புதுடில்லி, பிப்.20 மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதிய தாரர் களுக்கும் 3 சதவீதம் அக விலைப்படி உயர்த்தப்பட்டுள் ளது.
இதன்மூலம், 1.1 கோடி பேர் பயன்பெறுவார்கள். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்ச ரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது:
மத்திய அரசு ஊழியர்களுக் கும், ஓய்வூதியதாரர்களுக்கும் 9 சதவீத அகவிலைப்படி வழங் கப்படுகிறது. கூடுதலாக 3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனால், 48.41 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 62.03 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் பெறுவார்கள்.
அகவிலைப்படி ஜனவரி 1ஆம் தேதி முதல் முன் தேதி யிட்டு வழங்கப்படும். ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரை களின் அடிப்படையில் அக விலைப்படி உயர்வு அளிக்கப் பட்டுள்ளது என்று ஜெட்லி தெரிவித்தார்.
- விடுதலை நாளேடு, 20.2.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக