திங்கள், 29 ஆகஸ்ட், 2016

பிற்படுத்தப்பட்டோரின் ஆண்டு வருமான உச்சவரம்பை ரூ.15 இலட்சங்களாக உயர்த்திட பரிந்துரை

மத்திய அரசு கல்வி, வேலை வாய்ப்புகளில் 
பிற்படுத்தப்பட்டோரின் ஆண்டு வருமான உச்சவரம்பை ரூ.15 இலட்சங்களாக உயர்த்திட 
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரை
புதுடில்லி, ஆக.29 மேனாள் பிரதமர் சமூகநீதிக் காவ0லர் வி.பி.சிங் தலைமையிலான மத்திய அரசு அமைந்த போது மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப் புகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிட பரிந்துரைத்த மண்டல் கமிஷன் அறிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டது.

27 விழுக்காடு இட ஒதுக்கீடு


அதன்படி மத்திய அரசின் கல்வி, வேலை வாய்ப் புகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிட ஆணை பிறப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.
அதன்பிறகு 27 விழுக்காடு முழுமையாக நடை முறைப்படுத்தப்படாமல், வெறும் 12 விழுக்காட்டுக் குள்ளாகவே பிற்படுத்தப்பட்டவர்களுக்கு  வாய்ப்புகள் வழங்கப்பட்டு வந்தன. அதற்கு காரண மாக ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.6 லட்சமாக இருந்ததுதான் என ஆய்வில் கண்டறியப்பட்டது.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட  ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் என்று கூறி ஆண்டு வருமானம் ரூ.ஆறு லட்சத்துக்கும்மேல் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு  வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்தது.

வகுப்புவாரி உரிமையான இட ஒதுக்கீட்டில் பொரு ளாதார அளவுகோல் கூடாது என்று   வலியுறுத்தப்பட்டு வந்த அதேநேரத்தில், கிரீமிலேயர் நீக்கப்படும்வரை, ஆண்டு வருமான உச்சவரம்பை அதிகரிக்கக் கோரிதிராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளால் மத்திய அரசிடமும், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் திடமும் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், மத்திய அரசின் கல்வி, வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீட்டின் பலனை இதர பிற் படுத்தப்பட்டோர் பெறுவதற்கான வருமான வரம்பு உயர்த்தப்படுவதற்கு தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கல்வி, வேலை வாய்ப்புகளில் ஓ.பி.சி. என்னும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பி னருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு நடைமுறையில் இருந்து வருகிறது.
இதற்கு ஓ.பி.சி. சான்றிதழ் பெற வேண்டுமானால், பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்குள்தான் இருக்க வேண்டும் என்று விதிமுறை (கிரிமிலேயர்) வகுக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்றைய சூழலில், ஆண்டு வருமானம் ரூ.6 லட்சம் என்ற வரையறைக்குள் பெரும்பாலானோர் வருவதில்லை. இதன் காரணமாக பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்களை நிரப்ப முடிவதில்லை.

இட ஒதுக்கீட்டின்படி உரிமையைப் பெற முடியாத அவலம்

ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்கு அதிகமாக இருந்தால், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இருந் தாலும், அவர்கள் இட ஒதுக்கீட்டின் சலுகையை பெற முடியாத அவல நிலை உள்ளது. இது நாடு முழுவதும் பரவலாக கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது.

இதனால் மத்திய அரசு பணிகளில் இதர பிற் படுத்தப்பட்டோருக்கானஒதுக்கீட்டுஇடங்கள்நிரப் பப்படாமல் ஏராளமாக காலியாக இருக்கின்றன.

வருமான வரம்பு உயர்கிறது

இந்த நிலையில், ஆண்டு வருமானம் ரூ.6 லட்சம் என்ற வருமான வரம்பினை ரூ.8 லட்சம் என்ற அளவில் உயர்த்துவதற்கு மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இப்படி உயர்த்தி விட்டால் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டின் பலனை பலரும் பெறுகிற வாய்ப்பு உருவாகும். மத்திய அரசின் காலிப்பணியிடங்களும் நிரப்பப்படும்.

இது தொடர்பாக மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம் திட்ட அறிக்கை ஒன்றை தயாரித்து வருகிறது. இது தொடர்பான அமைச்சரவையின் குறிப்பு விரைவில் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் வைக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.

வருமான வரம்பு ரூ.15 இலட்சங்களாக உயர்த்தப் பரிந்துரை

இது தொடர்பாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக் கான தேசிய ஆணையத்தின் உறுப்பினர் அசோக் சைனி கூறும்போது, ‘‘மத்திய அரசுப்பணிகள், கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அறிமுகமாகி 20 ஆண்டுகள் ஆன பின்னரும், 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டில், 12 முதல் 15 விழுக்காட்டினர் மட்டுமே பலன் பெறுகின்றனர். நாங்கள் இது குறித்து ஆராய்ந்தபோது ஆண்டு வரு மான வரம்புதான் இந்த உரிமையைப் பெறுவதற்கு தடையாக அமைந்துள்ளது என்பதை கண்டறிந்தோம். எனவே, வருமான வரம்பினை ரூ.15 லட்சம் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளோம்’’ என கூறினார்.
-விடுதலை,29.8.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக