புதன், 22 மார்ச், 2023

தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில் இசைக் கலைஞர்கள் உறுப்பினர்களாக சேர தடை இல்லை: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

 

சென்னை, ஆக. 11- நாதஸ்வரம், தவில் உள்ளிட்ட இசைக் கலைஞர்கள், கரோனா ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் அமைக்கப்பட்டுள்ளது போல, வாத்திய இசைக் கலைஞர்களுக்கும், பரதநாட்டிய கலைஞர்களுக்கும் தனியாக நலவாரியம் அமைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


இந்த வழக்கிற்கு, தமிழக சுற் றுலா, கலாச்சாரத் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-


இசைக்கருவிகளை இசைக்கும் பாரம்பரிய கலைஞர்களுக்கு பல் வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்பு தரப்படுகிறது. மார்கழி மற் றும் அரசு, தியாகராஜர் ஆராதனை விழாக்கள் உள்ளிட்ட விழாக்களில் அவர்களுக்கு வாய்ப்பு தரப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறையில் இந்த கலைஞர்களுக்கு நிரந்தர சம்பளத்தில் பணி நியமனம் தரப்படு கிறது.


தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர் கள் நல வாரியத்தில் 35 ஆயிரம் 385 கலைஞர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கும் இவர்களின் குடும் பத்தினருக்கும் பல்வேறு நிதி உதவி திட்டங்கள் உள்ளன. விபத்து நிவா ரணம், குழந்தைகளுக்கான கல்வி உதவி, மகப்பேறு நிதி, திருமண உதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட் டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்கள் 58 வயதை கடந்தவு டன் அவர்களுக்கு மாத ஓய்வூதிய மாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது.


கரோனா ஊரடங்கால் பாதிக் கப்பட்டுள்ள, நாட்டுப்புற கலைஞர் கள் நல வாரியத்தில் பதிவு செய் துள்ள 24 ஆயிரத்து 736 பேருக்கு தலா ரூ.1000 நிவாரணம் வழங்கப்பட்டுள் ளது. இரண்டாவது நிவாரண தொகையாக ரூ.1000 ஜூன் மாதம் 26ஆம் தேதி 24 ஆயிரத்து 656 பேருக்கு தரப்பட்டுள்ளது.


அரிதான இசை வாத்தியங்களான சாக்ஸாபோன், மாண்டலின், வீணை, புல்லாங்குழல் போன்றவற்றை இசைப்பவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளதால் இவர்க ளுக்காக தனி நல வாரியம் அமைக்க முடியாது. தெருக்கூத்து கலை நிகழ்ச் சிகளில் பங்கேற்கும் நாதஸ்வரம், தவில், கிளாரினெட், மிருதங்கம், தாள இசைக்கலைஞர்கள், தமிழ் நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர எந்த தடையும் இல்லை. அதனால், இவர்களுக்கு என்று தனி நல வாரி யம் அமைக்க முடியாது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும்.


இவ்வாறு பதில் மனுவில் கூறப் பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி கள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக