பணியின் போது இறக்கும் போக்குவரத்துக் கழக ஊழியரின் வாரிசுக்கு தகுதிக்கேற்ப பதவி: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை, செப்.5_ பணியின் போது இறக்க நேரிடும் அரசுப் போக்கு வரத்துக் கழகத் தொழிலா ளர்களின் வாரிசுதாரர் களுக்கு கருணை அடிப் படையில் பணி வழங்கப் படும் என்று தமிழக அரசு அறிவித்தது. சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நடை பெற்ற போக்குவரத்துக் கழக மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பின்னர், போக்குவரத்துத் துறை அமைச்சர் பி.தங்க மணி வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு: *பணியின்போது இறக்கும் தொழிலாளர் களின் வாரிசுதாரர்களுக்கு பதிவு மூப்பின் அடிப்படையில், கல்வித் தகுதிக்கேற்ப வேலை வழங்கப்படும். அது ஒரு போக்குவரத்துக் கழகத்துக்கு 100 பணியிடங்கள் வீதம் 8 போக்குவரத்துக் கழகங் களுக்கு 800 பணியிடங்கள் என, 2 ஆண்டுகள் பயிற்சி யளித்து நிரப்பப்படும். *பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் ஊழியர்களின் குழந்தை களை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு போக் குவரத்துக் கழகத்திலும் முதல் 10 குழந்தைகளின் மேல் படிப்புக்கான கல்விக் கட்டணம் அரசால் திரும்ப வழங்கப்படும். *போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள், நடத்துநர்கள் உரிமங்களைப் புதுப்பிக்கும் போது செலுத்தும் கட்ட ணம் அரசால் திரும்ப வழங் கப்படும். போக்குவரத்துக் கழகத்தில் ஓர் ஆண்டு விபத்தின்றிப் பணிபுரிந்த ஓட்டுநர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வரும் ரொக்கப் பரிசு ரூ. 1,000 தொகை, ரூ. 1,500 ஆக உயர்த்தி வழங்கப்படும். இத்தொகை, அய்ந்து ஆண்டுகள் விபத்தின்றிப் பணிபுரிந்த ஓட்டுநருக்கு ரூ. 5,000 ஆகவும், 10 ஆண் டுகள் விபத்தின்றிப் பணி புரிந்த ஓட்டுநர்களுக்கு ரூ. 10,000 ஆகவும் நிகழாண்டு முதல் வழங்கப்படும். மேலும், 15 ஆண்டுகள் விபத்தின்றிப் பணிபுரிந்த ஓட்டுநர்களுக்கு வழங்கப் படும் ரூ. 10,000 ரொக்கப் பரிசு இனி ரூ. 15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். 20 ஆண்டுகள் விபத் தின்றிப் பணிபுரிந்த ஓட்டு நர்களுக்கு வழங்கப்படும் ரொக்கப் பரிசு ரூ. 15,000 இனி ரூ. 20,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். 25 ஆண்டுகள் விபத்தின்றிப் பணிபுரிந்த ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் ரொக்கப் பரிசு ரூ. 20,000 இனி ரூ. 25,000 ஆக உயர்த்தி வழங் கப்படும் என்றார்.
- விடுதலை,சனி, 05 செப்டம்பர் 2015
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக