புதுடில்லி, ஆக.18 தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கும் 26 வார பேறுகால விடுப்பு வழங்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவை அவசரச் சட்டமாக இயற்றுவதற்கு மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
அரசுத் துறையில் பணியாற்றும் பெண்களுக்கு 26 வாரங்களும், தனி யார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண் களுக்கு அதிகபட்சமாக 12 வாரங்களும் (3 மாதங்கள்) தற்போது பேறுகால விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தனியார் துறை பெண்களுக்கும் 26 வார பேறுவிடுப்பு வழங்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா, கடந்த வாரம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதா, மக்களவையில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நிறைவடைந்து
விட்டது.
இந்நிலையில், இன்னும் 3 மாதங்கள் கழித்து நடைபெறவுள்ள நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத்தொடரிலேயேஇந்த மசோதா, மக்களையில் தாக்கல் செய்யப் படும். ஆனால், அதற்குள் பலர் பயன டையும் வகையில், இந்த மசோதாவை அவசரச் சட்டமாக இயற்றுவதற்கு மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் புதன்கிழமை (17.8.2016) கூறியதாவது:
இந்த மசோதா, மாநிலங்களவையில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட மறு தினமே பேறுகால விடுப்பு தொடர்பாக விளக்கம் கேட்டு மத்திய மகளிர் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்திக்கு நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்கள் குவிந்தன. அந்த மசோதா எப்போது நடைமுறைக்கு வரும்? பேறுகாலப் பலன்களை உடனடியாகப் பெற முடியுமா? என்கிற வகையில் அந்தக் கேள்விகள் இருந்தன. எனவே, கர்ப்பிணிகள் பலரும் பயன்பெறும் வகையில், இந்த மசோதாவை அடுத்த வாரத்தில் அவசரச் சட்டமாக இயற்றுவதற்கான பணிகளில் மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அரசுத் துறையில் பணியாற்றும் பெண்களுக்கு 26 வாரங்களும், தனி யார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண் களுக்கு அதிகபட்சமாக 12 வாரங்களும் (3 மாதங்கள்) தற்போது பேறுகால விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தனியார் துறை பெண்களுக்கும் 26 வார பேறுவிடுப்பு வழங்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா, கடந்த வாரம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதா, மக்களவையில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நிறைவடைந்து
விட்டது.
இந்நிலையில், இன்னும் 3 மாதங்கள் கழித்து நடைபெறவுள்ள நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத்தொடரிலேயேஇந்த மசோதா, மக்களையில் தாக்கல் செய்யப் படும். ஆனால், அதற்குள் பலர் பயன டையும் வகையில், இந்த மசோதாவை அவசரச் சட்டமாக இயற்றுவதற்கு மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் புதன்கிழமை (17.8.2016) கூறியதாவது:
இந்த மசோதா, மாநிலங்களவையில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட மறு தினமே பேறுகால விடுப்பு தொடர்பாக விளக்கம் கேட்டு மத்திய மகளிர் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்திக்கு நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்கள் குவிந்தன. அந்த மசோதா எப்போது நடைமுறைக்கு வரும்? பேறுகாலப் பலன்களை உடனடியாகப் பெற முடியுமா? என்கிற வகையில் அந்தக் கேள்விகள் இருந்தன. எனவே, கர்ப்பிணிகள் பலரும் பயன்பெறும் வகையில், இந்த மசோதாவை அடுத்த வாரத்தில் அவசரச் சட்டமாக இயற்றுவதற்கான பணிகளில் மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
-விடுதலை,18.8.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக