4 இடங்களில் நூறு படுக்கை வசதி கொண்ட இஎஸ்அய் மருத்துவமனைகள்
மத்திய அமைச்சர் தகவல்
சென்னை, ஜன.12 தமிழகத்தில் 4 இடங்களில் 100 படுக்கை வசதி களைக் கொண்ட இஎஸ்அய்சி (தொழிலாளர் மாநில ஆயுள் காப்பீட்டுக்கழகம்) மருத்துவ மனைகள் கட்டப்படும் என மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா கூறினார்.
சென்னையில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் திருப்பூர், கன் னியாகுமரி, சிறீபெரும்புதூர், தூத்துக்குடி ஆகிய நான்கு இடங்களில் ரூ.380 கோடி செலவில் நூறு படுக்கை வசதி களைக் கொண்ட இஎஸ்அய்சி மருத்துவமனைகள் கட்டப்பட உள்ளன. இதற்கான நிலத்தை மாநில அரசு ஏற்கெனவே ஒதுக்கிவிட்டது. எனவே, அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த மருத்துவமனைகள் செயல்பாட்டுக்கு வந்துவிடும்.
அதுபோல் திண்டுக்கல், ராணிப்பேட்டை, தாம்பரம், கோவில்பட்டி, ஆம்பூர், ராஜ பாளையம், விருதுநகர் ஆகிய ஏழு ஊர்களில் 30 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவ மனைகள் கட்டப்பட உள்ளன. மேலும் 400 இஎஸ்அய் சிகிச்சை மய்யங்கள், 6 படுக்கை வசதி கள் கொண்ட மருத்துவமனை களாக தரம் உயர்த்தப்பட உள் ளன. இதற்காக ரூ.4 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி இஎஸ்அய்சி-யின் கீழ் பணிபுரியும் தொழிலா ளர்களின் எண்ணிக்கையை ஒரு கோடியாக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
தொழிலாளர்களை இஎஸ் அய்சி திட்டத்தின்கீழ் சேர்க்க வருகிற மார்ச் 31 -ஆம் தேதி வரை தொழில் நிறுவனங் களுக்கு கால அவகாசம் அளிக் கப்பட்டுள்ளது. தென்னிந் தியாவைப் பொறுத்தவரை 1,400 நிறுவனங்களைச் சேர்ந்த 1.9 லட்சம் பேர் இஎஸ்அய்சி-யில் இதுவரை பதிவு செய்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறைந்தபட்ச ஊதியம்
ரூ.300 கட்டாயம்
தேசிய குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின்படி, தொழி லாளர்களுக்கான ஒரு நாள் ஊதியம் ரூ.300 என்பதை, இனி கட்டாயப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில், திறனில்லா சாதா ரண தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் ரூ.300 எனவும், திறன்மிக்க தொழிலா ளர்களுக்கு ரூ. 334 எனவும், உயர் திறன்மிக்க தொழிலாளர் களுக்கு ரூ.364 எனவும் நிர் ணயிக்கப்படும் என்றார் அவர்
-விடுதலை,12.1.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக