புத்தொழில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புத்தொழில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 1 மார்ச், 2023

உலகத் தமிழ் புத்தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு தமிழ்நாடு அரசின் திட்டங்களை பயன்படுத்திக் கொள்க!

 

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை, ஜன.10 புத்தொழில் தொடர்பான தமிழ்நாடுஅரசின் முன் னோடி செயல்திட்டங்களை அனை வரும் பயன்படுத்திக் கொள்ள வேண் டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

சென்னையில் உலகத்தமிழ் புத்தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் புத்தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கான குளோபல் தமிழ் ஏஞ்சல்ஸ் இணையதள தொடக்க விழா நடைபெற்றது.

மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் முன்னிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த புத்தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்ய, அமெரிக்க வாழ் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் ரூ.16.50 கோடி முதலீடுகளுக்கான விருப்பக் கடிதத்தை, அமைச்சர் தா.மோ. அன்பரசனிடம் அளித்தனர்.

மாநாட்டில், இணையதளத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நம் மாநிலத்தில் புத்தொழில் நிறுவனங் களில் நல்ல சூழலை உருவாக்க ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் புத்தொழில் முதலீடு களுக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் கிடைத்துள்ளது. 2021ஆ-ம் ஆண்டை விட இது 70 சதவீதம் அதிகம்ஆகும். இது தமிழ்நாட்டின் மீது முதலீட் டாளர்கள் மிகுந்த நம்பிக்கை வைத்தி ருப்பதைக் காட்டுகிறது. புத்தொழில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த வளர்ச்சி யிலும் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உள்ளது.

புத்தொழில்களை உருவாக்கவும், வளர்க்கவும் பல்வேறு முன்னோடி செயல்திட்டங்களை அரசு வகுத் துள்ளது. அனைத்து விதமானதொழில் களும் வளர வேண்டும்.அது அனைத்து மாவட்டங்களுக்கும் பரவ வேண்டும். அரசின் சார்பில் நடத்தப்பட்டு வரும் ஆக்கப்பூர்வமான முயற்சிகளில் உலகளாவிய தமிழ் முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்கு பெற வேண்டும். இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பழனிவேல் தியாகராஜன், மனோ தங்கராஜ், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலர் அருண்ராய், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்குநர் சிவராஜா ராமநாதன், வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை தலைவர் பாலா சாமிநாதன், வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவையின் தொழில்முனைவோர் அமைப்பின் தலைவர் கணபதி முருகேஷ்  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 தமிழ்நாட்டில் புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1.25 கோடி ஆதார நிதி தொழில்முனைவோருக்கான கையேட்டையும் முதலமைச்சர் வெளியிட்டார்

சென்னை,டிச.31- பசுமைத் தொழில் நுட்பம், ஊரக வாழ்வாதார மேம்பாடு மற்றும் பெண்களால் நடத்தப்படும் புத்தொழில் (ஸ்டார்ட்அப்) நிறுவனங்க ளுக்கான சிறப்பு சலுகை தொகுப்பு கையேட்டை வெளியிட்ட முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், புத்தொழில் ஆதார மானிய நிதியை வழங்கியதுடன், தொழில் முனைவோர்களுக்கான ‘வழி காட்டி மென்பொருள்’ இணைய தளத்தையும் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: பசுமைத் தொழில்நுட்பம், ஊரக வாழ் வாதார மேம்பாடு சார்ந்து இயங்கும் மற்றும் பெண்களை முதன்மை பங்குதாரர்களாக கொண்டிருக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான சிறப்பு சலுகைத் தொகுப்புக்கான அரசாணையில் கூறப்பட்ட முக்கிய அம்சங்கள் அடங்கிய கையேட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (30.12.2022) வெளியிட்டார்.

புத்தொழில் நிறுவனங்களுக்கு, டான்சீட் மானிய நிதி ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தப் பட்டுள்ளது. தலா ரூ.5 லட்சம் வீதம் 3 தவணைகளில் இது வழங்கப்படும். 

ஒரு நிதியாண்டில் தேர்ந் தெடுக்கப் படும் நிறுவனங்களில் 25 விழுக்காடு பெண்களை முதன்மை பங்குதாரர் களாக கொண்ட நிறுவனங்கள், 10 விழுக்காடு ஊரக வாழ்வாதார மேம்பாட்டு நிறுவனங்களுக்கும் ஒதுக் கப்படும்.

மாநில அரசு உதவியுடன் இயங்கும் தொழில்வளர் காப்பகங்களில், பெண் களால் நடத்தப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு உறுப்பினர் கட்ட ணம் மற்றும் ஓராண்டுக்கான வாடகைக் கட்டணம் ரூ.2 லட்சம் வரை கிடையாது. மேலும், பெண்கள் நலன் சார்ந்த தயாரிப்புகள், சேவைகளை வழங்கும் பெம்டெக் நிறுவனங்கள் மற்றும் பெண்களால் நடத்தப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு சிறப்பு தொழில் விரிவாக்க பயிற்சி, தமிழ் ஏஞ்சல் முதலீட்டாளர் தளம் வழியாக முதலீடு திரட்ட உதவிகள் என சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நிலைத்த நீடித்த வளர்ச்சி, சுழற்சி பொருளாதாரம் சார்ந்து, வணிக ரீதியில் பயனளிக்கும் விதமான திட்டங் களுக்கு ‘பசுமை காலநிலை நிதி’ திட்டத்தின்கீழ் நிதி வழங்கப்படும். 

பசுமை தொழில்நுட்ப தயாரிப் புகள், சேவைகளை அரசு கொள்முதல் செய்ய ஏதுவாக ‘அரசு கொள்முதல் உதவி மய்யமானது’ தமிழ்நாடு புத் தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் சென்னை மற்றும் மதுரை அலுவலகங் களில் அமைக்கப்படும்.

ஆண்டுக்கு 20 ‘பசுமை தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களுக்கு ஓராண்டு கால தொழில் விரைவாக்க பயிற்சி அளிக்கப் படும்.

தொடக்க நிலையில் உள்ள புத் தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்க, தகுதி யான நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் மானிய நிதியாக தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. 

இதுவரை நடைபெற்ற 3 கட்டங் களின்கீழ் 60 நிறுவனங்கள் தற்போது, 4 ஆவது கட்டமாக 25 நிறுவனங்களுக்கு தலா ரூ.5 லட்சம் என ரூ.1.25 கோடி மானிய நிதியை முதலமைச்சர் மு.க.ஸ் டாலின் வழங்கினார்.

மேலும், புதுயுக தொழில் முனைவு பயணத்தில் தகுந்த வழிகாட்டுதலை எதிர் பார்க்கும் தொழில் முனைவோர் களையும், வழிகாட்ட தயாராக இருக்கும் அறிவுரைஞர்களையும் இணைக்கும் ‘Mentor TN' என்ற வழி காட்டி மென்பொருள் இணைய தளத்தையும் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, குறு, சிறு நடுத்தரத் தொழில்கள் துறைசெயலர் வி.அருண்ராய் உள்ளிட்டோர் பங்கேற் றனர்.