மீறுபவர் களுக்கு நீதிமன்றம் மூலம் அதிக பட்சம் ரூ.50 ஆயிரம் அபராதம் அல்லது 2 ஆண்டுகள் வரையி லான சிறைத்தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படும்.

அத்துடன், குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் களை சட்டத்துக்கு புறம்பாக வேலைக்கு அனுப்பும் பெற்றோ ருக்கு அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

மதுரை மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்கள் மற்றும் வளரிளம் பருவத்தினரை வேலை யில் ஈடுபடுத்துவது தெரிந்தால் 1098 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். எல்லீஸ் நகரில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்திலும் புகார் தெரிவிக்கலாம். -இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.