துப்புரவுப் பணியாளர்கள் தினக்கூலியை ரூ.225 ஆக உயர்த்த வேண்டும்
திருமாவளவன் கோரிக்கை
திருமாவளவன் கோரிக்கை
சென்னை, செப்.3_ விடு தலை சிறுத்தைகள் கட்சி யின் தலைவர் தொல்.திரு மாவளவன் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:
மதுரை மாநகராட் சியில் நிரந்தரம் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர் களான பாதாளச் சாக் கடைப் பணியாளர்கள், ஓட்டுநர்கள், மயானப் பணியாளர்கள் உள்பட 4000_-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட 16 கோரிக்கைகளை வலி யுறுத்தி மூன்றாவது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின் றனர்.
வேலூர் மாநகராட்சி யிலும் திடக் கழிவுகளை அப்புறப்படுத்தாததால் சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களின் உடல் நலம் பாதிக்கப்பட்டு வரு கிறது.
அங்கு திடக் கழிவு களை அப்புறப்படுத்த புதிய பராமரிப்பு நடவடிக் கைகளை வலியுறுத்தியும், ஒட்டு மொத்தத் துப்புர வுப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தியும் செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் செப்டம்பர் ஏழாம் தேதி வரை தொடர் பட்டினிப் போராட்டம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வேலூரில் நடைபெறவுள்ளது.
இவ்வாறு மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் துப்புரவுப் பணியாளர் களின் கோரிக்கைகள் குவிந்து கிடக்கின்றன. அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களின் நலன் களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என தமிழக அரசை விடு தலைச் சிறுத்தைகள் கட்சி கேட்டுக்கொள்கிறது.
மதுரை மாநகராட்சி யில் 2006 ஆம் ஆண்டு முதல் தினக்கூலி அடிப் படையில் பணியாற்றும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண் டும். தற்போது வழங்கப் படும் ரூ. 115 தினக்கூலியை அரசு நிர்ணயித்த தொகை யான ரூ. 225 என உயர்த்த வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர் முறையை அறவே ரத்து செய்ய வேண்டும்.
2000_க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். துப்புரவுப் பணியாளர்களின் நலன் களுக்காக மய்ய அரசு அறிவித்த திட்டங்களை முழுமையாக நடை முறைப்படுத்தவேண்டும் போன்ற கோரிக்கைகளை தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு கண்டு தமிழக அரசு உடனே நிறைவேற்ற வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கேட் டுக்கொள்கிறது.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
-விடுதலை,3.9.15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக