சென்னை, பிப்.20 தமிழகத்தில் விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட உள் ளதாக பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட் டையன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார் பில் முதலமைச்சர் கோப்பைக் கான மாநில அளவிலான கூடைப்பந்து மற்றும் மேசைப் பந்து விளையாட்டுப் போட்டி தொடக்க விழா டாக்டர் எம்ஜிஆர் விளையாட்டு அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் பள்ளி கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் போட்டிகளை தொடக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர் களிடம் அவர் தெரிவித்தது:
விளையாட்டுத் துறையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அரசு வேலை வாய்ப்புகளில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங் கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதற்காக 24 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, பணி களை மேற்கொண்டுள் ளனர். மேலும் விளையாட்டு வீரர் களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு கல்லூரிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதில் விளையாட்டில் சாதனை புரியும் வீரர்களை அரசு தேர்வு செய்து கல் லூரிகளிடம் பட்டியலை வழங்கும். அந்த பட்டியலின் அடிப்படையில் சிறந்த விளை யாட்டு வீரர்களை கல்லூரி நிர்வாகம் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தங்கும் வசதி, உணவு, கல்லூரிக் கட்டணம் ஆகியவற்றை இலவசமாக அளிக்கும்.
மேலும் மாணவர்களுக்கு சிறந்த பயிற்சியையும் அளிக் கும். இத்திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. இத் திட்டம் பயன்பாட்டுக்கு வந்தால் தமிழகம் விளை யாட்டுத் துறையில் மிகப்பெரிய சாதனையை புரியும் என்றார்.
- விடுதலை நாளேடு, 20.2.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக