புதன், 31 ஆகஸ்ட், 2016

அரசு ஒப்பந்த ஊழியர்களின் குறைந்த பட்ச ஊதியம் 42 சதவீதம் உயர்வு



புதுடில்லி, ஆக.31
 மத்திய அரசு,  ஒப்பந்த ஊழியர்களுக்கு, குறைந்தபட்ச ஊதியத்தை, 42 சத வீதம் உயர்த்தி உள்ளது.
மத்திய அரசு பணியில் உள்ள ஒப்பந்த ஊழியர்களுக்கு, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிற்சங்கங்கள்,  செப்டம்பர் 2இல், நாடு தழுவிய வேலைநிறுத்தபோராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளன.
இந்நிலையில், மத்திய அரசு ஒப்பந்த ஊழியர்களுக்கு,குறைந்த பட்ச ஊதியத்தை, 42 சதவீதம் உயர்த்தி, மத்திய அரசு அறிவித்துள் ளது.
தவிர, இரு ஆண்டுகளுக்கு போனஸ் அளிப்பது குறித்தும், அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதையடுத்து, வேலைநிறுத்த போ ராட்ட அறிவிப்பை, அனைத்து தொழிற்சங்கங்களும் மறுபரி சீலனை செய்யும்படி, மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா வேண்டு கோள் விடுத்துள்ளார்.
மத்திய அரசு ஒப்பந்த ஊழி யர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய, நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில், அமைச்ச கங்கள் இடையிலான குழு, கடந் தாண்டு அமைக்கப்பட்டது.
இக் குழு அளித்த பரிந்துரை களின்படி, குறைந்தபட்ச ஊதிய உயர்வு உள் ளிட்ட அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
-விடுதலை,31.8.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக