புதுடில்லி, டிச. 5 நாட்டில் வேலையின்மை பிரச்சினை ஏன் தொடர்கிறது? தொழிலாளர்களுக்கு குறைவான ஊதியம் ஏன் வழங்கப்படுகிறது? ஆகிய கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்று காங்கிரசு துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலை யொட்டி, பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி தினமும் ஒரு கேள்வியை எழுப்பி வரு கிறார். அந்த வரிசையில், ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில் திங்கள்கிழமை கூறியிருப்பதாவது: நாட்டில் வேலையின்மை பிரச்னை முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று பாஜக வாக்குறுதி அளித் திருந்தது. அந்த வாக்குறுதியை பிரதமர் மோடி இன்னும் நிறைவேற்றாதது ஏன்? குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.18,000 வழங்க வேண்டும் என்று ஏழாவது ஊதி யக் குழு பரிந்துரை செய்துள்ளது. இருந்த போதிலும், நிரந்தரத் தொழிலாளர்கள் மாதம் ரூ.10 ஆயிரமும், ஒப்பந்தத் தொழிலாளர்கள் மாதம் 5,500 ரூபாயும் பெறுவது ஏன்? என்று ராகுல் காந்தி அந்த சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஒக்கி புயல் காரணமாக, கடலில் தத்தளித்த மீனவர்களை, துணிச்சலுடன் காப்பாற்றிய லட்சத் தீவுகளைச் சேர்ந்த மக்களுக்கு தலை வணங்குவதாகவும் மற்றொரு பதிவில் ராகுல் காந்தி குறிப்பிட் டுள்ளார். மேலும், புயலால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர் வலி யுறுத்தியுள்ளார்.
குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலை யொட்டி, பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி தினமும் ஒரு கேள்வியை எழுப்பி வரு கிறார். அந்த வரிசையில், ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில் திங்கள்கிழமை கூறியிருப்பதாவது: நாட்டில் வேலையின்மை பிரச்னை முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று பாஜக வாக்குறுதி அளித் திருந்தது. அந்த வாக்குறுதியை பிரதமர் மோடி இன்னும் நிறைவேற்றாதது ஏன்? குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.18,000 வழங்க வேண்டும் என்று ஏழாவது ஊதி யக் குழு பரிந்துரை செய்துள்ளது. இருந்த போதிலும், நிரந்தரத் தொழிலாளர்கள் மாதம் ரூ.10 ஆயிரமும், ஒப்பந்தத் தொழிலாளர்கள் மாதம் 5,500 ரூபாயும் பெறுவது ஏன்? என்று ராகுல் காந்தி அந்த சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஒக்கி புயல் காரணமாக, கடலில் தத்தளித்த மீனவர்களை, துணிச்சலுடன் காப்பாற்றிய லட்சத் தீவுகளைச் சேர்ந்த மக்களுக்கு தலை வணங்குவதாகவும் மற்றொரு பதிவில் ராகுல் காந்தி குறிப்பிட் டுள்ளார். மேலும், புயலால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர் வலி யுறுத்தியுள்ளார்.
-விடுதலை நாளேடு, 5.12.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக