தொழிலாளர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொழிலாளர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2025

இந்தியத் தொழிலாளர் -பெரியார்


தொழிலாளர்கள் என்பது யார் என்கிற விஷயத்திலேயே நான் அபிப்பிராய பேதமுடைய வனாகவிருக்கிறேன். பொதுவாய் நம் நாட்டில் தொழிலாளர் என்று அழைக்கப்படுவது கூலிக்காரர் களைக் குறிக்கின்றதே யன்றி, உண்மையில் சுவாதீனத் தொழிலாளரைக் குறிப்பதில்லை. தொழிலாளன் ஒருவன் தானே தன் இஷ்டம்போல் ஒரு தொழிலைச் செய்து அத் தொழிலின் பயன் முழுவதையும் தானே அடைபவனாய் இருக்க வேண்டும். தற்காலம் வழக்கத்தில் குறிப்பிடும் தொழிலாளி யாரெனின் ஒரு முதலாளியிடம் அவரது இயந்திரத் தொழிலுக்கு உபகருவிபோல் அதாவது, ஒரு இயந்திரத்திற்கு நெருப்பு, தண்ணீர், எண்ணெய், துணி, தோல் முதலிய கருவிகள் எப்படி உபகருவிகளோ அது போல் அதன் பெருக்கத்திற்கு சில கூலியாள் என்ற உயிர் வÞதுவும் அதற்கு உபகருவியாகவிருந்து, அந்த முதலாளி சொல்கிறபடி வேலை செய்பவர்தான் தொழிலாளியென்றும், அவரிடம் கூலிக்குப் போராடுவதைத்தான் தொழிலாளர் இயக்கம் என்று சொல்லப்படுகின்றது. இவர்கள் எந்த விதத்திலும் தொழிலாளி ஆக மாட்டார்கள். இவர்கள் வேலையும், இவர்கள் நேரமும் இவர்களுக்கு எந்த விதத்திலும் சம்பந்தப்பட்டதேயல்ல. இவர்களாகவே கூலிக்கு அமர்ந்து கொண்டு அடிமைபோல் சொல்லுகிறதைச் செய்கிறதாகவும் சம்மதித்து, பிறகு எஜமானன் அதிக லாபம் அடைவதைப் பார்த்துப் பொறாமை கொண்டோ, தொழில் திறத்திற்கு என்று அல்லாமல் வயிற்றுக்குப் போதாது என்ற காரணத்தினாலோ தாங்கள் இல்லாவிட்டால் வேலை நடக்காது என்று நினைத்து தங்களுக்கு அதிகக்கூலி வேண்டும், தராவிடின் வேலை நிறுத்தம் செய்வோம், வேலை நிறுத்தம் செய்தபின் வேறு ஒருவன் அந்த வேலை செய்யவும் சம்மதிக்கமாட்டோம். முதலாளி எங்கள் வேலை நிறுத்தத்தால் நஷ்டமடையவேண்டும் என்கின்ற முதலியனக் காணப்படும் செயல்களையும் அதன் பலன்களையும்தான் தொழிலாளர் இயக்கமென்பதும், தொழிலாளர் இயக்கத்தின் வெற்றி தோல்வியாய்க் கருதப்படுவதுமாகவிருக்கிறது.

இதைக் கூலிக்காரர்கள் இயக்கம் என்றுதான் கூறலாம். இவ்வித இயக்கம் உண்மையில் நம் தேசத்திற்கோ, நம் தேச மக்களுக்கோ எவ்விதத்திலும் அனுகூலமான இயக்கம் என்று சொல்லமுடியாது. இது மேனாட்டு வழக்கத்தை அனுசரித்தது. அங்குள்ள முதலாளிகளும், கூலிக்காரர்களும் கீழ்நாட்டுப் பணத்தையும், பதவியையும் கொள்ளையடித்து அதை எப்படிப் பங்கு போட்டுக் கொள்வது என்கிற சண்டைதான் அங்கு தொழிலாளர் இயக்கமாய் விளங்குகின்றது. நம் நாட்டிலோ தொழிலாளி அதிகக்கூலி கேட்க  கேட்க முதலாளி, மக்கள் வாங்கும் பொருள்களின் மேல் அதிகவிலையை வைத்து, மக்களிடம் பொருள்பறித்து, சிறிது தொழிலாளர்களுக்குக் கொடுத்து மிகுதியைத் தான் எடுத்துக்கொண்டு முன்னிலும் தான் அதிக லாபம் சம்பாதித்தவனாகிவிடுகிறான். உதாரணமாக, ரயில்வே, டிராம்வே தொழிலாளர்களின் இயக்கங்களை எடுத்துக்கொள்வோம். சென்னை டிராம்வே, ரயில்வே தொழிலாளர்கள் தங்கள் எஜமானர்களான கம்பெனிக் காரர்களிடத்தில் அதிகக்கூலி கேட்டார்கள். எஜமானர்களும் முதலாளி களுமான கம்பெனிக்காரர்களோ கட்டணமாகிய டிக்கெட்டுகளின் விலையை உயர்த்தினார்கள்.

இவ்வகையில் ஜனங்களின் பணத்தைப் பறித்து தொழிலாளர்களுக்குக் கொஞ்சம்  கொடுத்துவிட்டு மேற் கொண்டும் தாங்கள் லாபம் அடைந்தார்கள். இதில் எவருடைய பொருள் நஷ்டமடைந்தது? முதலாளிகள் பொருளா? இம்மாதிரியான நடவடிக்கைகளை சுருக்கமாகக் கூறின் கூட்டுக்கொள்ளை என்றுதான் சொல்லவேண்டும். இவ்வித இயக்கங்களாலும், நடவடிக்கை களாலும் தேசம் ஒருபொழுதும் முன்னேற்ற மடையாது. ஏழைகளும் பிழைக்க முடியாது. இவ்வித இயக்கங்கள் நடத்தவதைவிட பொதுவுடைமைத் தத்துவங்கள் நடத்துவது குற்றமென்று சொல்ல முடியாது. இம்மாதிரி இயக்கங்கள் நாட்டின் உண்மைத் தொழில் அபிவிருத்திக்கும் பொருளாதார அபிவிருத்திக்கும் கொஞ்சமும் உதவி செய்யாது. இதுமாத்திரமன்றி இவ்வியக்கங்களை நடத்தும் தொழிலாளர்களின் தலைவர் களோவென்றால் பெரும்பாலும் முதலாளிகளும் எஜமானர் களுமாகவேதான் இருக்கிறார்கள். தொழிலாளிகளின் கஷ்டமும் கூலிக்காரர்களின் கஷ்டமும் ஒரு சிறிதும் அறியாமல் தொழிலாளரின் உழைப்பினாலும், கூலிக்காரரின் அறியாமையி னாலும் பிழைக்கிற இவர்கள் இவ்வியக்கத்தை நடத்துகின்றனர். இது எப்படி முன்னுக்கு வரும்? இதுவரை நம் நாட்டில் தொழிலாளர் இயக் கங்கள் எவ்வளவு முன்னுக்கு வந்தன? எவ்வளவு மறைந்தன? எவ்வளவு வெற்றி யடைந்தன? எவ்வளவு தோல்வியடைந்தன? எவர் ஒழுங்காக நடத்தினர்? என்பதைக் கவனித்தால் இவற்றின் பலனை நன்கு அறியலாம்.

தொழிலாளிகளும், தொழிலாளர் இயக்கங்களும் இந்த நாட்டில் முன்னுக்கு வரவேண்டுமாயின், தொழிலாளர்கள் தாங்கள் கற்ற தொழிலைக்கொண்டு தாங்களே ஒரு தொழில் தங்களிஷ்டம்போல் செய்து தொழில் திறத்தையும் ஊழியத்தையும் அறிந்து அத்தொழிலின் பலன்களை நாட்டாருக்குக் கொடுத்து நாட்டாரை அனுபவிக்கச் செய்து, அதன் ஊதியமுழுவதும் தாங்களே அடையும்படியான நிலைமை நாட்டிற்கு என்று வருகின்றதோ அன்றுதான் தொழிலாளரின் நிலைமை முன்னேற்றமடையுமே அல்லாமல் கைத்தொழில் அழிக்கப்பட்டுப்போன காரணத்தால் முதலாளிகள் இயந்திரங்களை அதிகம் அமைத்து, திக்கற்றவர்களைக் கூலிக்கமர்த்தி, அவர்களிடம் கொடுமையான வேலை வாங்கி, அதன் பயனாய் கொள்ளை அடிப்பது போன்று லாபத்தைச் சம்பாதித்து அவை வேலைக்காரர்களும் பொதுஜனங்களும் அடையாதபடி நடுவிலிருந்துகொண்டு முதலடித்து

தானேஅனுபவித்து வருவதால் ஒருநாளும் முன்னேற்றமடைய முடியாது.

இதுவரை தொழிலாளரின் கதி இப்படியாயினும் இனி எதிர்காலத்திலாவது தொழிலாளர் தங்கள் குழந்தைகளையும் மற்றும் தொழில் வேண்டியவர்களும் தாங்கள் கற்கும் தொழிலைக் கொண்டு மற்றொருவர் பிழைக்கும் மார்க்கமான தொழிலாயில்லாமல் தாங்கள் செய்யும் தொழிலின் பலன்களை முற்றிலும் தாங்களே அனுபவிக்கும்படியான தொழில்களைக் கற்றுக் கொடுப்பதுடன் எக்காரணத்தைக் கொண்டும் தங்கள் இயக்கங்களை முதலாளிகளும் எஜமானர்களும் தலைமை வகித்து நடத்தவிடாமல் தானேதன் கையைக் கொண்டு வேலை செய்யும் தொழிலாளியோ, அல்லது கூடுமானால் தன் கைக்கொண்டு வேலை செய்து அதன் முழுப்பலனையும் தானே அடையும் படியான உண்மையானதும் சுதந்திரமுடையதுமான ஒரு தொழிலாளியோ இயக்கத்தைத் தலைமை வகித்து நடத்தும்படி வந்தால், இன்றைக்கே இல்லாவிடினும் கூடிய விரைவிலாவது தொழிலாளிகளும், தொழிலாளரின் இயக்கங்களும் நாட்டிற்கு நன்மை பயக்கக் கூடியவைகளாக விளங்கும். இல்லாதவரையில் தலைவர்கள் என்போர் சுயநலத்தைப் பெருக்கிக் கொள்ளவோ, முதலாளிகள் கொள்ளை அடிக்கவோ, தொழிலாளிகள் என்போர் சண்டித்தனம் செய்து வயிறு வளர்க்கவோதான் முடியும்.

– குடிஅரசு, கட்டுரை, 28.06.1925

-விடுதலை நாளேடு, 2.8.25

சனி, 12 அக்டோபர், 2024

ஊதியம் வழங்கும் சட்டம் - 1936 - கே.ஜி.சுப்பிரமணியன்

 தொழிலாளர் நலச் சட்டங்கள்-5

- கே.ஜி.சுப்பிரமணியன்

1. இச்சட்டமானது ஊதியம் கொடுப்பதைக் குறித்த சட்டம் 1936 எனப் பெயர் பெறும்.

2. இச்சட்டம் இந்தியா முழுவதும் செல்லத்தக்கதாகும்.

நோக்கங்கள்:-

ஊதியம் வழங்கப்பட வேண்டிய தகுதியை நிர்ணயம் செய்கிறது. ஊதியத்தில் பிடித்தங்கள் செய்வதை ஒழுங்குபடுத்துகிறது. ஊதியம் வழங்குவதில் உள்ள குறைபாடுகளைப் போக்க வகை செய்கிறது.

இச்சட்டம் தொழிற்சாலைகளிலும், இரயில்வே துறையில் பணி புரிபவர் களுக்கும், இரயில்வே நிர்வாகத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளவர்க ளால் வேலைக்கு அமர்த்தப் பட்டுள்ளவர்களுக்கும் பொருந்தும்.

தொழிலாளி:- தொழிலாளி" என்னும் சொல் இறந்துபட்ட தொழிலாளியின் சட்ட பூர்வமானவருக்கும் பொருந்தும்.

முதலாளி "முதலாளி" என்னும் சொல் இறந்துபட்ட முதலாளியின் சட்ட பூர்வமானவருக்கும் பொருந்தும்.

தொழிற்சாலை:- "தொழிற்சாலை" என்பது 1948-ம் ஆண்டில் தொழிற் சாலைகள் சட்டத்தில் கண்டு உள்ள விளக்கத்தைக் குறிக்கும்.

தொழில் நிறுவனம் என்பது பின் வருபவற்றைக் குறிக்கும்.

1. வாடகைக்கோ, வெகுமதிக்கோ பயணிகளை அல்லது சரக்குகளை சாலையில் ஏற்றிச் செல்லும் டிராம் அல்லது மோட்டார் போக்குவரத்து.

2. இராணுவத்திலும், சிவில் விமானத்துறையிலும் ஈடுபடாத இதர விமானப் போக்குவரத்துப்பணி.

3. கப்பல் துறை, கப்பல் தளம், கப்பல் தங்குமிடம்.

4. இயந்திரத்தால் இயக்கப்படும் உள்நாட்டுப் படகுகள்.

5. சுரங்கம், சுரங்கப்பகுதி, எண்ணெய் வயல்,

6. தோட்டத் தொழில்,

7. பொருட்களை பயன்படுத்துதல். வேறு இடங்களுக்கு அனுப்புதல், விற்பனை செய்தல், பொருள் உற்பத்தி அல்லது மாற்றியமைக்கும் தொழில் கூடம், அல்லது இதர நிறுவனம்.

8. கட்டடங்களைக் கட்டுதல், பாதுகாப்பு, அல்லது மேற்பார்வையிடுதல், சாலைகள், பாலங்கள், சிறுகால் வாய்கள், அல்லது கப்பல் போக்குவரத்து, விவசாயத்திற்கு நீர் வழங்குதல், அல்லது மின் சக்தி இயக்குதல், வழங்குதல், கொண்டு செல்லுதல் போன்ற அனைத்தும் இதில் அடங்கும்.

அ. சுரங்கம் என்பது 1952ஆம் ஆண்டின் சுரங்கச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள பொருளையே உடையதாகும்.

ஆ. தோட்டம் என்பது 1951ஆம் ஆண்டின் தோட்டத் தொழிலாளர் சட் டத்தில் கூறப்பட்டுள்ள பொருளையே குறிப்பதாகும்.

இ. நிர்ணயிக்கப்பட்ட என்பது இச் சட்டத்தின்படி இயற்றப்பட்ட விதிகளினால் நிர்ணயிக்கப்பட்ட எனப் பொருள்படும்.

இரயில்வே நிர்வாகம் என்பது - 1890ஆம் ஆண்டின் இந்திய இரயில்வேக்கள் சட்டத்தில் கூறப்பட்டுள்ள பொருள்களையே குறிக்கும்.

ஊதியம்: வேலை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதின் மூலமாக ஒரு வேலைக்கு அமர்த்தப்பட்ட நபருக்கு அவர் செய்த வேலைக்காக பணமாக மதிப்பிட்டுக் கொடுக்கப்படும் அல்லது மதிப்பிடக்கூடிய எல்லா வெருமதியும் 'ஊதியம்'' எனக் கருதப்படும்.

கீழ்க்கண்டவைகள் ஊதியம் என்ற
சொல்லில் அடங்கும் :-


1. இரு தரப்பினரிடையே செய்து கொண்ட ஒப்பந்தப்படி அல்லது நீதி மன்றத் தீர்ப்பின்படி அளிக்கப்படக் கூடிய எல்லா தொகையும்.

தொழிலாளி நியாயமாகப் பெறத்தக்க மிகை நேர ஊதியம், அல்லது விடுமுறை நாட்களுக்கு உரிய ஊதியம் அல்லது ஓய்வு நாட்களுக்கு உரிய ஊதியம்.

3. போனஸ் என்ற பெயராலோ அல்லது வேறு பெயராலோ வேலை நிபந்தனைகளின்படி கொடுக்கப்பட வேண்டிய தொகை.

4. வேலையிலிருந்து நீக்கப்படுவதினால் சட்டப்படி வழங்கவேண்டிய தொகை, ஒப்பந்தம் அல்லது பத்திரங்கள் மூலம் கொடுக்கப்ட வேண்டிய தொகை

5. அவ்வப்போது நடைமுறையில் உள்ள அந்தச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு திட்டத்தின் அடிப் படையில் வேலைக்கு அமர்த்தப்பட் டவருக்குக் கிடைக்க வேண்டிய தொகை

கீழ்க்கண்டவைகள் "ஊதியம்" என்ற
விளக்கத்தில் அடங்காது:-


1.வேலை ஒப்பந்தம், அவார்டு, இருதரப்பு ஒப்பந்தம், நீதிமன்ற உத்தரவு இவைகளில் கூறப்படாத இலாபப் பங்கீடு அல்லது வேறு விதமான போனஸ் இதில் அடங்காது.

2. மாநில அரசின் உத்தரவின்படி ஊதியத்தில் சேர்க்கப்பட்டக் கூடாது என விலக்களிக்கப்பட்ட, வீட்டு வசதி, விளக்கு வசதி, தண்ணீர் வசதி, மருத்துவ வசதி மற்றும் இதர வசதி அல்லது சேவைகளின் மதிப்பீடு இதில் அடங்காது.

3. ஓய்வு கால ஊதியம், வருங்கால வைப்பு நிதி இவற்றிற்காக வேலைக்கு அமர்த்துபவர் செலுத்தும் பங்கும் அதற்கான வட்டியும்.

4. பயணப்படி அல்லது பயண சலுகையின் மதிப்பு.

5. வேலையின் தன்மை கருதி 'வேலைக்கமர்த்தப்பட்டவருக்கு சிறப் பாகத் தரப்படும் செலவு தொகைகள்.

6. வேலை நீக்கம் செய்யப்படும் போது தரப்படும் பணிக்கொடை.

ஊதியம் கொடுப்பதற்கான
பொறுப்பு:-


ஒவ்வொரு முதலாளியும் அவரால் வேலைக்கு அமர்த்திக்கொள்ளப்படுகிற நபர்களுக்கு இச்சட்டத்தின் கொடுக்கப்பட வேண்டிய எல்லா ஊதியத்தையும் கொடுப்பதற்கும் பொறுப்பாளியாவார்.

ஊதிய கால வரம்பு:-

ஊதியம் வழங்கும் பொறுப்பை ஏற்றுள்ளவர் முதலில் ஊதியம் வழங் குவதற்கான ஊதியக் காலத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். ஆனால் ஊதியக் காலம் என்பது ஒரு மாதத்திற்கு மேற்படக்கூடாது.

ஊதியம் வழங்கும் காலம்:-

ஒரு இரயில்வே நிறுவனம், தொழிற்சாலை, தொழில் நிறுவனம் இவற்றில் வேலைக்கமர்த்தப் பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை; 1000 தொழிலாளர்களுக்கு குறைவாக இருப்பின் ஊதிய காலத்தின் கடைசி தினத்திற்கு பின்னர் ஏழாவது தினம் முடியும் முன்னரும், 1000 தொழிலா ளர்களுக்கு மேற்பட்டிருப்பின், ஊதிய காலத்தின் கடைசி நாளிலிருந்து 10 நாட்கள் முடியும் முன்னரும் வழங்கப்பட வேண்டும்.

வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளிக்கு அவர் ஈட்டிய ஊதியத் தொகை, வேலை நீக்கம் செய்யப்பட்ட நாளிலிருந்து இரண்டாவது வேவை நாள் முடிவதற்குள் வழங்கப்பட வேண்டும்.

வேலை நாட்களில்தான் ஊதியம்
கொடுக்கப்படவேண்டும்.

ஊதியம் வழங்க வேண்டிய முறை:

ஊதியம் நடைமுறைச் செலாவணியிலுள்ள நாணயங்களாகவோ அல்லது தாள்களாகவோ அல்லது இரண்டும் கலந்தோ கொடுக்கப்படலாம்.

ஊதியத்திலிருந்து அனுமதிக்கப்
பட்ட பிடித்தங்கள்

இச்சட்டத்தினால் அங்கீகரிக்கப்படாத எந்தப் பிடித்தமும் ஊதியத்தில் செய்யக்கூடாது. வேலைக்கமர்த்தப் பட்டுள்ள நபர் வேலைக்கமர்த்துபவ ருக்குச் செலுத்தும் எந்தத் தொகையும் இச்சட்டத்தின்படி ஊதியப் பிடித்தமாகக் கருதப்படும். ஆனால், மாநில அரசு இயற்றியுள்ள விதிகளுக்கு உட்பட்டு வருடாந்திர உயர்வு, அல்லது பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்படுதல், கீழ் பதவிக்கு இறக்குதல், குறைந்த ஊதியத்திற்கு பதவி இறக்கம் செய்தல், தற்காலிகமாக வேலையிலிருந்து நீக்கி வைத்தல் ஆகிய தண்டனைகள் போதுமான காரணங்களுக்காக விதிக்கப்படும்போது ஊதியம் இழப்பு இச்சட்டதின் கீழ் ஊதியப் பிடித்தமாகக் கருதப்பட மாட்டாது.

தொழிலாளி ஒருவருடைய ஊதியத்திலிருந்து இச்சட்டத்தின் விதிகளை அனுசரித்துத்தான் தொகைகள் பிடித்தம் செய்து கொள்ளப்பட வேண்டும். அத்தொகைகள் பின்வரும் பிரிவுகளைச் சார்ந்தவையாக மட்டுமே இருக்கலாம்: அவையாவன:-

அ. அபராதத் தொகைகள்.

ஆ. வேலைக்கு வராமலிருந்ததற்காக கழித்துக்கொள்ளப்படுகின்ற தொகைகள்

பொருட் சேதம்:-

வேலையில் அமர்த்திக் கொள்ளப் பட்டவரிடம் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்காகவே ஒப்படைக்கப்பட்ட பொருள்களுக்கு ஏற்பட்ட சேதம் அல்லது நஷ்டம் அல்லது அவர் கணக்குக் கொடுக்கவேண்டிய பணத்தின் நஷ்டம் அவரது கவனக்குறைவினால் அல்லது தவறுதலினால் நேரடியாக ஏற்பட்டதெனச் சொல்லக் கூடியதாயிருந்தால் மேற்படி சேதம் அல்லது நஷ்டத்துக்காகப் பிடித்துக் கொள்ளப்படுகின்ற தொகைகள்.

வீட்டு வசதி:-

நடைமுறையிலுள்ள சட்டப்படி ஏற்படுத்தியுள்ள முதலாளி அல்லது அரசு அல்லது வீட்டு வாரியம் முதலி யவைகளினால் ஏற்படுத்திக் கொடுத் திருக்கிற வீட்டு வசதிக்காகப் பிடித்தம் செய்து கொள்ளப்படும் தொகைகள் (அது அரசு அல்லது வாரியம்) அல்லது மாநில அரசிதழில் மாநில அரசின் சார்பாக குறைந்த அளவில் அரசு உதவியுடன் குறைந்த வாடகைக்கு வீடு வழங்கும் தொழில் புரிகின்ற நிறுவனம்.

(2) மாநில அரசு (அல்லது அதன் சார்பில் நியமிக்கப்படுகின்ற அலுவலர்) அதிகாரம் கொடுக்ககூடிய வகையில் முதலாளி ஏற்படுத்திக் கொடுத்த வசதிகளுக்காகவும் சேவைகளுக்காக வும் கழித்துக் கொள்ளப்படும் தொகைகள்.

விளக்கம்:-


இந்த உட்பிரிவில் "சேவை" என்று கூறப்படுகின்ற சொல்லில் தொழிலின் பொருட்டு வழங்கப்படுகிற ஆயுதங்களையும், மூலப் பொருள்களையும் கொடுப்பது என்பது அடங்காது.

முன்பணம்:

முன் பணமாகக் கொடுக்கப்பட்ட எந்த தொகையும் (பிரயாணப்படி அல்லது வாகனப்படிகள் உள்பட) அதற்குறிய வட்டி; அல்லது அதிகப்படியாகக் கொடுக்கப்பட்ட ஊதியத்தைச் சரிக்கட்டுவதற்காகக் கழித்துக் கொள்ளப்படும் தொகைகள்.

கடன்கள்:

மாநில அரசு அங்கீகாரம் வழங்கியுள்ள தொழிலாளர் நல நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ள கடன்கள் அவைகளுக்குறிய வட்டிகள் ஆகியவைகள்.

வீடு கட்ட கடன்

மாநில அரசு அங்கீகரித்த வீடுகட்டுவதற்கு உரிய கடன்கள், அல்லது மற்ற திட்டங்களுக்கு வழங்கப்பட்ட தொகைகளும் அவைகளுக்கு உரிய வட்டியும் பிடித்தம் செய்து கொள்ளப்படும் தொகைகள்.

நீதிமன்ற உத்தரவு:-

நீதிமன்றத்தின் ஆணையினால்
அல்லது அத்தகைய உத்தரவினைப் பிறப்பிப்பதற்குத் தகுதி பெற்றுள்ள அதிகாரச் சபையின் உத்தரவினால் பிடித்தம் செய்து கொள்ளப்பட வேண்டிய தொகைகள்,

வருமானவரி

வேலைக்கமர்த்தப்பட்டவர் செலுத்த வேண்டிய வருமான வரியை அவரது ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யலாம்.'

வருங்கால வைப்பு நிதி


வருங்கால வைப்பு நிதிக்காகப் பெறப்படும் சந்தாக்கள் அல்லது அந்- நிதியிலிருந்து கொடுத்துள்ள கடன் களை திருப்பிப் பிடிப்பதற்கான பிடித் தங்கள்.

கூட்டுறவு

மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கூட்டுறவு சங்கங்களும் அல்லது இந்திய தபால் அலுவலகங்களால் நிர்வகிக்கப்படும் காப்பீட்டுத் திட்டத்திற்கும் செலுத்த வேண்டிய தொகைகளைப் பிடித்தம் செய்தல்.

ஆயுள்காப்பீடு:-

தொழிலாளியின் ஒப்புதல் பேரில் ஆயுள் காப்பீட்டுக் கழகத்திற்குச் செலுத்த வேண்டிய பிரிமியத் தொகை இந்திய அரசின் கடன் பத்திரங்களுக்கான தொகை, அரசினால் ஏற்படுத்தப்பட்டுள்ள சேமிப்புத் திட்டப்படி தபால் அலுவலக சேமிப்பு வங்கியில் செலுத்தவேண்டிய தொகை.

தொழிற்சங்க சந்தா

செக் ஆப் மூலமாக ஊதியத்திலிருந்து தொழிற்சங்கத்திற்கான சந்தாவை பிடித்தம் செய்தல்.

- உண்மை இதழ், 01-15.7.1998

வியாழன், 27 ஏப்ரல், 2023

தொழிலாளர் துன்பம் தீர பெரியார் சொல்லும் வழி!

 

பெரியாருடைய தொழிலாளர் பற்றிய சிந்தனைகளை அறிந்து கொள்ளுமுன், பெரியாருக்குத் தொழிலாளர் தொடர்பாகவும் பொது உடைமைக் கருத்துகள் பற்றியும் உள்ள தொடர்புகளை நாம் அறிந்து கொள்ளுவது நலமாகும். பெரியார் ரஷ்யப் புரட்சி 1917 இல் தோன்றுவதற்கு முன்னரே தொழிலாளர் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவராக இருந்திருக்கின்றார், உடையார்பாளையம் பருக்கலில் 03.06.1973இல் நிகழ்த்திய சொற்பொழிவில் இது தொடர்பான தம்முடைய நடைமுறைகளைக் குறித்துப் பேசி இருக்கின்றார்.

“தொழிலாளர்களைத் தொழிலில் பங்குதாரராக ஆக்க வேண்டுமென்ற கொள்கையை என் வியாபாரத்தில் 1900த்தில் - அதாவது 73 ஆண்டுகளுக்கு முன் அனுசரித்தேன். என் கடையில் இருந்த மூன்று பேர்களைக் கஷ்டக் கூட்டாளிகளாக ஆக்கினேன். அவர்களுக்கு மாதம் தலா ரூ.10-8-7 சம்பளமாகும். வியாபாரத்திற்கு முதல் ரூபாய் பத்தாயிரம். இலாபத்தில் முதலாளி என்கிற எனக்கு ஒரு பாகம். என் முதலுக்கு ஒரு பாகம். கஷ்டக் கூட்டாளிகள் மூவருக்கும் ஒரு பாகம் என்று அமல்படுத்தினேன். அதாவது என் கடையில் வரும் லாபத்தை 49 பாகமாகப் போட்டு ஒரு பாகம் சாமி கணக்குக்கும், 16 பாகம் எனக்கு பணப் பொறுப்புக்காகவும், 16 பாகம் - முதலீட்டுப் பணத்திற்காகவும், மீதி. 16 பாகம் கஷ்டக் கூட்டாளிகளுக்கு என்றும் பிரித்துக் கொடுத்தேன்.” 

தொழிலாளர் பிரச்சினை தீர இதுவே சிறந்த வழி என அப்போது முதல் கூறிவருகின்றேன்.

ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

தொழிலாளர்களின் சிந்தனைக்கு…!


மே 1-15,2022

தந்தை பெரியார்

சுயமரியாதை இயக்கமோ அல்லது திராவிடர் கழகமோ ஆற்றும் பொதுத் தொண்டுக்கு ஏதாவது முக்கியமிருப்பின், அது பாடுபட்டுழைத்துப் பலனறியாது தவிக்கும் ஏமாந்து வாழும் தொழிலாளிகளுக்கும் தாழ்த்தப்பட்ட  சமுதாயத்தினருக்கும் நல்வாழ்வை ஏற்படுத்துவதைத் தவிர வேறொன்றுமில்லை என்பதை எடுத்துக்காட்ட-வேயாகும்.
இதைத் தவிர, எங்களுக்குப் பட்டம், பதவி, தேர்தல், ஓட்டு முதலியவைகளில் கவலையும் கருத்தும் வைத்து அதற்காகத் தொழிலாளர் தயவைப் பெற அவர்களிடத்திலே வீண் படாடோப வார்த்தைகளைக் கூறி ஏமாற்றி, கட்சியின் அரசியல் ஆதிக்கத்துக்காக அவர்களது சக்தியைப் பயன்படுத்திக் கொள்ளும் சூதோ, சூழ்ச்சியோ எங்களிடத்தில் கிடையாது.

பொதுவாக தொழிலாளர்களும் அவ்வித ஏமாற்று வலைகளில் சிக்கி மயங்கி தம் வாழ்வைக் கெடுத்துக் கொள்பவர்களாக இருக்கிறார்களேயன்றி, சிறிதாவது அறிவு வளர்ச்சி பெற்றவர்களாக ஆவதற்கு முயற்சி செய்வது கிடையாது. தொழிலாளர் அவ்வித அறிவு பெற்றுவிட்டால், எந்த அரசியல் கட்சிக்காரர்தான் அவர்களை ஏமாற்ற முடியுமென்று கேட்கிறேன். உங்களது ஒன்றுபட்ட சக்தியை நீங்கள் உணர்ந்து விட்டால் உங்களை எதிர்க்க யாரால் முடியும்? ஆனால் இன்று தொழிலாளர்களாகிய நீங்கள் அரசியலின்பேரால் பலவிதப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒற்றுமையின்றி வாழ்கின்றீர்கள். காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சோசியலிஸ்ட், தீவிரவாதி என்று இவ்வாறாகப் பிரிக்கப்பட்டு உங்களுக்குள்ளாகவே ஒருவரோடு ஒருவர் பகைத்துக் கொள்வதும், அடிதடிகளில் இறங்குவதும், போட்டிச் சங்கங்கள் அமைப்பதும், காட்டிக்கொடுப்பதும் ஆன காரியங்கள்தான் இன்றைய தொழிலாளர் இயக்கமாக இருந்துவருகிறது.

இன்றைய தொழிலாளர் தலைவர்கள் எனப்படுவோரின் தொண்டும், இப்படியாகக் கட்சிப் பிரிவினைகளை உண்டாக்கித், தமது சுயநலத்துக்காகப் பயன்படுத்திக் கொள்வதாக இருக்கிறதேயன்றி, இதுவரை இவ்விதக் கட்சிப் போட்டிகளால் தொழிலாளர்களுக்கு இம்மியளவாவது பயனேற்பட்டதென்று எவராவது கூற முடியுமா? என்று கேட்கிறேன். இவ்வளவுக்கும் காரணம் தொழிலாளர்கள் அறிவு வளர்ச்சி பெறாததேயாகும். எனவேதான் திராவிடர் கழகத்தாராகிய நாங்கள், அரசியலில் வீணாகக் காலங்கழிப்பதைவிட மக்களுக்கு வேண்டிய அறிவுத் துறையிலே பாடுபட்டு வருவதன் கருத்தாகும். தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பாடுபட்டுழைத்தும் பலனறியாத பாட்டாளி மக்களுக்கும் பொதுவாக நம் நாட்டு மக்களுக்கு அறிவு, மானம், ரோஷம், உண்டாக்கும் ஸ்தாபனந்தான் திராவிடர் கழகமென்பதும், அதன் வேலைத் திட்டங்-களுமாகும்.

சமுதாயத்திலே புகுத்தப்பட்டு வேரூன்றியுள்ள பார்ப்பனிய மூடப்பழக்க வழக்கங்களுக்கு நீங்கள் பாடுபட்டுச் சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பகுதியைப் பாழாக்குகின்றீர்களே? இதிலிருந்து நீங்கள் விடுபட வேண்டாமா? இதைத்தான் திராவிடர் கழகம் கூறுகிறது. சமுதாய அமைப்பிலே புதியதோர் மாற்றம் வேண்டும். அந்த மாறுதலை அடிப்படையாகக் கொண்ட நல்லாட்சி வகுக்க வேண்டும்.
சமுதாய அமைப்புப் பற்றி நம் மக்களுக்குச் சற்றாவது தெளிவு உண்டா? பாமர மக்களை நான் கூறவில்லை. பெரிய பெரிய பண்டிதர்கள், புலவர்கள், ராஜ தந்திரிகள் முதல் பண்டார சன்னதிகள் வரைதான் தெரியுமா? _ சமுதாய அமைப்பு எப்படியிருக்க வேண்டுமென்று.

ஒருவன் பறையனாகவும், ஒருவன் சூத்திரனாகவும், ஒருவன் பார்ப்பனனாகவும் இருக்க வேண்டுவதும், இதன் காரணமாய் ஒரு கூட்டம் மட்டும் பாடுபடாமல் உல்லாச வாழ்வு வாழ்வதும் சரியான சமுதாய அமைப்பு என்று எவராவது கூறமுடியுமா? கூறமுடிய-வில்லை என்றால், அந்த அமைப்பை மாற்றியமைக்க வேண்டுவதுதானே இன்றைய முக்கியப் பொதுப் பணியாகும்? அதிலே நாம் கவலை செலுத்தாமல், பதவி, -பட்டம், ஓட்டுகளில் மட்டும் பாடுபடுவது மானரோஷமுள்ள காரியமாகுமா?
சமுதாயம் வேறு; அரசியல் வேறு என்று கூறுவது தவறாகும். சமுதாய அமைப்பைச் சரிவர நடத்துவதுதானே அரசாங்கத்தின் கடமையாகும். சமுதாய அமைப்புக்கு வழிவகை அமைப்பதே மதத்தின் தத்துவமாகும். முஸ்லிம்களும், கிறிஸ்துவர்களும் தங்களது மதத்தை அவ்விதமே கையாண்டு வருகின்றனர். ஆனால், நமது மதமிருக்கிறதே, அது நமது சமுதாய அமைப்பின் முன்னேற்றத்திற்கு முற்றிலும் மாறுபட்டதாயிருக்கிறது. நம் அரசாங்கம் என்பதோ மக்களுக்காக அல்லாமல், அரசாங்கத்தாருக்காக மக்கள் வாழவேண்டிய தலைகீழ் தத்துவத்தில் நாம் உழன்று வருகிறோம். எனவே, நாமும் நமது நாடும் முன்னேற வேண்டுமானால் சமுதாயத் துறையிலே பெரும் மாறுதலை உண்டாக்க வேண்டும். அதன் பின்னரே நல்ல ஆட்சியும் ஏற்படுத்த முடியும். அவ்வாறில்லாது இன்றைய சமுதாய அமைப்பைக் கொண்டே, யார் ஆட்சிசெய்தாலும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள தொல்லைகள் ஒரு சிறிதும் நீங்குவதற்கு வழிவகையிருக்க முடியாது.

இவ்வித சமுதாயப் புரட்சியை உண்டாக்கு வதில் தீவிரப் பங்கு கொள்ள வேண்டியவர்கள் வாலிபர்களேயாகும். அவ்விதத் தன்மையில் பொன்மலை திராவிடர் வாலிபர் கழகத்தார் மேலும் தமது தொண்டினை ஆற்ற வேண்டும். அதற்கு இங்குள்ள தொழிலாளர்கள் பெரிதும் ஆதரவு தரவேண்டும். கம்யூனிஸ்ட்களும், சோஷியலிஸ்ட்களும் மறைமுகமாகப் பார்ப்பனியத்துக்கு ஆதரவு தரும் சூழ்ச்சியை விட்டொழிக்க வேண்டும். கழகக் கொள்கைக் கிணங்க அதாவது பார்ப்பனியத்தை, மூடப் பழக்க வழக்கங்களை தொழிலாளர் இடையேயிருந்து அகற்றுதல் என்பதை விட்டுவிட்டு, வேறு என்னதான் தலைகீழாக நின்றாலும் அவர்களுக்கு நிரந்தர உரிமை ஏற்படாது. வேண்டுமானால் தொழிலாளர் பேரால் சுயநல வேட்டையும் அல்லது தத்தமது அரசியல் ஆதிக்க வேட்கையையும் பூர்த்தி செய்து கொள்ள முடியுமேயல்லாது பயன் ஒன்றும் காணமுடியாது. இதை இனியாவது கம்யூனிஸ்ட்களும், சோசியலிஸ்ட்களும், தீவிரவாதிகள் எனப்படுவோரும் உணர வேண்டும்.

தொழிலாளரும் இவர்கள் விஷயத்தில் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். அரசியல் கட்சிக்காரர்களுக்குத் தொழிலாளர்கள் தங்கள் சக்தியை வீணாக்குவதிலும், குறிப்பாகத் தேசியத்தின்பேரால் ஏமாறுவதிலும் நீங்கள் உஷாராயிருக்க வேண்டும். இல்லையேல் தொழிலாளத் தோழர்களே! எதிர்காலத்தில் மேலும் மேலும் நீங்கள் பலவிதத் தொல்லைகளுக்கு உள்ளாக நேரிடும். தவிர, இனிப் பொதுத் தொண்டில் கூட நமக்குள் கட்சி பிரதிகட்சி, வீண் எதிர்ப்புகள் இருத்தல் கூடாது. சகோதரத்துவ முறையிலேயே தொண்டாற்ற வேண்டும். என்னைக் கேட்டால் ஒரே மேடையில் ஒரு ராமாயணக்காரரும், ஒரு பெரிய புராணக்காரரும், காங்கிரஸ்காரரும், நாமும் கலந்து பேசவேண்டும். பார்ப்பனரும் நம் மேடையில் பேசவேண்டும் அவரவர்கள் கருத்தை எடுத்துக் கூறவேண்டும். மக்கள் அதைக் கேட்கவேண்டும். சிந்தித்து அவரவர்களின் முடிவுக்குச் செயலாற்ற வேண்டும். அந்த அளவுக்கு மக்களிடத்திலே மனமாறுதல் ஏற்பட வேண்டுமென்பதே எனது எண்ணம்.
(22.5.1949ஆம் நாளில் பொன்மலை திராவிடர் கழக 8ஆம் ஆண்டு விழாவில் தந்தை பெரியார் ஆற்றிய பேருரையிலிருந்து…)

வியாழன், 9 மார்ச், 2023

தொழிலாளர் நலனுக்கான புதிய சட்டவிதிகள் உருவாக்கம் : ஆலோசனைக் கூட்டம்

 

சென்னை,அக்.28- மாறிவரும் காலச் சூழலுக்கு ஏற்ப பல்வேறு தொழிலாளர் நலச் சட்டங்களில் மாற்றங்கள் மேற்கொள்வது, தொழிலாளர் நல னுக்கான புதிய சட்ட விதிகள் உருவாக்குவது குறித்து அமைச்சர் சி.வி. கணேசன் தலைமையில் நடைபெற்ற தொழிலாளர் ஆலோசனை வாரிய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தொழிலாளர் நலத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில், 60ஆவது மாநில தொழிலாளர் வாரிய ஆலோ சனை கூட்டம்,தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலவாரிய கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்றது.

இதில், தொழிலாளர் நலத்துறை செயலர் முகமது நசிமுதீன், மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைவர், கைத்தறித்துறை இயக்குநர், துணிநூல் துறை இயக்குநர், தொழி லாளர் துறை ஆணையர் அதுல் ஆனந்த், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை இயக்குநர் எம்.வி. செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும், தென்னிந்திய வேலையளிப் போர் கூட்டமைப்பு, தமிழ்நாடு தோட்டத் தொழிலாளர்கள் சங்கம், தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம், தமிழ்நாடு சிறு மற்றும்குறுந்தொழில்கள் சங்கம், அனைத்திந்திய உற்பத்தியாளர் அமைப்பு, அம்பத்தூர் தொழிற் பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள், தொமுச பேரவை (எல்பிஎப்), தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன், அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ், இந்திய தொழிற்சங்கங்களின் மத்திய அமைப்பு (சிஅய்டியு), இந்து மஸ் தூர்சபா, விசிக ஆகிய தொழிற்சங் கங்களின் பிரதிநிதிகள்,சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.சுதர்சனம்,க.செல்வராஜ், சபா.ராஜேந்திரன்,தமிழரசி ஆகியோரும் தொழிலாளர் துறையின் மூத்த அதிகாரிகளும் பங்கேற்றனர்.

வேலையளிப்போர் மற்றும் தொழி லாளர்களால் எதிர்கொள்ளப்படும் சிக்கல்கள், பல்வேறு நிறுவனங்கள், தொழில்கள், தொழிற்சாலைகள், தோட்ட நிறுவனங்கள் ஆகியவற்றின் செயல்பாட்டில் எழும் பிரச்சினைகள், தற்போது மாறிவரும் காலச்சூழலுக்கு ஏற்ப பல்வேறு தொழிலாளர் நலச் சட்டங்களில் மாற்றம் செய்தல், தொழி லாளர் நலன் மற்றும் தொழில்அமைதி காக்க புதிய சட்ட விதிகள்உருவாக்குதல் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப் பட்டது. இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இணையதள வசதி

தொழிலாளர் துறை வெளியிட்ட மற்றொரு செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசின் தொழிலாளர் துறையின்கீழ், 18 அமைப்புசாரா தொழி லாளர் நலவாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. அமைப்புசாரா தொழி லாளர்கள் பதிவு செய்யும் முறையை எளிமைப்படுத்தவும், நலத்திட்ட உதவி களை விரைவாக பெறவும் இணையதள வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதள குறை தீர்வு வசதியை அமைச்சர் சி.வி.கணேசன் நேற்று (27.10.2022) தொடங்கி வைத்தார்.

திமுக அரசு பொறுப்பேற்ற பின், இணையதளம் வாயிலாக 10 லட்சத்து 81,137 அமைப்புசாரா தொழிலாளர்கள், 18 அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் பதிவு செய்துள்ளனர். இதில் 6 லட்சத்து 71,355 பயனாளிகளுக்கு ரூ.524.99 கோடி நலத்திட்ட உதவியாக வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 18 அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியங்களில் இதுவரை 40 லட்சம் தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். இணையதள குறைதீர் வசதி மூலம்,தொழிலாளர்கள் பதிவு, புதுப்பித்தல், உதவித்தொகை கோரும் விண்ணப்பங்களின் மீதான நிலையை தெரிந்து கொள்ளவும், குறுஞ்செய்தி மூலம் குறைதீர் நிலையை அறிந்து கொள்ளவும் வசதி செய்யப் பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

வெள்ளி, 3 மார்ச், 2023

வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் தொழிலாளர் துறை அறிவிப்பு

 

சென்னை மார்ச் 3  'வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை அரசுக்குத் தெரிவிக்காத நிறுவனங்களின் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, தொழிலாளர் நலத்துறை எச்சரித்துள்ளது. 

தொழிலாளர் உதவி ஆணையர் சுபாஷ்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலர் நசிமுதின், முதன்மை செயலர் அதுல் ஆனந்த், இணை ஆணையர் விமலநாதன் ஆகியோர் உத்தரவுப்படி, நிறுவனங்கள், தங்களிடம் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்கள் பற்றிய விவரங்களை, அரசுக்குத் தெரிவிக்க வேண்டும். வெளிமாநிலத் தொழிலாளர்கள் பணி நிலைமை மற்றும் நலன்களை முறைப்படுத்தவும், பேரிடர் காலங்களில் அவர்களுக்கு உதவி அளிக்கவும் வேண்டியுள்ளது. அதேநேரம், அத்தொழிலாளர்கள், ஒப்பந்ததாரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதால், நிறுவனம் தரும் ஊதியம் அவர்களுக்கு கிடைப்பதில்லை என்ற புகாரும் உள்ளது. 

மேலும், பள்ளி செல்லாக் குழந்தைகளைக் கண்டறிய வருவாய், காவல், தொழிலாளர் துறை, குழந்தை தொழிலாளர் தடுப்புப் பிரிவு ஆகியவை, உணவகம், கடை, மருத்துவமனை உள்ளிட்டவற்றில் கூட்டாய்வு செய்கின்றன. இந்த காரணங்களுக்காக வெளி மாநில தொழிலாளர்களின் விவரங்கள் தேவைப்படுகின்றன. அதனால், வேலை வழங்கும் நிறுவனங்கள், தங்களிடம் பணிபுரியும் வெளிமாநிலத் தொழிலாளர்களின் பெயர், ஆதார் எண், மொபைல் போன் எண், சொந்த மாநில முகவரி ஆகியவற்றறை https://labourtn.go.in/ism  என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாத நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

திங்கள், 6 பிப்ரவரி, 2023

திராவிடர் தொழிலாளர் அணி கலந்துரையாடல் கூட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியல் (30.01.2023)

 


 

தருமபுரி மாவட்டம்

பெ.கோவிந்தராஜ் - மாவட்டத்தலைவர்

இரா.சேட்டு - மாவட்ட செயலாளர்

மு.சிசுபாலன் - மாவட்ட துணைத் தலைவர் 

அரங்க - கோவிந்தராஜ் - மாவட்ட துணை செயலாளர்

தே.சத்தியராஜ் - மாவட்ட அமைப்பாளர்

ஓசூர் மாவட்டம்

பாலகிருஷ்ணன் - மாவட்ட தலைவர்

பா.வெற்றிச்செல்வன் - மாவட்ட செயலாளர் 

மு.கோவிந்தன் -  மாவட்ட அமைப்பாளர்

கிருஷ்ணகிரி மாவட்டம்

சிவ.மனோகர் - மாவட்ட தலைவர்

சின்ராசு - மாவட்ட செயலாளர்

செ.ப.மூர்த்தி - மாவட்ட அமைப்பாளர்

சிவகங்கை மாவட்டம்

கே.வி.ஜெயராமன் - மாவட்ட தலைவர் 

தமிழ்வாணன் - மாவட்ட செயலாளர்

சேலம் மாவட்டம்

கே.எம்..கணேசன் - மாவட்ட தலைவர் 

ஜெ.கருணாகரன் - மாவட்ட செயலாளர்

பி.கதிர்வேல் - மாவட்ட அமைப்பாளர்

ஆத்தூர் மாவட்டம்

மு.மோகன்ராசு - மாவட்ட தலைவர்

மு.சங்கர் - மாவட்ட பொருளாளர்

பெ.ராசா - மாவட்ட அமைப்பாளர்

பெ.கூத்தம் - மாவட்ட செயலாளர்

தஞ்சாவூர் மாவட்டம்

செ.ஏகாம்பரம் - மாவட்டதலைவர்

த.சந்துரு - மாவட்ட செயலாளர்

எம்.முருகேசன் - மாவட்ட துணைத்தலைவர்

ஆர்.ராதாகிருஷ்ணன் - மாவட்ட துணைச்செயலாளர்

மு.சுரேசு - மாவட்ட அமைப்பாளர்

போட்டோ மூர்த்தி - மாவட்ட பொருளாளர்

திண்டுக்கல் மாவட்டம்

பெ.மகேந்திரன் - மாவட்ட தலைவர்

ஆனந்தமுனிராசன் - மாவட்ட செயலாளர்

சி.ராதாகிருஷ்ணன் - மாவட்ட துணைத்தலைவர்

கருப்பசாமி - மாவட்ட துணைச்செயலாளர்

தாராபுரம் மாவட்டம்

அ.அழகப்பன் - மாவட்ட தலைவர்

மல்லிகா செல்வரசு - மாவட்ட செயலாளர் 

திருப்பத்தூர் மாவட்டம்

எம்.ஆனந்தன் - மாவட்ட தலைவர்

ஆர்.பன்னீர்செல்வம் - மாவட்ட செயலாளர் 

கே.மோகன் - மாவட்ட அமைப்பாளர்

காஞ்சிபுரம் மாவட்டம்

ஆ.வெ. முரளி - மாவட்ட தலைவர் 

ச.வேலாயுதம் - மாவட்ட செயலாளர் 

கி.இளையவேள் - மாவட்ட பொருளாளர்

ராணிப்பேட்டை மாவட்டம்

எ.ஞானப்பிரகாசனம் - மாவட்ட தலைளர் 

ந.ரமேஷ் - மாவட்ட செயலாளர் 

இ.ஆறுமுகம் - மாவட்ட பொருளாளர்

ஈரோடு மாவட்டம்

பி.பி, கணேசன் - மாவட்ட தலைவர் 

செ.காமராசு - மாவட்ட செயலாளர் 

க.மணிகண்டன் - மாவட்ட பொருளாளர் 

இரா.பார்த்திபன் - மாவட்ட துணைத்தலைவர் 

வீ.தேவராஜ் - மாவட்ட துணைத்தலைவர் 

இரா.பாஸ்கர் - மாவட்ட துணைச்செயலாளர்

கோபிசெட்டிபாளைம் மாவட்டம்

பி.காசிவிஸ்வநாதன் - மாவட்ட தலைவர் 

எம். நந்தகுமார் - மாவட்ட செயலாளர்

புதுக்கோட்டை மாவட்டம்

சாமி.இளங்கோவன் - மாவட்ட தலைவர் 

அ.பத்மாநாபன் - மாவட்ட செயலாளர்

வேலூர் மாவட்டம்

பெ.தயாளன் - மாவட்ட தலைவர்

அறந்தாங்கி மாவட்டம்

சித்ரவேல் - மாவட்ட தலைவர்

கோவை மாவட்டம்

எஸ்.ஆனந்தசாமி - மாவட்ட தலைவர்

ஆர். வெங்கடாசலம் - மாவட்ட செயலாளர் 

முத்துமாலையப்பன் - மாவட்ட பொருளாளர்

திருச்சி மாவட்டம்

எம்.தமிழ்மணி - மாவட்ட தலைவர் 

பிரிட்டோமேரி - மாவட்ட செயலாளர் 

நேதாஜி - மாவட்ட துணைத்தலைவர் 

மணிவேல் - மாவட்ட துணைச்செயலாளர்

தேனி மாவட்டம்

சுருளி  - மாவட்ட தலைவர் 

செந்தில் - மாவட்ட செயலாளர்

மணப்பாறை மாவட்டம்

சி.எம்.எஸ்.ரமேஷ் - மாவட்ட தலைவர்

பாலமுருகன் - மாவட்ட செயலாளர் பொய்கைப்பட்டி

வடசென்னை மாவட்டம்

துரை.ராவணன் - மாவட்ட தலைவர்

மு.முருகன் - மாவட்ட செயலாளர்

சுமதிகணேசன் - மாவட்ட பொருளாளர் 

தென்சென்னை மாவட்டம்

ச.மாரியப்பன் - மாவட்ட தலைவர் 

ந.ராமச்சந்திரன் - மாவட்ட செயலாளர்

ர. அன்சர் - மாவட்ட அமைப்பாளர்

கி.சரவணன் - மாவட்ட துணைச்செயலாளர்

அ.திருமலை - மாவட்ட துணைத்தலைவர்

தாம்பரம் மாவட்டம்

ம.குணசேகரன் - மாவட்ட தலைவர் 

சண்.சரவணன் - மாவட்ட செயலாளர்

மணிகண்டன் - மாவட்ட அமைப்பாளர்

திருவள்ளூர் மாவட்டம்

கி.ஏழுமலை - மாவட்ட தலைவர்

இரா.அசோக்குமார் - மாவட்ட செயலாளர் 

ஜெகத். விஜயகுமார் - மாவட்ட பொருளாளர்

த.ஸ்டீபன் மாவட்ட அமைப்பாளர்

திருச்சி மண்டலம்

முபரக்அலி - மண்டல தலைவர் 

பாச்சூர் அசோகன்- மண்டல செயலாளர்

கரூர் மாவட்டம்

ராஜாமணி - மாவட்ட அமைப்பாளர் 

அரியலூர் மாவட்டம்

மதியழகன் - மாவட்ட தலைவர்

இளவரசன் - மாவட்ட செயலாளர்

டி.கருப்புசாமி - மாவட்ட அமைப்பாளர்

கன்னியாகுமரி மாவட்டம்

ச.கருணாநிதி - மாவட்ட அமைப்பாளர்

யுவானீஸ்-செயலாளர், அமைப்பு சாரா தொழிலாளரணி

மதுரை மாவட்டம்

செல்வம் - மாவட்ட அமைப்பாளர் 

போக்குவரத்துக்கழகம் - தலைவர் - மகேஷ்

பொதுச் செயலாளர் - ரகுராமன்

பொருளாளர் - முத்துக்கருப்பன்

காரைக்குடி மாவட்டம்:

சேகர் - எஸ்இடிசி செயலாளர்

தலைவர் - சூரியமூர்த்தி

இராமநாதபுரம் மாவட்டம்

க.விஜயகுமார் - மாவட்ட அமைப்பாளர்

புதுச்சேரி மாவட்டம்

வீர.இளங்கோவன் - மாநில தலைவர் 

கே. குமார் - மாநில செயலாளர்

கடலூர் மாவட்டம்

க.சேகர் - மாவட்ட தலைவர்

தமிழரசன் - மாவட்ட அமைப்பாளர்

த.மோகன் - மாவட்ட செயலாளர்

சிதம்பரம் மாவட்டம்

பி.ஆறுமுகம் - மாவட்ட அமைப்பாளர்

விருத்தாச்சலம் மாவட்டம்

பழனிச்சாமி (வேப்பூர்) - மாவட்ட அமைப்பாளர்

கும்பகோணம் மாவட்டம்

சோழபுரம் த.ஜில்ராஜ் - மாவட்ட தலைவர்

வலங்கைமான் தி.க.தினேஷ்குமார் ச.தலைவர்

உமையாள்புரம் கண்ணன் - செயலாளர் 

குமாரமங்கலம் த.சங்கர் - துணை செயலாளர்

திருநாகேஸ்வரம் சிவகுமார்- அமைப்பாளர்

சனி, 28 ஜனவரி, 2023

திராவிட தொழிலாளர் கழக ஆலோசனைக் கூட்டம்

 

தமிழர் தலைவர் தலைமையில் திராவிட தொழிலாளர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டம் 30.1.2023 அன்று சென்னை பெரியார் திடலில் சிறப்பாக நடத்துவது பற்றிய ஆலோசனைக் கூட்டம் மாநில செயலாளர் மு.சேகர் தலைமையில், அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால், திராவிட தொழிலாளர் கழகம் மற்றும் பெரியார் கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் சங்க பொறுப்பாளர்களான தாம்பரம் ப.முத்தையன், குணசேகரன், மதுரை சிவகுருநாதன், வெ.மு.மோகன், தி.செ.கணேசன், செ.ர.பார்த்தசாரதி, அம்பத்தூர் இராமலிங்கம், க.சுமதி, மா.இராசு மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். அனைவரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்தனர் (சென்னை பெரியார் திடல், 23.1.2023).


ஞாயிறு, 31 அக்டோபர், 2021

ஏழைகள் கண்ணீர் (தொழிலாளர்)

 



             July 31, 2021 • Viduthalai

07.08.1932 - குடிஅரசிலிருந்து...

தற்காலத்தில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியினாலும் வேலையில்லா திண்டாட்டத்தினாலும் மிகுந்த துன்பத்திற்கு உள்ளாகி பரிதவிக்கும் மக்கள் ஏழை மக்களே யாவார்கள்அதிலும் தொழிலாளர்கள் படும் துயரத்தைச் சொல்லத் தரமன்றுஒவ்வொரு யந்திரசாலைகளிலும், தொழிற்சாலைகளிலும் வேலையாட்களைக் குறைத்துக் கொண்டே வருவதன்மூலம் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் வேலையற்றவர்களாக வெளியேறுகின்றனர்.

நமது நாட்டுத் தொழிலாளர்கள் பெரும்பாலும்அநேகமாகஎல்லோருமே தினச் சம்பளம் பெறுகின்றவர்களாயிருந்தாலும்வாரச்சம்பளம் பெறுகின்றவர்களாயிருந்தாலும்மாதச் சம்பளம் பெறுகின்றவர்களாயிருந்தாலும்அவர்கள் அந்தக் கூலியைக் கொண்டு ஜீவனஞ் செய்கின்றவர்கள் தான் என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை.

இதைத் தவிர அவர்களுக்கு வேறு பூதிதியோரொக்கப் பணமோ இல்லைஅநேகர் குடியிருக் கவும் சொந்த குடிசைஇல்லாமல்குடிக்கூலிக்கு வாழ்ந்து வருபவர்கள்இத்தகைய நிலையில் உள்ளவர்களைத் திடீரென்று வேலையும் இல்லையென்று வீட்டிற்குப் போகச் சொல்லிவிட்டால்அவர்களின் கதி என்னாவது என்று கேட்கின்றோம்எங்கும் பணப் பஞ்சம் மக்களை வாட்டுகிற காலத்தில் அவர்கள் தங்கள் பெண்டுபிள்ளைகளைக் காப்பாற்றுவது எப்படி?

இன்று பணக்காரர்களோ நிலச்சுவான் தார்களோமுதலாளிகளோ மற்றும் யாரா யிருந்தாலும் அனைவரும் சவுக்கியம் அனுபவிப்பதற்குக் காரணமாய் இருப்பவர்கள் ஏழைத் தொழிலாளர்கள் நாட்டில் தொழில்கள் வளர்ச்சி அடைவதற்கும்வியாபாரம் வளர்வதற்கும்காரணமாய் இருப்பவர்கள் ஏழைத் தொழிலாளர்கள் இருந்தும் அவர்கள் நிலை என்னஇருக்க டமில்லாமலும் உடுக்க உடையில்லாமலும்உண்ண உணவில் லாமலும்பெண்டு பிள்ளைகளுடன் பட்டினிக் கிடந்து நோயால் வருந்தி பரிதவிப்பதுதான் அவர்கள் கண்ட பலன்.

இன்று ஒவ்வொரு ரயில்வே கம்பெனிகளிலும் ஆட்களைக் குறைத்து வருவதுடன் இன்னும் குறைப்பதற்கும் திட்டம் போட்டு வருகிறார்கள்து போலவே அரசாங்கத்தின் அதிகாரத்திலுள்ள தொழிற்சாலைகளிலும் னிப்பட்ட முதலாளிகளின் ஆதிக்கத்திலுள்ள தொழிற்சாலைகளிலும் ஆட்களை குறைத்து வருகிறார்கள்ஆனால் இக் கம்பெனிகளிலும் தொழிற்சாலை களிலும் உள்ள ஆயிரம்இரண்டாயிரம் என்று சம்பளம் பெறும் உத்தியோகத்தர்களைக் குறைக்கக் காணோம்ஏழைத் தொழிலாளர்களின் வயிற்றில் மண்போட்டு பெரிய உத்தியோகதர்களின் பணப் பெட்டிகள் நிரப்பப் படுகின்றன.

தொழிலாளிகளைக் குறைப்பதைக் காட்டிலும்தொழில் நேரத்தைக் குறைத்துவிடுமுறை நாளை அதிகப்படுத்தி சம்பளத்தைக் குறைத்துக் கொடுப்பதன் மூலம் தொழிலாளர்களுக்கு வேலையில்லா திண்டாட்டம் ஏற்படுவதைத் தற்கால சாந்தியாக நிவர்த்திக்கலாமென்று தொழிலாளர்களின் தலைவர் கள் சிலர் கூறும் யோசனை சிறந்த யோசனையே யாகும்ந்த யோசனைக்கு ஏனைய தொழிலாளர் ளும் சம்மதிப்பதாகவும் அறிகின்றோம்இவ்வாறு செய்வதனால் தொழிலாளர்கள் அரை வயிற்றுக் கஞ்சியாவது குடித்துக் கொண்டிருக்க முடியும்இந்த முறையையாவதுதொழிலாளர்களைக் குறைத்துதான் ஆக வேண்டுமென்ற நிர்பந்தத்திற்கு உள்ளாகும் கம்பெனிகளும் அரசாங்கமும்முதலாளிகளும் கைப் பற்றுவார்களானால் ஒருவாறு தற்சமயம் அவர்கள் துயரம் நீங்கும் என்றே கூறலாம்ஆனால் இது நிறைவேறுமா என்றுதான் கேட்கிறோம்.

சுயராஜ்யத்திற்கு என்றும் சுதேசிக்கு என்றும் பொது பாஷைக்கு (இந்திஎன்றும் கூச்சல் போட்டு தேசாபிமானிகளாக விளங்குகின்றவர்கள் யாரும் ஏழைத் தொழிலாளர்கள் விஷயத்தில் ஒன்றும் கவலை எடுத்துக் கொள்ள காணோம்அரசாங்கமும் அவர்கள் துயரை நீக்க முன்வரக் காணோம்இந்த நிலையிலேயே தொழிலாளர் துயரமும் வேலையில்லாத் திண்டாட்டமும் வளர்ந்து கொண்டே போகுமானால் கடைசியில் பெரும் ஆபத்தா முடியுமென்று எச்சரிக்கை செய்கின்றோம்.

ஆகையால் இப்பொழுதே முதலாளிகளும்மாகாண அரசாங்கங்களும்இந்திய அரசாங்கமும்தொழிலாளர்களின் துன்பத்தை நீக்கத் தாமதமின்றி முயற்சி எடுத்துக் கொள்ளுமாறு வேண்டுகிறோம்.