பத்திரிகையாளர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பத்திரிகையாளர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 22 மார்ச், 2023

பத்திரிகை நல வாரியம் உருவாக்கம் - செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் குழு அமைப்பு

 

சென்னைடிச. 4- பத்திரிகை யாளர்களின் நலன் காக் கும் வகையில் பத்திரிகை யாளர் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளதுசெய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலை மையில் குழுவையும் அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தித் துறை செயலாளர் மகேசன் காசிராஜன் வெளியிட்ட அரசாணையில் கூறியி ருப்பதாவது:

உழைக்கும் பத்திரிகை யாளர்களுக்கு வழங்கப் பட்டு வரும் அனைத்து திட்டங்களையும் ஒருங் கிணைத்து செயல்படுத்து வதுடன்நல வாரிய உதவித் தொகை கள்நலத்திட்ட உதவிகள் அளிக்கும் வகை யில் பத்திரிகையாளர்கள் நல வாரியம் அமைக்கப் படும் என்று சட்டப் பேரவையில் செய்தித் துறை அமைச்சர் கடந்த செப்.6ஆம் தேதி அறிவித் தார்.

இதையடுத்துபத்திரி கையாளர் நல வாரியம் அமைத்து ஆணையிடப்படுகிறதுநலிவுற்ற பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகளு டன்பின்வரும் நலத் திட்ட உதவிகள் நல வாரி யம் மூலம் வழங்கப்படும்குறிப்பாக கல்வி உதவித் தொகையாக 10ஆம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகள், 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்பெண் குழந்தைகள், 11ஆம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகளுக்கு ரூ.1,000 வழங்கப்படும்.

மேலும், 12ஆம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகள், 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மகன்மகள்முறையான பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு ரூ.1,500, விடுதியில் தங்கி பட்டப் படிப்பு படிப்பவர்களுக்கு ரூ,1,750,முறையான பட்ட மேற்படிப்பு பயில் பவர்களுக்கு ரூ.2,000, விடுதியில் தங்கிப் படிப் பவர்களுக்கு ரூ.3,000, தொழில்நுட்ப பட்டப் படிப்புக்கு ரூ.2,000, விடுதி யில் தங்கிப் படிப்பவர் களுக்கு ரூ.4,000, தொழில் நுட்ப பட்ட மேற்படிப்பு படித்தால் ரூ.4,000, விடு தியில் தங்கிப் படித்தால் ரூ.6,000, அய்டிஅய்பாலி டெக்னிக் படிப்பவர்க ளுக்கு ரூ.1,000,விடுதியில் தங்கி படித்தால் ரூ.1,200 வழங்கப்படும்.

திருமண உதவித் தெகை

இதுதவிரதிருமணத் துக்கு ரூ.2,000, மகப்பே றுக்கு ரூ.6,000, கருக் கலைப்பு,  கருச்சிதைவுக்கு ரூ.3,000, கண் கண்ணா டிக்கு ரூ.500, இயற்கை மறைவு உதவித்தொகை யாக ரூ.50 ஆயிரம்இறுதி நிகழ்வுக்கு உதவித் தொகையாக ரூ.5ஆயிரம் வழங்கப்படும்.

மேலும்பத்திரிகையா ளர் நல வாரிய உதவித் திட்டங்களை பரிசீலித்து செயல்படுத்த செய்தித் துறை அமைச்சரை தலை வராகவும், 7 பேரை அலு வல் சார்ந்த உறுப்பினர் களாகவும்,6 பேரை அலு வல் சாரா உறுப்பினர்க ளாகவும் கொண்ட குழு அமைக்கப்படும்.

விளம்பரக் கட்டணத்தில்..

நல வாரியத்துக்கு நிதி ஆதாரம் திரட்டஅரசு விளம்பரங்களுக்கான விளம்பர கட்டணத்தில் 1 சதவீத தொகைநல வாரியத்துக்கு வழங்கப் படும்நடைமுறையில் உள்ள பத்திகையாளர் ஓய்வூதிய பரிசீலனைக் குழு கலைக்கப்பட்டுநல வாரிய உதவித் திட்டங் களுக்கு அமைக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்டு புதிய பரிசீல னைக் குழு அமைக்கப் படும்இந்த நடவடிக்கை கள் அனைத்தும் நீதிமன்ற உத்தரவின்படிஅமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு ஊடக மன் றத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாகும்இவ் வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைப்பு அரசு ஆணை வெளியீடு

 

சென்னைபிப்.25 தமிழ்நாட்டில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைத்து அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது

2021-_2022ஆம் ஆண்டிற்கான சட்டமன்றக் கூட்டத்தொடரில் 5.9.2021 அன்று நடைபெற்ற செய்தி மற்றும் விளம்பரம் தொடர்பான மானியக் கோரிக்கையின் மீதான அறிவிப்புகளில்செய்தித்துறை அமைச்சர்தமிழ்நாட்டில் முதன் முறையாகஉழைக்கும் பத்திரிகையா ளர்களை முன்களப் பணியாளர் களாக முதலமைச்சர்அறிவித்து பெருமை சேர்த்துள்ளார்.

அதனடிப்படையில்உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப் பட்டு வரும் அனைத்து திட்டங் களையும் ஒருங்கிணைத்து செவ் வனே செயல்படுத்துவதோடுநல வாரிய உதவித்தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

அரசாணை வெளியீடு

அமைச்சரின் அறிவிப்பிற் கிணங்கஉழைக்கும் பத்திரிகையா ளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து திட்டங்களையும் ஒருங் கிணைத்து செவ்வனே செயல்படுத் துவதோடுநலவாரிய உதவித் தொகை கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் பத்திரிகை யாளர் நலவாரியம் ஒன்றை உருவாக்கி ஆணை வெளியிடப்பட்டது.

பத்திரிகையாளர் நலவாரியத் திற்கு வரப்பெறும் விண்ணப்பங் களை பரிசீலனை செய்துபயனா ளிகளைத் தேர்வு செய்துநலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு பத்திரிகை யாளர் நலவாரியக் குழு ஒன்றை அமைத்துஅதற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து அரசு ஆணையிடுகிறது.

தலைவர்உறுப்பினர்கள்

செய்தித் துறை அமைச்சர் அதன் தலைவராக இருப்பார்நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர்வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர்வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர்,

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலா ளர்தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை ஆணை யர்நில நிர்வாகத் துறை ஆணையர்செய்தி மக்கள் தொடர் புத் துறை இயக்குநர் (அல்லதுஇந்த அதிகாரிகளால் நியமனம் செய் யப்படும் அலுவலர்ஆகியோர் அலுவல்சார் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

அலுவல்சாரா உறுப்பினர்கள்

தினத்தந்தி குழுமத்தின் பா.சிவந்தி ஆதித்தன்தினகரன் நாளிதழ் ஆசிரியர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ்தி இந்து நாளிதழ் துணை ஆசிரியர் பி.கோலப்பன்தீக்கதிர் நாளிதழ் செய்தியாளர் எஸ்.கவாஸ்கர்புதிய தலைமுறை தொலைக்காட்சி சிறப்பு நிருபர் எம்.ரமேஷ்தி வீக் செய்தி வார இதழின் முதன்மை சிறப்பு நிருபர் லெட்சுமி சுப்பிரமணியன் ஆகி யோர் அலுவல்சாரா உறுப்பினர் களாக செயல்படுவார்கள்.

1.12.2021 அன்று வெளியிட்ட அரசாணையின்படிபத்திரிகை யாளர் ஓய்வூதிய பரிசீலனைக் குழு கலைக்கப்படுவதுடன்பத்திரிகை யாளர் நலவாரிய புதிய நல உதவித் திட்டங்களுக்கு அமைக்கப்படும் இந்த குழுவே பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் குறித்த மனுக்களையும் பரிசீலிக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

சனி, 14 ஜனவரி, 2023

ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம்!

 

முதலமைச்சர் அவர்களுக்கு சென்னை பத்திரிகையாளர் யூனியன் (MUJ) நன்றி! 

சென்னை, நவ.4 பத்திரிகைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இதற்கு அடையாளமாக சென்னை தலைமைச் செயலகத்தில் 31.10.2022 அன்று ஓய்வுபெற்ற 7 பத்திரிகையாளர்களுக்கு அவர்   ஆணை களை வழங்கினார். இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் கடந்த  25 ஆண்டுகளில், ஒரே நேரத்தில்  அதிகப் படியானோருக்கு வழங்கப்படுவது இது தான் முதல் முறையாகும். இதற்காக சென்னை பத்திரிகையாளர் யூனியன் (MUJ) சார்பாக முதலமைச்சர் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்

பத்திரிகையாளர் ஓய்வூதியத் திட்டத்தில் வரையறுக்கப் பட்டுள்ள பணிக்கொடை மற்றும் பணிக்கால ஆண்டு, வருமான உச்சவரம்பு ஏற்கெனவே அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பத்திரிகையாளர்களின் ஓய்வூதிய விண்ணப் பங்களைப் பரிசீலிக்கும் முறையை எளிமைப்படுத்த வேண்டும். பத்திரிகையாளர்கள் ஓய்வூதியம் பெறுவதில் உள்ள முட்டுக்கட்டைகள் அகற்றப்படுவதுடன், ஓய்வுக் காலத்தில் பத்திரிகையாளர்களின் கண்ணியமான வாழ்வை உறுதிப்படுத்த முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். ஓய்வூ தியம் கோரி விண்ணப்பித்துள்ள பலருடைய விண்ணப் பங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அவற்றையும்  தமிழ்நாடு அரசு பரிசீ லித்து தீர்வு காண வேண்டும் என சென்னை பத்திரிகை யாளர் யூனியன் கேட்டுக்கொள்கிறது என எல்.ஆர்.சங்கர் (தலைவர்), மணிமாறன் (பொதுச் செயலாளர்)  சென்னை பத்திரிகையாளர் யூனியன் (MUJ). தெரிவித்துள்ளனர்.

ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைகளை வழங்கினார்

 

சென்னை, நவ.2- ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியத்துக்கான ஆணைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு  வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாட்டில் முதல்முறையாக, உழைக்கும் பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். மேலும்,பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும் என்று 2021-_2022-ஆம் ஆண்டுக்கான செய்தி, விளம்பரத் துறை மானியக் கோரிக் கையில் அறிவிக்கப்பட்டு, அதன்படி நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர் நலனில் அதிக அக்கறை கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, பணிக்காலத்தில் இயற்கை எய்தும் பத்திரிகையாளர் களின் குடும்பங்களுக்கு முதல மைச்சர் பொதுநிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் குடும்ப நிதி உதவியை ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தியது. பத்தி ரிகையாளர் நல நிதியத்துக்கென தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் ரூ.1 கோடி நிரந்தர நிதியாக வைப்பீடு செய்யப்பட்டது. இதில் இருந்து கிடைக்கும் வட் டியைக் கொண்டு, பத்திரிகையாள ருக்கு நிதியுதவி, கரோனா தடுப்பு நடவடிக்கையின்போது பணியாற் றிய பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.5 ஆயிரம் வீதம் 5,782 பத்திரிகையாளர்களுக்கு மொத்தம் ரூ.2.89 கோடி சிறப்பு ஊக்கத்தொகை ஆகிய உதவிகள் வழங்கப்பட்டன.

கரோனா தொற்றால் உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்பத் துக்கு முதலமைச்சர் பொது நிவா ரண நிதியில் இருந்து வழங்கப்படும் இழப்பீடு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்ட துடன், 20 வாரிசுகளுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் ரூ.2 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது.

பத்திரிகை துறையில் பணிபுரியும் செய்தியாளர்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளில் குறைந்த வாடகையில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பத்திரிகை யாளர் நல நிதியத்தில் இருந்து வழங் கப்படும். மருத்துவ உதவித்தொகை ரூ.2 லட்சத்தில் இருந்துரூ.2.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பத்திரிகையாளர் அங்கீகார அட்டை பெற்றுள்ள அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் கட்டணமில்லாப் பேருந்து பயண அட்டை போன்ற பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

பத்திரிகையாளர்கள் ஓய்வுக்கு பிறகு, எந்த இயலாமைக்கும் ஆளா காமல் இருக்க, அரசு சார்பில் மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அதன்படி, நாளி தழ்கள், பருவ இதழ்கள், செய்தி முகமைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதம்ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கும் அடையாளமாக, இதற்கான உத்தரவுகளை 7 பேருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலை மைச் செயலகத்தில் வழங்கினார்.

செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, தமிழ் வளர்ச்சி, செய்தித் துறை பொறுப்பு செயலர் ம.சு.சண்முகம், செய்தி, மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் ஆகியோர் உடன் இருந்தனர். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.