புதன், 19 ஆகஸ்ட், 2015

‘தொழிலாளர் நல வாரிய கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்’


நாகர்கோவில், ஆக.16 
தொழிலாளர் நல வாரிய கல்வி உதவித் தொகை பெற விண்ணப் பிக்கலாம் என நாகர் கோவில் தொழிலாளர் ஆய்வாளர் (பொறுப்பு) க. ஞானசம்பந்தன் தெரி வித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு தொழி லாளர் நலவாரியத்துக்கு தொழிலாளர் நலநிதி செலுத்தும் தொழிலாளர் களின் குழந்தைகள் பிளஸ் 1 முதல் முதுகலைப் பட்டம் வரை படிப் பவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வாங்குவதற்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது.
பொறியியல், மருத்துவம், சட்டம், விவசாயம், பட்ட தாரி ஆசிரியர் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் ஆகிய கல்விகளின் பட்ட மேற்படிப்பு, பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு, தொழிற் பயிற்சி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு  கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மேலும், 10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வில், கல்வி மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற முதல் 10 மாணவ, மாணவியருக்கு  கல்வி ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.
இத்திட்டங்கள் தொழி லாளர் நல நிதி செலுத்து பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். கல்வி உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை 31.10.2015-க்குள் அனுப்ப வேண்டும்.
நலத்திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண் ணப்பங்களுக்கு செயலர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், தபால் பெட்டி எண். 718, தேனாம்பேட்டை, சென்னை - 6 என்ற முகவ ரிக்கு சுயவிலாசமிட்ட தபால் தலை ஒட்டப்பட்ட உறையுடன் அனுப்பி வைக்க வேண்டும் என்றார் அவர்.
-விடுதலை,16.8.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக