வாரியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாரியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 22 மார்ச், 2023

பத்திரிகை நல வாரியம் உருவாக்கம் - செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் குழு அமைப்பு

 

சென்னைடிச. 4- பத்திரிகை யாளர்களின் நலன் காக் கும் வகையில் பத்திரிகை யாளர் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளதுசெய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலை மையில் குழுவையும் அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தித் துறை செயலாளர் மகேசன் காசிராஜன் வெளியிட்ட அரசாணையில் கூறியி ருப்பதாவது:

உழைக்கும் பத்திரிகை யாளர்களுக்கு வழங்கப் பட்டு வரும் அனைத்து திட்டங்களையும் ஒருங் கிணைத்து செயல்படுத்து வதுடன்நல வாரிய உதவித் தொகை கள்நலத்திட்ட உதவிகள் அளிக்கும் வகை யில் பத்திரிகையாளர்கள் நல வாரியம் அமைக்கப் படும் என்று சட்டப் பேரவையில் செய்தித் துறை அமைச்சர் கடந்த செப்.6ஆம் தேதி அறிவித் தார்.

இதையடுத்துபத்திரி கையாளர் நல வாரியம் அமைத்து ஆணையிடப்படுகிறதுநலிவுற்ற பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகளு டன்பின்வரும் நலத் திட்ட உதவிகள் நல வாரி யம் மூலம் வழங்கப்படும்குறிப்பாக கல்வி உதவித் தொகையாக 10ஆம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகள், 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்பெண் குழந்தைகள், 11ஆம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகளுக்கு ரூ.1,000 வழங்கப்படும்.

மேலும், 12ஆம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகள், 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மகன்மகள்முறையான பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு ரூ.1,500, விடுதியில் தங்கி பட்டப் படிப்பு படிப்பவர்களுக்கு ரூ,1,750,முறையான பட்ட மேற்படிப்பு பயில் பவர்களுக்கு ரூ.2,000, விடுதியில் தங்கிப் படிப் பவர்களுக்கு ரூ.3,000, தொழில்நுட்ப பட்டப் படிப்புக்கு ரூ.2,000, விடுதி யில் தங்கிப் படிப்பவர் களுக்கு ரூ.4,000, தொழில் நுட்ப பட்ட மேற்படிப்பு படித்தால் ரூ.4,000, விடு தியில் தங்கிப் படித்தால் ரூ.6,000, அய்டிஅய்பாலி டெக்னிக் படிப்பவர்க ளுக்கு ரூ.1,000,விடுதியில் தங்கி படித்தால் ரூ.1,200 வழங்கப்படும்.

திருமண உதவித் தெகை

இதுதவிரதிருமணத் துக்கு ரூ.2,000, மகப்பே றுக்கு ரூ.6,000, கருக் கலைப்பு,  கருச்சிதைவுக்கு ரூ.3,000, கண் கண்ணா டிக்கு ரூ.500, இயற்கை மறைவு உதவித்தொகை யாக ரூ.50 ஆயிரம்இறுதி நிகழ்வுக்கு உதவித் தொகையாக ரூ.5ஆயிரம் வழங்கப்படும்.

மேலும்பத்திரிகையா ளர் நல வாரிய உதவித் திட்டங்களை பரிசீலித்து செயல்படுத்த செய்தித் துறை அமைச்சரை தலை வராகவும், 7 பேரை அலு வல் சார்ந்த உறுப்பினர் களாகவும்,6 பேரை அலு வல் சாரா உறுப்பினர்க ளாகவும் கொண்ட குழு அமைக்கப்படும்.

விளம்பரக் கட்டணத்தில்..

நல வாரியத்துக்கு நிதி ஆதாரம் திரட்டஅரசு விளம்பரங்களுக்கான விளம்பர கட்டணத்தில் 1 சதவீத தொகைநல வாரியத்துக்கு வழங்கப் படும்நடைமுறையில் உள்ள பத்திகையாளர் ஓய்வூதிய பரிசீலனைக் குழு கலைக்கப்பட்டுநல வாரிய உதவித் திட்டங் களுக்கு அமைக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்டு புதிய பரிசீல னைக் குழு அமைக்கப் படும்இந்த நடவடிக்கை கள் அனைத்தும் நீதிமன்ற உத்தரவின்படிஅமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு ஊடக மன் றத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாகும்இவ் வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

சனி, 2 ஜூலை, 2022

தமிழ்நாடு வணிகர் நலவாரிய உறுப்பினர்களுக்கு குடும்ப நலநிதி ரூ.3 லட்சமாக உயர்வு


சென்னை, ஜூன் 7  தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணை: வணிகர் நல வாரிய உறுப்பினர்களின் வாரிசுதாரர்களுக்கு குடும்பநல உதவித் தொகைரூ.50 ஆயிரமாக வழங்கப்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து, தற்போது வணிகர் நல வாரிய உறுப்பினர்களின் வாரிசு தாரர்களுக்கு குடும்ப நல உதவித் தொகைரூ.1 லட்சமாக வழங்கப்பட்டு வருகிறது. 

திருச்சியில் 5.5.2022 அன்று நடந்த 39ஆவது தமிழக வணிகர் விடியல் மாநாட்டில் முதலமைச்சர், தமிழ்நாடு வணிகர் நல வாரிய உறுப்பினர்கள் உயிரிழக்கும் பட்சத் தில் அவர்களது குடும்பத்திற்கு தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தால் தற்போது வழங்கப்பட்டு வரும் குடும்பநல உதவித்தொகைரூ.1 லட்சத்தில் இருந்துரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிப்பு செய்துள்ளார். 

அதனடிப்படையில், வணிகர் நல வாரியத்தில் நிரந்தர உறுப்பி னராக பதிவு பெற்றுள்ள வணி கர்களுக்கு நிபந்தனைகளுக்குட் பட்டு குடும்ப நல உதவித்தொகை உயர்த்தி வழங்க ஆணை வழங்கு மாறு வணிகவரி ஆணையர் அரசை கேட்டுக்கொண்டார்.

அதன்படி, வணிகர் நல வாரியத்தில் நிரந்தர உறுப்பினராக பதிவு பெற்று குறைந்தது ஓர் ஆண் டாவது உறுப்பினராக இருத்தல் வேண்டும். 

உறுப்பினர் மதிப்புக் கூட்டுவரி அல்லது சரக்குகள் மற் றும் சேவைகள் வரியில் பதிவு பெற் றிருப்பின் முறையாக மாதாந்திர நமுனா தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும். உறுப்பினர் எவரும் வேறு எந்த நல வாரியத்திலும் பதிவு பெற்று நல உதவித் திட்டம் எதுவும் பெற்றிருத்தல் கூடாது. உறுப்பி னரின் மரணம் தற்கொலையாக இருத்தல் கூடாது. 

மேலும், தமிழக வணிகர் விடியல் மாநாட்டில் முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பினை செயல் படுத்தும் விதமாக வணிகர் நல வாரியத்தில் நிரந்தர உறுப்பினராக உள்ள வணிகர்கள் இறக்க நேரிட் டால் அவர்களின் குடும்பத்திற்கு நிபந்தனைகளுக்குட் பட்டு, குடும்ப நல உதவித்தொகைரூ.1 லட்சத்தில் இருந்துரூ.3 லட்சமாக உயர்த்த அரசு முடிவு செய்து ஆணையிடுகிறது.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.