வியாழன், 3 செப்டம்பர், 2015

போதிய தூக்கமின்மை மூக்கில் நீர்நோய்த் தொற்றை அதிகரிக்கும்


தூக்கத்தின் அளவு மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை நிர்ணயிக்கவல்லது என்கிறது ஆய்வு.
ஒருநாளைக்கு ஆறுமணி நேரத்துக்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு மூக்கில் நீர் நோய் தொற்றை உண்டாக்கும் வைரஸின் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக ஆய்வின் முடிவுகள் தெரிவித்துள்ளன.
இது குறித்து நடத்தப்பட்ட பரிசோதனையில், 164 ஆரோக்கியமானவர்களின் தூங்கும் பழக்கம் கண்காணிக்கப் பட்டது. அதற்காக அவர்களின் கைகளின் மணிக்கட்டில் தொடுஉணர் கருவி பொருத்தப்பட்டது.
அதன்பிறகு அவர்களின் மூக்கில் மூக்கில் நீர் நோய் தொற்றை தோற்றுவிக்கும் ரினோவைரஸ் அடங்கிய திரவத்தின் சில சொட்டுக்கள் விடப்பட்டன.
இவர்கள் அனைவரும் ஒரு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு கூர்ந்து கண்காணிக்கப்பட்டனர். இவர்களில் எத்தனை பேருக்கு மூக்கில் நீர் நோய்  வந்தது என்று கண் காணிக்கப்பட்டது.
இந்த பரிசோதனையின் இறுதியில் கிடைத்த முடிவுகள் குறைவான தூக்கம் மனிதர்களின் நோய் எதிர்ப்புத்தன்மையின் வீரியத்தைக் குறைக்கிறது என்பதை உறுதி செய்திருக்கின்றன.
இந்தப் பரிசோதனையில் தூக்கத்தின் கால அளவு மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டது. தூக்கத்தின் தன்மை கணக்கில் எடுக்கப்படவில்லை. விட்டு விட்டு தூங்குவது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. மாறாக ஒருவர் ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் தூங்கிறார் என்பது மட்டுமே கணக்கு என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
ஆய்வின் முடிவுகளின்படி, ஒரு நாளைக்கு ஏழு மணி நேரத்துக்கும் அதிகமாக தூங்குபவர்களோடு ஒப்பிடும்போது, ஒரு நாளைக்கு ஆறுமணி நேரத்துக்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு மூக்கில் நீர் நோய் தொற்று பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரியவந்திருக்கிறது.
உறக்கத்துக்கும் உடலின் ஆரோக்கியத்துக்கும் நேரடித் தொடர்பு இருப்பதை பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
இந்த ஆய்வை மேற்கொண்ட முதன்மை ஆய்வாளரான கலிபோர்னிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர் ஏரிக் பிராதர் ஒருவருக்கு மூக்கில் நீர் நோய் தொற்று பிடிக்குமா பிடிக்காதா என்பதை நிர்ணயிக்கும் காரணிகளில் முக்கிய மானதாக போதுமான தூக்கமின்மை காணப்படுகிறது என்று தெரிவித்திருக்கிறார்.
ஒருவரின் வயது, அவர்களுடைய மன அழுத்தத்தின் அளவு, அவர்களின் இனம், கல்வி, வருமானம், ஒருவரின் புகைக்கும் பழக்கம், இவை அனைத்தையும் விட ஒருவர் ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் தூங்குகிறார் என்பதே அவருக்கு மூக்கில் நீர் நோய் தொற்று பிடிக்குமா இல்லையா என்பதை நிர்ணயிக்கும் காரணியாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
தூக்கம் குறைவதால் வேறுபல நோய்கள் ஏற்படும் என்றும் உடல் பருமனடையும் தன்மையும் அதிகரிக்கும் என்றும் ஏற்கனவே மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கிறாரகள்.
மேலும் தடுப்பு மருந்துகளின் பயன்பாட்டையே கூட தூக்கமின்மை மட்டுப்படுத்திவிடக்கூடும் என்று ஏற்கனவே மருத்துவர் எரிக் தெரிவித்திருந்தார். பொதுவாக மனிதர்களுக்கு சராசரியாக ஒரு நாளைக்கு எட்டுமணி நேர ஆழ்ந்த தூக்கம் அவசியம் என்றும், அப்படி தூங்கினால் தான் மனிதர்கள் ஆரோக்கியமாக செயற்பட முடியும் என்றும் மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
அதேசமயம் சிலருக்கு கூடுதல் தூக்கம் தேவைப்படும் என்றும், வேறு சிலரோ குறைவான தூக்கத்துடன் கூட ஆரோக்கியமாக இருக்க வல்லவர்கள் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-விடுதலை,3.9.15

ஜவஹர் சிறுவர் மன்ற பகுதிநேர ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் உயர்வு


சென்னை,  செப்.3_ சென்னையில் உள்ள ஜவஹர் சிறுவர் மன்றங்களில் பணியாற்றும் பகுதி நேர கலை ஆசிரியர்கள், திட்ட அலுவலர்களுக் கான தொகுப்பூதியம் உயர்த்தப்பட்டுள்ளது.
சட்டப் பேரவையில் இது தொடர்பாக தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:
சென்னையில் ஜவஹர் சிறுவர் மன்றங்களில் பணியாற்றும் பகுதிநேர கலை ஆசிரியர்கள், ஒருங் கிணைப்பாளர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் தொகுப்பூதியம் ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.4 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மாவட்ட, விரிவாக்க மன்றங்களில் பணியாற்றும் கலை ஆசிரியர்கள், திட்ட அலுவலர்களுக்கான தொகுப் பூதியம் ரூ.1,500-லிருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. ஊரக ஜவஹர் சிறுவர் மன்றங்களில் பணியாற்றும் கலை ஆசிரியர்கள், திட்ட அலுவலர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.1,000-_த்திலிருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த் தப்படுகிறது.
இதற்காக ஆண்டுக்கு தொடரும் செலவினமாக ரூ.39 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
-விடுதலை,3.9.15

துப்புரவுப் பணியாளர்கள் தினக்கூலியை ரூ.225 ஆக உயர்த்த வேண்டும் திருமாவளவன் கோரிக்கை

துப்புரவுப் பணியாளர்கள் தினக்கூலியை ரூ.225 ஆக உயர்த்த வேண்டும்
திருமாவளவன் கோரிக்கை
சென்னை, செப்.3_ விடு தலை சிறுத்தைகள் கட்சி யின் தலைவர் தொல்.திரு மாவளவன் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:
மதுரை மாநகராட் சியில் நிரந்தரம் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர் களான பாதாளச் சாக் கடைப் பணியாளர்கள், ஓட்டுநர்கள், மயானப் பணியாளர்கள் உள்பட 4000_-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட 16 கோரிக்கைகளை வலி யுறுத்தி மூன்றாவது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின் றனர்.
வேலூர் மாநகராட்சி யிலும் திடக் கழிவுகளை அப்புறப்படுத்தாததால் சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களின் உடல் நலம் பாதிக்கப்பட்டு வரு கிறது.
அங்கு திடக் கழிவு களை அப்புறப்படுத்த புதிய பராமரிப்பு நடவடிக் கைகளை வலியுறுத்தியும், ஒட்டு மொத்தத் துப்புர வுப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தியும் செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் செப்டம்பர் ஏழாம் தேதி வரை தொடர் பட்டினிப் போராட்டம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வேலூரில் நடைபெறவுள்ளது.
இவ்வாறு மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் துப்புரவுப் பணியாளர் களின் கோரிக்கைகள் குவிந்து கிடக்கின்றன. அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களின் நலன் களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என தமிழக அரசை விடு தலைச் சிறுத்தைகள் கட்சி கேட்டுக்கொள்கிறது.
மதுரை மாநகராட்சி யில் 2006 ஆம் ஆண்டு முதல் தினக்கூலி அடிப் படையில் பணியாற்றும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண் டும். தற்போது வழங்கப் படும் ரூ. 115 தினக்கூலியை அரசு நிர்ணயித்த தொகை யான ரூ. 225 என உயர்த்த வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர் முறையை அறவே ரத்து செய்ய வேண்டும்.
2000_க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். துப்புரவுப் பணியாளர்களின் நலன் களுக்காக மய்ய அரசு அறிவித்த திட்டங்களை முழுமையாக நடை முறைப்படுத்தவேண்டும் போன்ற கோரிக்கைகளை தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு கண்டு தமிழக அரசு உடனே நிறைவேற்ற வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கேட் டுக்கொள்கிறது.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
-விடுதலை,3.9.15

சனி, 29 ஆகஸ்ட், 2015

இணையம் மூலம் தொழிலாளர் நல வாரியப் பதிவு: தமிழக அரசு அறிவிப்பு


சென்னை, ஆக.27_ இணையதளம் மூலமாக, தொழிலாளர் நல வாரியங் களில் பதிவு செய்தல், புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப் படும் என்று தொழிலாளர்-வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் ப.மோகன் அறிவித்தார். சட்டப் பேரவையில் அந்தத் துறையின் மானியக் கோரிக்கை மீது புதன் கிழமை நடைபெற்ற விவா தங்களுக்கு பதிலளித்து அவர் வெளியிட்ட அறி விப்புகள்: அமைப்புசாரா தொழி லாளர் நல வாரியங்களில் பதிவு செய்தல், புதுப்பித்தல், மனுக்களை சமர்ப்பித்தல் போன்ற பணிகளுக்காக மாவட்டத் தலைநகரங் களில் உள்ள சமூக பாது காப்புத் திட்ட அலுவல கங்களுக்கு தொழிலாளர் கள் வந்து செல்ல வேண் டும். அதிலுள்ள சிரமங் களைக் குறைக்கும் வகையில், இந்தப் பணிகள் அனைத்தும் இணையதளம் மூலமாக மேற்கொள்ள வசதி ஏற்படுத்தப்படும். விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த பிறகு, அவற் றின் நிலை குறித்து தொழி லாளர்களின் செல்லிடப் பேசிக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல்கள் தெரி விக்கப்படும். அமைப்புசாரா தொழிலாளர்கள்-வெளி மாநிலத் தொழிலாளர்கள் தங்களை வாரியங்களில் பதிவு செய்வதற்கான வழிமுறைகள், நலத்திட்ட உதவிகள், பதிவு பெற்ற தொழிலாளர்களின் கோரிக்கைகள், புகார்கள் ஆகியவற்றைத் தெரிவிக்க கட்டணமில்லாத தொலைபேசி எண்ணுடன் கூடிய பலமொழி உதவி மையம் உருவாக்கப்படும். தொழிலாளர்களின் பதிவு எண்ணிக்கை கன்னியா குமரி, வேலூர், திரு வள்ளூர் மாவட்டங் களில் அதிகரித்து வருகிறது. எனவே, மனுதாரர்கள் பதிவு செய்ய காத்திருக்கும் நேரத்தை குறைக்கவும், உறுப்பினர்களுக்கு நலத் திட்ட உதவிகளை தாமத மின்றி வழங்கவும் மூன்று மாவட்டங்களிலும் அலு வலகங்கள் ஏற்படுத்தப்படும் என்றார்.
-விடுதலை,27.8.15
கைத்தறி நெசவாளர்களுக்கு 10 சதவீத கூலி உயர்வு
சென்னை, ஆக.27_ கைத்தறி நெசவாளர்களுக்கு 10 சதவீத கூலி உயர்வு வழங்கப்படும் என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா அறிவித்தார். சட்டப்பேரவையில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு புதன்கிழமை பதிலளித்து அமைச்சர் கோகுல இந்திரா நேற்று (26.8.2015) வெளியிட்ட அறிவிப்புகள்: தமிழகத்தில் செயல்பட்டுவரும் 1163 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர் களாக உள்ள கைத்தறி நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் 2015 செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அடிப்படைக் கூலியில் 10 சதவீதம் கூலி உயர்வு வழங்கப்படும். கைத்தறி குழுமத் திட்டம்: திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் உள்ள கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், அந்தப் பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் நெசவாளர்களின் திறனை மேம்படுத்தவும் திருச்சியில் மாபெரும் கைத்தறி குழுமத் திட்டம் ரூ.49.50 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த மாநில அரசின் பங்காக ரூ.9.50 கோடி வழங்கப்படும். தமிழ்நாடு கூட்டுறவு பதனிடும் ஆலையின் பதனிடும் திறனை அதிகரிக்க வேண்டி, ஆலையின் இயந்திரங்களை நவீனப்படுத்த அரசு ரூ.5.82 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த ஆலையைப் புதுப்பிக்க ரூ.2 கோடி திட்ட மதிப்பீட்டில் நவீனமயமாக்கும் பணி மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
குறு-சிறு தொழில் நிறுவனங்களின் வசதிக்கு மாநிலத் தொழில் மய்யம்
சென்னை ஆக.27_ குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வசதிக்காக, மாநிலத் தொழில் மையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்தத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் புதன்கிழமை நடைபெற்றது. விவாதங்களுக்கு பதிலளித்து அந்தத் துறையின் அமைச்சர் ப.மோகன் வெளியிட்ட அறிவிப்புகள்: குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான வசதிகள்-சேவைகளை சிட்கோ, டான்சி போன்ற நிறுவனங்களிடம் இருந்து எளிதில் பெறும் வகையில், சென்னை கிண்டியில் மாநிலத் தொழில் மையம் அமைக்கப்படும். டான்சியின் தொழிற்கூடங்களை புதிய பயன் பாட்டுக்கு ஏற்றவாறு திட்டமிட்டு கணினிமய மாக்கப்படும். தமிழகத்தில் இப்போது 15 மாவட்டங் களில் சிட்கோவின் கிளை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. மீதமுள்ள 17 மாவட்டங் களிலும் அவற்றின் கிளைகள் அமைக்கப்படும். திருவண்ணாமலை, சேலம், திருவாரூர், புதுக் கோட்டை மாவட்டங்களில் புதிய தொழிற்பேட் டைகள் அமைக்கப்படும். மேலும், குறைந்தபட்சம் 100 ஏக்கர் பரப்பில் தனியாகவோ, கூட்டு முயற்சியாகவோ தனியார் தொழிற்பேட்டைகளை அமைக்க தொழில் முனைவோர்கள் முன்வந்தால் சிட்கோ நிறுவனம் அவர்களுடன் இணைந்து புதிய தொழிற்பேட்டை களை உருவாக்கும் என்று அமைச்சர் ப.மோகன் தெரிவித்தார்.
அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் ஒன்பது புதிய தொழில் பிரிவுகள்
சென்னை, ஆக.27_ எட்டு அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில், வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் 9 புதிய தொழில் பிரிவுகள் தொடங்கப்படும் என்று தொழிலாளர்-வேலை வாய்ப்புத் துறை அமைச்சர் ப.மோகன் தெரிவித்தார். சட்டப் பேரவையில் அந்தத் துறையின் மானியக் கோரிக்கை மீது புதன்கிழமை நடைபெற்ற விவாதங்களுக்கு அமைச்சர் மோகன் பதிலளித்து வெளியிட்ட அறிவிப்பு வருமாறு: தமிழகத்தில் நடப்பாண்டில் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் வேலைவாய்ப்பைத் தரும் புதிய தொழில் பிரிவுகள் தொடங்கப்படவுள்ளது. அதன்படி, கடலூரில் மெரைன் இன்ஜின் பிட்டர் பிரிவும், கோவையில் டிஜிட்டல் போட்டோ கிராபர், பரமக்குடியில் சூரிய சக்தி சாதனங்கள் பராமரிப்பு-மகளிருக்கென துணி வெட்டுதல்-தைத்தல் பிரிவுகள், போடியில் எலக்ட்ரீசியன் பிரிவும், அரக்கோணத்தில் மொபைல் போன் தொழில் பிரிவும், திண்டுக்கல்லில் ஏ.சி. தொழில் பிரிவும், திருச்சியில் மின்தூக்கி தொழில் பிரிவும், சேலத்தில் வர்ணம் பூசுபவர் தொழில் பிரிவும் தொடங்கப்படும் என்று அமைச்சர் மோகன் அறிவித்தார்.
-விடுதலை,27.8.15
Like   Comment   
  • Godrej Dwu
    Write a comment...
மத்திய அரசு ஊழியர்களுக்கான
7ஆவது ஊதியக் குழு
கால அவகாசம் நீட்டிப்பு 
புதுடில்லி, ஆக.28_ 7ஆவது ஊதியக் குழுவின் கால அவகாசத்தை, வரும் டிசம்பர் மாத இறுதி வரை நீட்டிப்பதற்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
இதுதொடர்பாக ஊதியக் குழுவின் செய்தித் தொடர்பாளர் தனது சுட்டுரையில் (டுவிட்டர்) புதன்கிழமை வெளியிட்ட பதிவில், "7ஆவது ஊதியக் குழுவின் கால அவகாசத்தை, வரும் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை நீட்டிப்பதற்கு மத்திய அமைச் சரவை ஒப்புதல் அளித்துள்ளது' என்று தெரிவித் துள்ளார்.
மத்திய அரசு ஊழியர்களின் ஊதியங் களை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருத்தியமைக்க வேண்டும் என்ற விதிமுறையின்படி, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், அப்போதைய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 7ஆவது ஊதியக் குழுவை அமைத்தது.  குழுவின் அறிக்கையை, வரும் 31ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று கால அவகாசம் நிர்ணயிக்கப் பட்டிருந்தது.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள 7ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் கீழ், 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயனடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
-விடுதலை,28.8.15

மூட்டு எலும்புகள் பலம் பெற
10 நிமிட சூரிய ஒளி அவசியம் 

சென்னை, ஆக.28_ மூட்டு எலும்புகள் பலம் பெறுவதற்கு ஒரு நாளைக்கு பத்து நிமிட சூரிய ஒளி உடலில் படுவது அவசியம் என ராயப்பேட்டை மருத்துவமனையின் மூடநீக்கியல் நிபுணர் மருத்துவர் நசீர் அகமது தெரிவித்தார். எலும்பு மூட்டு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மருத்துவர் நசீர் அகமது பேசியதாவது: எலும்பு வலுவிழத்தல் நோய், கீல்வாதம் உள்ளிட்ட பிரச்சினைகள் 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களையும், 45 வயதுக்கு மேற்பட்ட ஆண்களையும் தாக்குகிறது.
ஆண்களைவிட பெண்களையே இந்தப் பிரச்சினை அதிகம் பாதிக் கிறது. கால்சியம், வைட்டமின் டி3 குறைபாடுகளே இந்தப் பிரச்சினைக்கு முக்கிய காரணம்.  கால்சியம் சத்துக்களைப் பெறுவதற்கு கேழ்வரகை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வைட்டமின் டி3 சத்துக்களைப் பெறுவதற்கு, காலை 10 மணி முதல் 4 மணி வரை ஒரு நாளைக்கு பத்து நிமிடம் சூரிய ஒளி உடலில் படுவது அவசியம் என்றார் அவர். எலும்பு மூட்டு தினத்தை முன்னிட்டு மருத்துவமனையில் 350 பேருக்கு எலும்பு அடர்த்தி பரிசோதனை செய்யப்பட்டது.

தொழிலினால் ஜாதி கற்பிப்பது பொருந்துமா?


(இது சென்னை லவுகீக சங்கத்தில் ஒருவராகிய ம.மாசிலாமணியவர்களால் இயற்றப்பட்டு சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் (1905) அச்சிடப்பட்டு வெளிப்படுத்தப் பட்டிருக்கும் “வருண பேதவிளக்கம்” என்னும் பழைய புத்தகத்தில் உள்ள 4ஆவது அதிகாரம்)
வேதம் ஓதுபவர்களை வேதியர் எனவும், சாத்திரம் சாதிப்பவர்களை சத்திரியர் எனவும், வேளாண்மை வாணிபம் முதலியவற்றைப் புரிவோரை வைசியர் எனவும், மற்றைய தொழில்களை இயற்றுவோரைச் சூத்திரர் எனவும் இவ்வாறு தொழிலினாலே வருண பேதம் ஏற்பட்டதெனின், இந்நாற்கிரியைகளையும் இயற்றுவோர் மற்றெல்லாத் தேசங்களிலும் இருக்க அவ்விடங்களில் ஏன் வருணபேதம் ஏற்படுத்தப்படவில்லை?
மேலும் வேதங்களை ஒழுங்குபடுத்தின வலைச்சியின் புத்திரராகிய வியாசரும், இந்திரலோகத்துப் பொதுமகளாகிய ஊர்வசியின் கெர்ப்பத்தினின்று உதித்த அருந்ததி யென்னும் மாதை மணம்புரிந்த வசிட்ட முனியும், சத்திரியகுல மரபின ருக்கு சண்டாளச்சி கெர்ப்பத்தினின்று உதித்துத் தமது தபோ பலத்தினால் திருசங்கு மகாராஜனை ஸ்தூல தேகத்துடனே சொர்க்கத்திற்கனுப்ப அங்ஙனமே அவன் தூல தேகத்துடனே செல்ல,
அச்சொர்க்க வாசிகள் மண்ணுலகினின்று இவ்விடம் வருகின்றவன் யாரெனச் சினந்து அவனைத் தலைகீழாகத் தள்ள, தள்ளுண்ட அவர் அபயம்! அபயம் என ஓலமிட்டுக் கொண்டு அந்தரத்தில் வருவதை நோக்கிக் கோபித்து அனுஷம், கேட்டை, மூலம், பூராடம்,
உத்திராடம் ஆகிய தேவர்கள் என்னும் இந்நட்சத்திரங்களைப் பிடுங்கித் தென்றிசையில் நாட்டித் திருசங்கு சொர்க்கமென்னும் ஓர் நவீன சொர்க்கத்தையமைத்த விசுவாமித்திரனும், தொழிலி னால் பிராமணர் ஆனது போல் சூத்திரருக்கு சமையல் செய்யும் பிராமண சுயம்பாகிகளும், கள் விற்கும் பிராமணர்களும் சூத்திரர்களாக வேண்டுமே?
மேலும் பிராமணர் மது மாமிசங்கள் அருந்தாதிருப்ப தனால் உயர்த்தப்பட்டார்கள் எனின், பூர்வகாலத்தில் அனேக பசுக்களைக்கொன்று விற்று ஜீவனம் செய்துவந்த பிராமணகுலத்தில் தோன்றிய அலீகர்த்தன் என்னும் முனியும்,
நாயின் மாமிசத்தைப் புசித்த பிராமணராகிய வர்ம தேவரும், விருதுவென்னும் தச்சனிடத்தில் அனேக பசுக்களை விலைக்கு வாங்கியுண்ட பிராமணராகிய பரத்துவாச மகாமுனியும், சண்டாளன் வீட்டில் செத்துக் கிடந்த நாயின் மாமிசத்தைக் கேட்டு வாங்கிப்புசித்த விசுவாமித்திரரும் சூத்திரர்களாக வேண்டுமே?
பூர்வ காலத்தில் உண்டு வந்தார்களேயன்றி இக்காலத்தில் உண்பதில்லை எனின், இக்காலத்தில் இங்கிலாந்தினின்று செய்து வரும் மீன் எண்ணெயையும், மாட்டின் மாமிசத்தால் செய்து வரும் பானங்களையும் உண்ணுகிறார்களே!
அன்றியும் மாமிசத்தின் சாரமாகிய பால், தயிர், வெண்ணெய், நெய் முதலியவற்றை உண்பதும் அன்றி யாகம் செய்து செய்து அஸ்வம் (குதிரை) முதலியவற்றின் உடலையும் உண்டு வருகிறார்களே!
பிராமணர், பால் கறந்து கொள்வது ஜீவ வதை அல்லவென்றும், மாமிச போஜனம் செய்வது ஜீவ வதையென்றும், பால், ஊன் இனத்தைச்சேர்ந்ததல்லவென்றும் சொல்லின், கன்றுக்காக சுரக்கும் பாலை கன்றை வஞ்சித்துக் கறந்து கொள்வதும்,
தங்கள் சுகத்தையேயன்றி மற்ற பிராணி களின் சுகத்தைக் கருதாது வனங்களில் சுயேச்சையாக தன்னிஷ்ட ஆகாரத்தை யுண்டு ஓடி உலாவித்திரிந்து வரும் விலங்குகளைப்பிடித்து தங்களிஷ்டப்படி ஒழுக வண்டியிற் பூட்டி தங்களைச் சுமந்து செல்லும்படி ஒடுக்கி நடத்துவதும் ஜீவஹிம்சை யல்லவா?
பால் கறந்து கொள்ளு வதற்கும், சுமைகளைச் சுமப் பித்துக் கொள்ளுவதற்கும் பிரதி யாக அவற்றிற்கு வேண்டிய ஆகாரத்தை வருத்திச் சம்பாதித்தது அளிப்பது கறந்து கொண்ட பாலுக்கும் பெற்றுக்கொண்ட வருத்தத்திற்கும், அவ்வாகாரம் பிரதிபலனாவதால் அது குற்றம் அல்ல எனின், அவ்விலங்குகள் தங்கள் பாலையும், வருத்தத்தையும் பெற்றுக் கொண்டு தங்களுக்கு ஆகாரம் அளிக்கும்படி வேண்டிக் கொள்ள வில்லையே?
மேலும் பால், ஊன் இனத்தைச் சேர்ந்ததும் அல்ல, தாவர இனத்தைச் சேர்நததும் அல்லவெனின், அதுபிறிது என்ன இனத்திற் சேர்ந்தது? அதனில் ஜீவன் இல்லை எனின், கோழி முதலியவற்றின் அண்டங்களிலும் (முட்டை) ஜீவன் இல்லையே! ஆகவே அவற்றினை ஏன் உண்பதில்லை?
ஆகையால் அமிர்தம் அவற்றின் ஆகாரத்தின் அளவே அதிகரித்தும், குறைந்தும் இருப்பதால் அது மாமிசத்தின் ஓர் கூறு என்றும், பிராமணரும் மாமிச போஜனர்களேயென்றும் தெளிவாக விளங்குவதும் அன்றி பூர்வகாலந்தொடங்கி பிராமணர் சோமபானமும் செய்து வருவதாக அவர்கள் வேதாகமங்களினாலே தெளிவாவதால் அவ்வகுப்பினரை மட்டும் போஜனத்தினால் உயர்ந்த ஜாதியார் என விசேஷித்துப் பேச வேண்டியது என்ன?
புளிப்பும், நாரும் உள்ள சிறு மாங்கொட்டையை நாட்டி, அது மூன்று, நான்கு அடி உயரம் வளர்ந்த பின் அதனை மற்றொரு மரத்துடன் ஒட்டுவதனால் அக்கனியின் நிறம், மணம் பருமன் முழுதும் மாறிவேறுபடுவது போல,
பிராமணர் உதித்த ஐந்தாம் வயது வரையில் சூத்திரராக இருந்து ஆறாம் வயதில் செய்விக்கப்படும் உபநயனத்திற்குப் பின் பிராமணர்கள் ஆகிறார்கள் எனின், ஒட்டுமாங்கனியின் குணங்கள் யாவும் வேறுபட்டிருப்பது போல உபநயனம் பெற்ற பிராமணருக்கும் புலன் பொறிகளிலும் அகக்கருவி, புறக்கருவிகளிலும் ஏ«னும் பேதம் இருக்க வேண்டுமே?
அதன்றி ஐந்து வயது வரையில் சூத்திரராக இருக்கும் பிராமணப்பிள்ளைகள் உபநயனத்திற்குப் பின்பிராமணர் ஆகிறார்கள் எனின், ஆறுவயதிற்குட்பட்ட சூத்திரப்பிள்ளை களையும் உபநயனம் செய்து ஏன் பிராமணர் ஆக்குவ தில்லை?
பிராமணச் சிறுவர்களே உபநயனம் செய்து பிராமணர் ஆக்கப்படுவர் எனின், அது ஜாதி அபிமானம் அன்றோ?
சூத்திர குலத்தினராக உதித்த ஆண் பாலருக்கு உபநயனம் செய்து பிர்மகுலத்தினர் ஆக்குவது போல, பிராமண ஸ்திரீகளுக்கு உபநயனஞ்செய்து பிரம்ம குலத்தினர் ஆக்குவதில்லையே! ஆகையால் அவர்கள் சூத்திர குலத்தினராக வேண்டுமே?
பிராமண ஸ்திரீகள் உபநயனத்தினரால் அல்ல, பிரம்ம குலத்தினராகவே உதித்து மாத சூதகம் ஆகும் காலத்தில் மட்டும் நாலைந்து நாள் காலத்தில் மட்டும் நாலைந்து நாள் சூத்திரகுலத்தினராக மாறி, மாதசூதமான அய்ந்தாம்நாள் செய்யும் ஸ்நானத்தினால், சூத்திரத்துவம் மாறி மீளவும் பிராமணர் ஆகிறார்கள் எனின், ருதுவதியான நாள்முதல், முப்பது வருடகாலம் அல்லது ஸ்திரீக்கு 44, 50 வரைக்கும் வியக்கத்தக்க கிரமமாய் ஒவ்வொரு மாதமும் மாத சூதகம் கண்டுகொண் டேயிருக்கும், இம்முப்பது வருட காலமும் நகமும் சதையும் போல சூத்திரத்துவம் பிராமண ஸ்திரீகளை விட்டுப்பிரியாது இருக்கின்றதே!
மேலும் பிர்மகுலத்தினராகவே யுதித்த பிராமண ஸ்திரீ களுக்கு பாப சம்பந்தமாகிய சூத்திரத்துவம் பற்றினது எவ்வாறு? மாத சூதகமாகிய இழிவு பிராமண ஸ்திரீகளிடத்தில் அபின்ன    மாகவே இருக்கிறதெனின், அசுத்தமும் ஈனமும் பொருந்திய மாத சூதகத்தையுடைய பிராமண ஸ்திரீகளை பரிசுத்த தேகத்தையுடைய பிராமணர் அங்கீகரித்துக் கொள்வது எப்படி?
ஆகையால் பிராமணர் அவர்களைத் தீண்டாமலும், அவர்கள் யாகம் செய்யும் போஜனத்தை உண்ணாமலும் அல்லவோ  இருத்தல் வேண்டும், அவ்வாறு அன்றி பிராமணர், மாதரைத் தங்களுக்குச் சமப்படுத்தி இருப்பதால் (யாதொரு பொருளின் கூறுகள் நம் முதற் பொருளின் லட்சணமுடையன வாயிருப்பது பிரத்தியட்சமாயிருப்பது போல) உபநயனத்திற்கு முன் பிராமணரும், மாதந்தோறும் பிராமண ஸ்திரீகளும் சூத்திரராகவே இருப்பதால் அவர்களையும் சூத்திரர்கள் என்றே அங்கீகரிக்க வேண்டும். அல்லவெனின் சூத்திரராக இருக்கும் பிராமண ஸ்திரீகளுடன், பிர்ம குலத்தைச் சேர்ந்த பிராமணர் சேந்திருப்பது எங்கனம்? நீரோடுநீர் சேர்வதன்றி நெய் சேராதே.
பருத்தி நூலை முப்பிரிவாகக் கத்தரித்துப் பூண்டிருக்கும் பூநூலினால் உயர்த்தப்பட்டார்கள் எனின், வள்ளுவர் கோமுட்டிகள், வணிகர், கம்மாளர் முதலியவர்களும் பூண்டிருக்கிறார்களே! ஆகவே பிராமணர்களுக்கு மட்டும் பூநூலினால் உயர்வு எப்படி உண்டாகும்?
பிராமணர் வேதம் ஓதுதலினால் உயர்த்தப்பட்டார்கள் எனின், இக்காலத்தில் பறையர் முதலிய சர்வ ஜாதியாரிலும் அனேகர் சுற்றியிருப்பதும் அன்றி மாக்ஸ்முல்லர், சர், உவில்யம் ஜோன்ஸ் முதலியவரும் சதுர்வேதங்கள் முழுவதையும் சுற்றிருக்கிறார்களே! பிரம்மக்கியானந்து பிராமண என்னும் வாக்கியத்தின்படி பிரமத்தியானம் உள்ளவர்களாக இருக்கும் மற்றய மூவினத்தவரையும் ஏன் பிராமணர் எனவும் பிரமத்தியான மற்றவர்களாயிருக்கும் பிராமணரைச் சூத்திரர் எனவும் மொழிவதில்லை?
ஆகையால் பூலோகத்தில் உள்ள சமஸ்த மாந்தரும், ஏக ஜாதியாராக இருக்க இத்தேசத்தவர்கள் மட்டும் தொழிலினால் ஏற்றத்தாழ்வான நால்வகைச் சாதியாராக கடவுளால் உருவாக்கப்பட்டார்களெனச் சாதிப்பது தாஷ்டாந்த திருஷ்டாந்த வழுவாய் சமரசப்படாது ஆதலின் அச்சாதனை யைக் கொண்டு வருண பேதம் உண்டு என்று சாதித்தல் கூடாது. ஆகையால் அது சாதனை வழுவேயாம்.
(குடி அரசு - 1935)
-விடுதலை,28.8.15