வியாழன், 3 செப்டம்பர், 2015

ஜவஹர் சிறுவர் மன்ற பகுதிநேர ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் உயர்வு


சென்னை,  செப்.3_ சென்னையில் உள்ள ஜவஹர் சிறுவர் மன்றங்களில் பணியாற்றும் பகுதி நேர கலை ஆசிரியர்கள், திட்ட அலுவலர்களுக் கான தொகுப்பூதியம் உயர்த்தப்பட்டுள்ளது.
சட்டப் பேரவையில் இது தொடர்பாக தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:
சென்னையில் ஜவஹர் சிறுவர் மன்றங்களில் பணியாற்றும் பகுதிநேர கலை ஆசிரியர்கள், ஒருங் கிணைப்பாளர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் தொகுப்பூதியம் ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.4 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மாவட்ட, விரிவாக்க மன்றங்களில் பணியாற்றும் கலை ஆசிரியர்கள், திட்ட அலுவலர்களுக்கான தொகுப் பூதியம் ரூ.1,500-லிருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. ஊரக ஜவஹர் சிறுவர் மன்றங்களில் பணியாற்றும் கலை ஆசிரியர்கள், திட்ட அலுவலர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.1,000-_த்திலிருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த் தப்படுகிறது.
இதற்காக ஆண்டுக்கு தொடரும் செலவினமாக ரூ.39 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
-விடுதலை,3.9.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக