சென்னை, ஆக.27_ இணையதளம் மூலமாக, தொழிலாளர் நல வாரியங் களில் பதிவு செய்தல், புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப் படும் என்று தொழிலாளர்-வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் ப.மோகன் அறிவித்தார். சட்டப் பேரவையில் அந்தத் துறையின் மானியக் கோரிக்கை மீது புதன் கிழமை நடைபெற்ற விவா தங்களுக்கு பதிலளித்து அவர் வெளியிட்ட அறி விப்புகள்: அமைப்புசாரா தொழி லாளர் நல வாரியங்களில் பதிவு செய்தல், புதுப்பித்தல், மனுக்களை சமர்ப்பித்தல் போன்ற பணிகளுக்காக மாவட்டத் தலைநகரங் களில் உள்ள சமூக பாது காப்புத் திட்ட அலுவல கங்களுக்கு தொழிலாளர் கள் வந்து செல்ல வேண் டும். அதிலுள்ள சிரமங் களைக் குறைக்கும் வகையில், இந்தப் பணிகள் அனைத்தும் இணையதளம் மூலமாக மேற்கொள்ள வசதி ஏற்படுத்தப்படும். விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த பிறகு, அவற் றின் நிலை குறித்து தொழி லாளர்களின் செல்லிடப் பேசிக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல்கள் தெரி விக்கப்படும். அமைப்புசாரா தொழிலாளர்கள்-வெளி மாநிலத் தொழிலாளர்கள் தங்களை வாரியங்களில் பதிவு செய்வதற்கான வழிமுறைகள், நலத்திட்ட உதவிகள், பதிவு பெற்ற தொழிலாளர்களின் கோரிக்கைகள், புகார்கள் ஆகியவற்றைத் தெரிவிக்க கட்டணமில்லாத தொலைபேசி எண்ணுடன் கூடிய பலமொழி உதவி மையம் உருவாக்கப்படும். தொழிலாளர்களின் பதிவு எண்ணிக்கை கன்னியா குமரி, வேலூர், திரு வள்ளூர் மாவட்டங் களில் அதிகரித்து வருகிறது. எனவே, மனுதாரர்கள் பதிவு செய்ய காத்திருக்கும் நேரத்தை குறைக்கவும், உறுப்பினர்களுக்கு நலத் திட்ட உதவிகளை தாமத மின்றி வழங்கவும் மூன்று மாவட்டங்களிலும் அலு வலகங்கள் ஏற்படுத்தப்படும் என்றார்.
-விடுதலை,27.8.15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக