ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் பெயர் மாற்றம்: மத்திய அரசுக்கு தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை



நெய்வேலி, ஆக. 13 
இந்திய பொதுத் துறை நிறுவனங்களில் தனிச் சிறப்புடன் கடந்த 60 ஆண்டுகளாக நெய்வேலியில் என்.எல்.சி.எனஅழைக்கப்படும்நெய் வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் செயல் பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் பெயர் தற்போது என்.எல்.சி. இந் தியா லிமிடெட் என மாற்றம் செய்யப் பட்டுள்ளது.
கடந்த ஒன்றாம் தேதி முதல் இந்த உத்தவு அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக் கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் என்.எல்.சி. பெயர் மாற்றத்துக்கு அந்த பகுதி பொது மக் களும், தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மீண்டும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (என்.எல்.சி.) என பெயரை மாற்ற வேண்டும். இல் லையென்றால் பெயர் மாற்றத்தை கைவிடும் வரை போராட்டத்தில் ஈடு படுவோம் என அறிவித்துள்ளனர்.
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்மான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் (தொ.மு.ச.) பொதுச் செயலாளர் சுகுமார் கூறியதாவது:-
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் கடந்த 60 ஆண்டுகளாக நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் என்று பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வந்தது.
ஆனால், மத்திய அரசு என்.எல்.சி. நிறுவனமானது மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் முதன்மையானதாக இருப்பதால் இந்திய அளவில் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்ற விதத்தில் என்.எல்.சி. இந்தியா லிமிடெட் என்று பெயர் மாற்றம் செய்துள்ளது. பாரம் பரியமிக்க பெயரை மாற்றி இருப்பதை அறிந்து இங்குள்ள தொழிற் சங்கங்கள் மட்டுமன்றி பொதுமக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தொ.மு.ச. சார்பிலும், தொழிலாளர் கள் சார்பிலும் மாநிலத்தின் பெருமையை காக்கும் வகையிலும் மீண்டும் என்.எல்.சி. நிறுவனம் என்று செயல்பட மத்திய அரசை வலியுறுத்துவோம்.
மேற்கண்டவாறு அவர் கூறினார்.
-விடுதலை,13.8.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக