வெள்ளி, 6 ஜனவரி, 2017

போக்குவரத்து  ஊழியர்கள் சங்கம் குற்றச்சாட்டு

அகவிலைப்படி நிலுவைத்தொகையை 
வங்கிக் கணக்கில் செலுத்தவில்லை
போக்குவரத்து  ஊழியர்கள் சங்கம் குற்றச்சாட்டு

திண்டுக்கல், ஜன.2 'போக்குவரத்து ஊழியர்களின் அகவிலைப்படி தொகையை வங்கி கணக்கில் செலுத்தாமல் தமிழக அரசு ஏமாற் றுகிறது' என, போக்குவரத்து ஊழியர் முன்னேற்றச் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு நடப்பு விலைவாசி நிலவரங் களை வைத்து ஆறு மாதங் களுக்கு ஒருமுறை அகவிலைப் படி வழங்கப்படுகிறது. இத னால் போக்குவரத்துத் துறை யில் பணிபுரிந்த முதல்நிலை ஊழியர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை பயனடைந் தனர்.

முதல்வர் பன்னீர் செல்வம் கடந்த டிச., 15இல், 'அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான 7 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். டிசம்பர்க்கான அகவிலைப்படி உயர்வு ஜன.,1 லும், ஜூலை முதல் நவம்பர் வரை அய்ந்து மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வு அவ ரவர் வங்கி கணக்கில் செலுத் தப்படும்' எனவும், அறிவித்தார்.

ஆனால், தமிழக போக்கு வரத்துத்துறை ஊழியர்களுக்கு டிசம்பர் மாதத்திற்கான அக விலைப்படி உயர்வு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஜூலை முதல் நவம்பர் வரையான 5 மாதங்களுக்கான அகவிலைப் படி உயர்வு வங்கிக் கணக்கில் செலுத்தப்படவில்லை' என தமிழ்நாடு போக்குவரத்து ஊழி யர்கள் முன்னேற்றச் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் ராஜேந் திரக்குமார் கூறியதாவது: போக் குவரத்து ஊழியர்களுக்கான அகவிலைப்படி ஏற்கனவே ஏப்ரல், மே, ஜூன் மாதங் களுக்கு வழங்கப்படவில்லை. தற்போது 5 மாதங்களுக்கான தொகையும் வங்கிகளில் வரவு வைக்கவில்லை.இதுதவிர விடுப்பு ஒப்படைப்பு ஊதியம், 2016 செப்., 1இல் ஊதிய உயர்வு தாமதம், வருங்கால வைப்பு நிதிக்கடன், ஊதியத்தில் பிடித் தம் செய்யப்படும் காப்பீட்டு தொகை, உடல்நிலைக்கான காப்பீட்டுத் தொகை உள்ளிட்ட 13 வகையான பணப்பலன்கள் முறையாக ஊழியர்களுக்கு கிடைக்கவில்லை.

மேலும் ஊதிய உயர்வுக்கு உண்டான பணப்பலன்கள் வழங்கப்படுவதிலும் பெருமள வில் மோசடி நடந்துள்ளது. இதுகுறித்து அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
-விடுதலை,2.1.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக