விருதுநகர், பிப். 21- 3 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வா தாரமான பட்டாசுத் தொழி லைப் பாதுகாக்க வேண்டும்.
மேலும், விபத்துகளை தவிர்க் கும் வகையில் தேவையான விதிமுறைகளை உருவாக்கிட தமிழக அரசும், பட்டாசு உற் பத்தியாளர்களும் தொழிற்சங் கங்களும் கூட்டாக விவாதித்து முடிவு செய்திட வேண்டும். ஆலை மூடலை கைவிட வேண் டும். உடனே ஆலைகளை திறந்து தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன் அறிக்கை வெளி யிட்டுள்ளார். அந்த அறிக்கை யில் கூறியதாவது : விருதுநகர் மாவட்டம், சிவகாசியைச் சுற்றிலும் 800க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளிலும், அதைச் சார்ந்த உப தொழில்களிலும் சுமார் 3 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
விபத்துகளை தடுத்திட அரசு கொண்டு வந்துள்ள புதிய விதிமுறைகளை எதிர்த்து பட் டாசு உற்பத்தியாளர்கள் பிப்ர வரி 20 முதல் காலவரையற்ற ஆலை மூடலை அறிவித்துள்ள னர். திடீரென ஆலை மூடல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் வேலை இழந்து கடும் பாதிப்புக்குள் ளாகி உள்ளனர். கடந்த 2016 ஜூலை 2 இல் சிவகாசி பைபாஸ் சாலையில் பட்டாசு கடைக்கு அனுமதி வாங்கி விட்டு கடையின் பின்னால் ரசாயன மருந்து குடோன் வைத்திருந்ததால் திடீரென வெடித்துச் சிதறியது. இதில், கடைகள், வீடுகள் இடிந்தன.
இரு சக்கர வாகனங்கள் எரிந்தன. அருகிலிருந்த 4 பேர் உயிரிழந்தனர். அதேபோல், கடந்த அக்டோபர் 20 இல் தேவகி ஸ்கேன் மய்யத்தின் அருகில் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட விபத்தை யொட்டி மருத்துவர் உள்பட 9 பேர் பலியாகினர்.
இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற மது ரைக் கிளை தானாக முன் வந்து வழக்குப் பதிவு செய்தது. தமிழக அரசு, உயிரிழந்தவர் களின் குடும்பத்திற்கு தலா ரூ. 3லட்சம் இழப்பீடு வழங்க இடைக்கால உத்தரவு பிறப் பித்தது. பட்டாசுக் கடை அரு கில் 4 புறமும் 3 மீட்டர் தூரம் எந்த கட்டிடமும் இருக்கக் கூடாது. கடைகளில் பட்டாசு காட்சிப் பொருளாக மட்டுமே வைக்க வேண்டும். ஊருக்கு வெளியே குடோன்கள் அமைத்து பட்டாசுகளை அங்குதான் வைக்க வேண்டும். குடியிருப் புப் பகுதி, பள்ளிக்கூடம், மருத் துவமனைகள், பெட்ரோல் பங்க் ஆகியவற்றிலிருந்து 50 மீட்டர் தள்ளி குடோன் அமைக்க வேண்டும்.
விபத்தினை தவிர்க்க விபத்துத் தடுப்பு உபகரணங் கள் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகளை வெடி பொருள் கட்டுப்பாட்டுத் துறை வகுத்திருப்பதாக கூறப் படுகிறது. மத்திய, மாநில அரசுகளின் பல தவறான கொள் கைகளால் பல தொழில்களை போலவே பட்டாசு தொழிலும் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது. இதனை எதிர்த்திட உற்பத்தியாளர்களும் தொழிலா ளர்களும் ஒன்றுபட்டு போராட வேண்டும். அதேநேரம் வாழ் வதற்குத்தான் வேலையே தவிர சாவதற்கு அல்ல, பாதுகாப் பான சிவகாசி, விபத்தில்லாத பட்டாசுத் தொழில் என்ற முழக்கத்துடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. விபத்து களை தவிர்க்கும் வகையில் தேவையான விதிமுறைகளை உரு வாக்கிட தமிழக அரசும், பட்டாசு உற்பத்தியாளர்களும் தொழிற்சங்கங்களும் கூட்டாக விவாதித்து முடிவு செய்திட வேண்டும். ஆலை மூடலை கைவிட வேண்டும். உடனே ஆலைகளை திறந்து தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-விடுதலை,21.2.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக