செவ்வாய், 10 டிசம்பர், 2019

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 5% உயர்வு



புதுடில்லி, அக். 10- மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை கூடுதலாக 5 சதவீதம் உயர்த்தி வழங்க பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலை மையில் மத்திய  அமைச்சரவை கூட் டம் டில்லியில் நேற்று நடந்தது. இதில், மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக  5 சதவீத அகவிலைப்படி உயர்வை வழங்க ஒப்புதல் அளிக்கப் பட்டது.
இது குறித்து, மத்திய தகவல் ஒளிபரப்பு துறை  அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
மத்திய அரசு ஊழியர்களுக்கு 5 சதவீத கூடுதல் அகவிலைப்படி உயர்வை வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம்,  ஜூலை மாத தவணையான 12 சதவீதத்துடன் சேர்த்து 17 சதவீத அகவிலைப்படியை ஊழியர்கள் பெறுவார்கள். ஒரே நேரத்தில் 5 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இதன் மூலம், 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும் பய னடைவார்கள். இந்த 17 சதவீதம் ஜூலை மாத முன் தேதியை கணக் கிட்டு வழங்கப்படும். இந்த உயர்வால் மத்திய அரசுக்கு ரூ.16  ஆயிரம் கோடி கூடுதலாக செலவாகும்.
மேலும், பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ், ஆண் டுக்கு ரூ.6,000 நிதி உதவி பெற  ஆதாரை இணைப்பதற்கான கெடு நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த கால நீட்டிப்பு, வரும் ரபி பருவ பயிர்காலத்தையொட்டி விவசாயி களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டத்தின் கீழ் ஏற்கெனவே 7 கோடி விவசாயிகள்  ஆண்டுக்கு 3 தவணையாக ரூ.6,000 நிதி உதவி பெற்று பயனடைந்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
அகவிலைப்படி என்பது விலை வாசி உயர்வை சமாளிக்க, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர் களுக்கு வழங்கப்படும் நிதியாகும். இது 7ஆவது ஊதியக் குழுவின் பரிந் துரைகளின் அடிப்படையில் ஒவ் வொரு  ஆண்டும் ஜனவரி, ஜூலை மாதம் நிர்ணயம் செய்யப்படும். கடந்த ஜூலை மாதம் 12 சதவீத அகவிலைப்படி நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது அதில் கூடுதலாக 5 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

- விடுதலை நாளேடு, 10 .10. 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக