முதல்வர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முதல்வர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 12 ஜூன், 2023

100 நாள் வேலை திட்டம் : முதலமைச்சர் நேரில் விசாரிப்பு


 25

திருச்சி, ஜூன் 10- திருச்சியில் 100 நாள் வேலை திட்ட பெண்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாடி னார். அப்போது, கூலி எவ்வளவு கிடைக்கிறது? எத்தனை நாட்கள் வேலை செய்கிறீர்கள்? என்று அந்த பெண்களுடன் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச் சியாக உரையாடினார்.

திருச்சியில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (9.6.2023) ஆய்வு மேற்கொண்டார். அப்போது, லால்குடி அருகே உள்ள ஆலங்குடியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கால்வாய் வெட்டும் பணிகளை செய்துகொண்டிருந்த பெண்க ளிடம் மு.க.ஸ்டாலின் கலந்துரையா டினார்.

அப்போது, முதலாவதாக அந்த பெண்களிடம் மு.க.ஸ்டாலின் ஊர் பெயரை கேட்டார். அதற்கு பெண்கள் தங்களுடைய ஊர் பெயர் ஆலங்குடி என்று கூறினார்கள். கூலி எப்படி கிடைக்கிறது? தொடர்ந்து, 100 நாள் வேலை திட்ட பெண்களிடம், மு.க.ஸ்டா லின் உரையாடினார்.

அந்த உரையாடல் வருமாறு:-

மு.க.ஸ்டாலின் கேள்வி:- கூலி, சம்பளம் எல்லாம் எப்படி கிடைக்கிறது?

பெண்கள் பதில்:- ரூ.285 கொடுக்கிறார்கள்.

மு.க.ஸ்டாலின்:- பணம் எப்படி கொடுக் கிறார்கள்? வங்கி மூலம் கொடுக்கிறார் களா?

பெண்கள்:- வங்கி மூலமாக வருகிறது.

மு.க.ஸ்டாலின்:- உங்களுடைய சூப்பர் வைசர் யார்? அவர் மூலமாக பணம் வருகிறதா?

பெண்கள்:- ஆமாம்... 

மு.க.ஸ்டாலின்:- எத்தனை நாட்கள் வேலை செய்கிறீர்கள்?

பெண்கள்:- தொடர்ந்து வேலை செய்கி றோம்.

மு.க.ஸ்டாலின்:- தொடர்ந்து என்றால் எத்தனை நாட்கள் என்று சொல் லுங்கள்?

பெண்கள்:- 100 நாட்கள் வேலை செய்கிறோம் சார்.

மு.க.ஸ்டாலின் (சிரித்தவாறு):- 100 நாட்கள் எப்படி வேலை செய்யமுடியும்!

 பெண்கள்:- உங்களை இதுவரை நேரில் பார்த்ததே இல்லை சார். இப்போது, உங்களை பார்த்ததில் ரொம்ப சந் தோசம். 

மு.க.ஸ்டாலின்:- ஆட்சி திருப்தியாக இருக்கிறதா?

பெண்கள்:- ரொம்ப சந்தோசமாக இருக்குது சார்.

மு.க.ஸ்டாலின்:- ஏதாவது குறை இருந் தால் சொல்லுங்கள்.

பெண்கள்:- குறை எதுவும் இல்லை. நினைத்ததை நிறைவேற்றிவிட்டீர்கள் சார். மிகவும் சந்தோசம். சொன்னதை எல்லாம் செய்துகொண்டிருக்கிறீர்கள்.

மு.க.ஸ்டாலின்:- எத்தனை பேர் இங்கு வேலை செய்கிறீர்கள்?

பெண்கள்:- 75 பேர் வேலை செய்கிறோம்.

மு.க.ஸ்டாலின்:- இந்த வேலையை எத் தனை நாளாக செய்கிறீர்கள்?

பெண்கள்:- இன்று (நேற்று) முதல் செய் கிறோம்.

மு.க.ஸ்டாலின்:- இன்றைக்கு தான் ஆரம்பித்தீர்களா? ஏற்கெனவே எங்கு வேலை செய்தீர்கள்?

பெண்கள்:- பக்கத்துல இருக்கும் இடத் தில் வேலை பார்த்தோம்.

மு.க.ஸ்டாலின்:- சரிம்மா, சந்தோசம்., வரட் டுமா....

இவ்வாறு உரையாடல் நடந்தது. இதையடுத்து, பள்ளி சென்று திரும்பு வதற்கு மாணவர்களுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் தங்களது கிராமங் களில் பேருந்து வசதி இல்லை, வீடு கட்டுவதற்கு இட வசதி தரவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கை களை அந்த பெண்கள் உள்பட விவசாய தொழிலாளர்கள் மு.க.ஸ்டாலினிடம் முன்வைத்தனர். அந்த கோரிக்கைகளை அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்து விட்டு, நிறைவேற்றி தருவதாக மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.


புதன், 1 மார்ச், 2023

தமிழ்நாட்டை அடுத்த கட்டத்துக்கு உயர்த்த முதலமைச்சர் சூளுரை

 

கோவை, மே 20  தமிழ்நாட்டின் பொருளாதாரம் பல்முனைப் பொருளா தாரமாக மாற வேண்டும், அதுதான் எனது இலக்கு என தொழில் துறையினரிடையே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங் களைச் சேர்ந்த தொழில் துறையினரை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோவையில் நேற்று (19.5.2022) நேரில் சந்தித்து கலந்துரையாடினார். கூட்டத்தில், தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் வரவேற்றார். தொடர்ந்து 3 மாவட்டங்களைச் சேர்ந்த தொழில் துறையினரிடையே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப்பொறுப்புக்கு வந்து, இதுவரை 5 முதலீட்டாளர்கள் மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உயர்த்தும் அரசினுடைய லட்சியத்தை அடைய, கோவையின் பங்களிப்பு மிக முக்கியமானதாக அமைய வேண்டும்.

அறிவுசார் ஆராய்ச்சி பூங்கா

தமிழ்நாட்டில் திறன்மிக்க மனிதவளத்தை மேலும் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஓர் அறிவுசார் பொருளாதாரத்தை உருவாக்குவது என்ற தமிழ்நாடு அரசின் தொலைநோக்குப் பார்வையை செயலாக்கும் விதமாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ), தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்), தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் (டான்சிட்கோ) போன்ற அரசு பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து மாநிலத்தில் இருக்கக்கூடிய பல்கலைக்கழகங்கள் தங்களின் வளாகங்களில் ஆராய்ச்சிப் பூங்காக்களை நிறுவ ஊக்குவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தோம். அதன்படி, அறிவுசார் ஆராய்ச்சிப் பூங்கா ஒன்று கோவை பாரதியார் பல் கலைக்கழகத்தில் அமைக்கப்படும்.

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, இதுவரை ரூ.69,375 கோடிஅளவுக்கு முதலீடுகளும், 2 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய வகையில் 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாடு தொடர்ந்து தொழில் வளர்ச்சிப் பெற்று அகில இந்திய அளவில் முன்னணி மாநிலமாக திகழ வேண்டும்.

தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் புத்தொழில் வளர்ச்சிக்கு வழிகோலும் விதமாக 3 மண்டல அளவிலான புத்தொழில் மய்யங்கள் அமைக்கப்படும். ஈரோட்டில் மண்டல புத்தொழில் மய்யம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புதிய மேம்பாட்டு முயற்சிகள்

மேற்கு மண்டல மாவட்டங்களில் இயற்கை இழைகளின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பாரம்பரியமான ஜவுளிகளின் ஏற்றுமதி அதிகளவில் உள்ள போதிலும், உலகளவில் பல்வேறு துறைகளில் தொழில்நுட்ப ஜவுளிகளுக்கான தேவை மிக வேகமாகவும், சீராகவும் அதிகரித்து வருகிறது. எனவே,இவ்வாறான மதிப்புக்கூட்டு ஜவுளிகளின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான புதிய மேம்பாட்டு முயற்சிகளை மேற்கொள்ள தொழில் துறையினர் முன்வர வேண்டும்.

உலகம் மின்னணு சாதனங்களின் பயன்பாட்டில் மூழ்கி உள்ளது. சிப்' என அழைக்கப்படும் செமி-கண்டக்டர் இல்லாத மைக்ரோ எலெக்ட்ரானிக் சாதனமே இல்லை என்று சொல்லலாம். உலகளவில் மிகப்பெரிய மின்னணு உற்பத்தி நிறுவனங்களும் தங்களது சிப்' தேவைக்காக சீனா, தைவான் போன்ற ஒருசில நாடுகளை நம்பியிருக்க வேண்டிய நிலைஏற்பட்டிருக்கிறது. எனவே, இந்தச்சூழலை நன்கு பயன்படுத்தி தமிழ்நாட்டில் சிப் உற்பத்திக்கான முயற்சிகளை மேற்கொண்டு, மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு தொழில் துறையினர் பங்களிப்பினை மேலும் அதிகரிக்க வேண்டும்.

பலமுனை பொருளாதாரம்

தமிழ்நாட்டின் பொருளாதாரம் பல்முனைப் பொருளாதாரமாக மாற வேண்டும் என்பதுதான் என் இலக்கு. வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை தொழில் துறையினர் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வர்த்தகத்தில் ஏற்படும் மாற்றங்களை உள்வாங்கி செயல்பட வேண்டும்.

உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் பொருளாதார வளர்ச்சி இவை மூன்றும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை. இவை மேம்பட்டால், ஒரு மாநிலத்துக்கு ஒட்டுமொத்தமான வளர்ச்சி தானாக வந்து சேரும். இவை மூன்றையும் வலுப்படுத்துவதற்கான வழிகளை இது போன்ற சந்திப்புகளின் மூலமாகத்தான் பெற முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.