ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

முறைசாரா தொழிலாளர்களுக்கும் மகப்பேறு கால சலுகைகள்


புதுடில்லி, ஆக. 16- முறைசாரா தொழிலாளர்களுக்கும் மகப் பேறு கால சலுகைள் வழங்கும் வகையில் அரசு புதிய முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாக  தொழிலா ளர் துறை செயலர் தெரிவித்து உள்ளார்.
பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு 6 மாதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான சட்ட  திருத்த மசோதா சமீபத்தில் மாநிலங்களவையில் நிறை வேற்றப்பட்டது.இந்நிலையில் முறைசாரா தொழிலாளர்களும் மகப்பேறு கால  சலுகைகள் வழங்குவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
இது தொடர்பாக தொழிலா ளர் துறை செயலர் சங்கர் அகர் வால் கூறியதாவது:
முறைசாரா தொழில்களில் உள்ள பெண்  தொழிலாளர்களும் மகப்பேறு காலத்தில் பயனடை யும் வகையில், அரசு மற்றும் அவர்களுக்கு பணி வாய்ப்பை வழங்கியோர் தரப்பில் ஒரு  குறிப் பிட்ட தொகை திரட்டப்படும். இந்த குறிப்பிட்ட தொகையை காட்டிலும் அதிகபட்ச தொகையை கூட அவர்கள் பங்களிப்பாக வழங்கலாம். இந்த பணம் டெபா சிட் செய்யப்பட்டு மகப்பேறு காலத்தில் வழங்கப்படும்.
இதற்கான வட்டி உள்ளிட்ட வையும் வழங்கப்படும்.  சம்பந் தப்பட்ட உறுப்பினர், குறிப் பிட்ட வயதுக்குள் குழந்தை பெறாத பட்சத்தில் அவரது  கணக்கில் உள்ள இந்த மகப்பேறு கால நிதியை முழுமையாக எடுத்துக் கொள்ளலாம் என்றார். முறை சாரா தொழிலாளர்களுக்கு அரசு 6 மாத  விடுப்பு வழங்க இய லாது என்பதால் அவர்கள் மகப் பேறு காலத்தில்  பயன்பெற இது போன்ற திட்டம் செயல்படுத் தப்பட உள்ளது.
-விடுதலை,16.8.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக