அகவிலை படி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அகவிலை படி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 10 டிசம்பர், 2019

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 5% உயர்வு



புதுடில்லி, அக். 10- மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை கூடுதலாக 5 சதவீதம் உயர்த்தி வழங்க பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலை மையில் மத்திய  அமைச்சரவை கூட் டம் டில்லியில் நேற்று நடந்தது. இதில், மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக  5 சதவீத அகவிலைப்படி உயர்வை வழங்க ஒப்புதல் அளிக்கப் பட்டது.
இது குறித்து, மத்திய தகவல் ஒளிபரப்பு துறை  அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
மத்திய அரசு ஊழியர்களுக்கு 5 சதவீத கூடுதல் அகவிலைப்படி உயர்வை வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம்,  ஜூலை மாத தவணையான 12 சதவீதத்துடன் சேர்த்து 17 சதவீத அகவிலைப்படியை ஊழியர்கள் பெறுவார்கள். ஒரே நேரத்தில் 5 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இதன் மூலம், 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும் பய னடைவார்கள். இந்த 17 சதவீதம் ஜூலை மாத முன் தேதியை கணக் கிட்டு வழங்கப்படும். இந்த உயர்வால் மத்திய அரசுக்கு ரூ.16  ஆயிரம் கோடி கூடுதலாக செலவாகும்.
மேலும், பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ், ஆண் டுக்கு ரூ.6,000 நிதி உதவி பெற  ஆதாரை இணைப்பதற்கான கெடு நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த கால நீட்டிப்பு, வரும் ரபி பருவ பயிர்காலத்தையொட்டி விவசாயி களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டத்தின் கீழ் ஏற்கெனவே 7 கோடி விவசாயிகள்  ஆண்டுக்கு 3 தவணையாக ரூ.6,000 நிதி உதவி பெற்று பயனடைந்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
அகவிலைப்படி என்பது விலை வாசி உயர்வை சமாளிக்க, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர் களுக்கு வழங்கப்படும் நிதியாகும். இது 7ஆவது ஊதியக் குழுவின் பரிந் துரைகளின் அடிப்படையில் ஒவ் வொரு  ஆண்டும் ஜனவரி, ஜூலை மாதம் நிர்ணயம் செய்யப்படும். கடந்த ஜூலை மாதம் 12 சதவீத அகவிலைப்படி நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது அதில் கூடுதலாக 5 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

- விடுதலை நாளேடு, 10 .10. 19

வெள்ளி, 31 மே, 2019

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை, மே 22  தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர் களுக்கு 3 சதவிகிதம் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக நிதித்துறை செயலாளர் சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:

மத்திய அரசு ஊழியர்களுக்கு அக விலைப்படி உயர்த்தி வழங்கியதன் அடிப்படையில் தமிழக அரசு ஊழியர் களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்படுகிறது. இதன் அடிப் படையில், தமிழ்நாடு அரசு அலு வலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 1.-1-.2019 முதல் கணக்கிட்டு வழங்கப்படும். கூடுதல் ஊதிய மாக 3 சதவீதம் அளிக்கப்பட்டு, தற்போதுள்ள 9 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.

இந்த அகவிலைப்படி உயர்வு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணி புரியும் ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் அல்லாத பிற அலுவலர் களுக்கும், உள்ளாட்சி அமைப்பு களின் அலுவலர்களுக்கும், பல்கலைக்கழக மானியக்குழு /அனைத்திந்திய தொழில் நுட்பக் கல்விக்குழு சம்பள வீதங்களின் கீழ்வரும் அலுவலர்களுக்கும், அரசு மற்றும் உதவி பெறும் பல்தொழில் நுட்ப பயிற்சி பள்ளிகள், சிறப்பு பட்டய படிப்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள்/உடற்பயிற்சி இயக்குநர்கள்/ நூலகர்கள் ஆகியோருக்கும் வழங்கப் படும் என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு ஊழியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், அரசு ஊழியர், ஆசிரியர்க்கு 3 சதவிகிதம் அகவிலைப்படி உயர் வினால் ரூ.450 முதல் ரூ.6,500 வரை ஊதிய உயர்வும், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதிய தாரர்களுக்கு ரூ.225 முதல் ரூ.3,000 வரையும் ஓய்வூதிய உயர்வும் கிடைக்கும். இந்த அகவிலைப்படி உயர்வினால் சுமார் 18 லட்சம் அரசு அலுவலர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதி யர்கள் பயனடைவார்கள் என்றார்..

- விடுதலை நாளேடு 22. 5. 2019

புதன், 27 பிப்ரவரி, 2019

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

புதுடில்லி, பிப்.20 மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதிய தாரர் களுக்கும் 3 சதவீதம் அக விலைப்படி உயர்த்தப்பட்டுள் ளது.

இதன்மூலம், 1.1 கோடி பேர் பயன்பெறுவார்கள். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்ச ரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது:

மத்திய அரசு ஊழியர்களுக் கும், ஓய்வூதியதாரர்களுக்கும் 9 சதவீத அகவிலைப்படி வழங் கப்படுகிறது. கூடுதலாக 3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனால், 48.41 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 62.03 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் பெறுவார்கள்.

அகவிலைப்படி ஜனவரி 1ஆம் தேதி முதல் முன் தேதி யிட்டு வழங்கப்படும். ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரை களின் அடிப்படையில் அக விலைப்படி உயர்வு அளிக்கப் பட்டுள்ளது என்று ஜெட்லி தெரிவித்தார்.

 
- விடுதலை நாளேடு, 20.2.19