புதன், 22 மார்ச், 2023

தமிழ்நாட்டில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைப்பு அரசு ஆணை வெளியீடு

 

சென்னைபிப்.25 தமிழ்நாட்டில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைத்து அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது

2021-_2022ஆம் ஆண்டிற்கான சட்டமன்றக் கூட்டத்தொடரில் 5.9.2021 அன்று நடைபெற்ற செய்தி மற்றும் விளம்பரம் தொடர்பான மானியக் கோரிக்கையின் மீதான அறிவிப்புகளில்செய்தித்துறை அமைச்சர்தமிழ்நாட்டில் முதன் முறையாகஉழைக்கும் பத்திரிகையா ளர்களை முன்களப் பணியாளர் களாக முதலமைச்சர்அறிவித்து பெருமை சேர்த்துள்ளார்.

அதனடிப்படையில்உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப் பட்டு வரும் அனைத்து திட்டங் களையும் ஒருங்கிணைத்து செவ் வனே செயல்படுத்துவதோடுநல வாரிய உதவித்தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

அரசாணை வெளியீடு

அமைச்சரின் அறிவிப்பிற் கிணங்கஉழைக்கும் பத்திரிகையா ளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து திட்டங்களையும் ஒருங் கிணைத்து செவ்வனே செயல்படுத் துவதோடுநலவாரிய உதவித் தொகை கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் பத்திரிகை யாளர் நலவாரியம் ஒன்றை உருவாக்கி ஆணை வெளியிடப்பட்டது.

பத்திரிகையாளர் நலவாரியத் திற்கு வரப்பெறும் விண்ணப்பங் களை பரிசீலனை செய்துபயனா ளிகளைத் தேர்வு செய்துநலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு பத்திரிகை யாளர் நலவாரியக் குழு ஒன்றை அமைத்துஅதற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து அரசு ஆணையிடுகிறது.

தலைவர்உறுப்பினர்கள்

செய்தித் துறை அமைச்சர் அதன் தலைவராக இருப்பார்நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர்வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர்வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர்,

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலா ளர்தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை ஆணை யர்நில நிர்வாகத் துறை ஆணையர்செய்தி மக்கள் தொடர் புத் துறை இயக்குநர் (அல்லதுஇந்த அதிகாரிகளால் நியமனம் செய் யப்படும் அலுவலர்ஆகியோர் அலுவல்சார் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

அலுவல்சாரா உறுப்பினர்கள்

தினத்தந்தி குழுமத்தின் பா.சிவந்தி ஆதித்தன்தினகரன் நாளிதழ் ஆசிரியர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ்தி இந்து நாளிதழ் துணை ஆசிரியர் பி.கோலப்பன்தீக்கதிர் நாளிதழ் செய்தியாளர் எஸ்.கவாஸ்கர்புதிய தலைமுறை தொலைக்காட்சி சிறப்பு நிருபர் எம்.ரமேஷ்தி வீக் செய்தி வார இதழின் முதன்மை சிறப்பு நிருபர் லெட்சுமி சுப்பிரமணியன் ஆகி யோர் அலுவல்சாரா உறுப்பினர் களாக செயல்படுவார்கள்.

1.12.2021 அன்று வெளியிட்ட அரசாணையின்படிபத்திரிகை யாளர் ஓய்வூதிய பரிசீலனைக் குழு கலைக்கப்படுவதுடன்பத்திரிகை யாளர் நலவாரிய புதிய நல உதவித் திட்டங்களுக்கு அமைக்கப்படும் இந்த குழுவே பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம் குறித்த மனுக்களையும் பரிசீலிக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக