ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

"குழந்தை பெற்றுத் தரும் இயந்திரங்களாக தாய்மார்களைப் பார்க்காதீர்கள்!"

மத்திய அரசுக்கு கனிமொழி எம்.பி. எச்சரிக்கை
புதுடில்லி, ஆக.12 "தாய்மார்களை குழந்தை பெற்றுத் தரும் இயந்திரமாகப் பார்க்காதீர்கள் என்றும் மத்திய அரசை நோக்கி" கழக மகளிரணிச் செயலாள ரும், மாநிலங்களவை தி.மு.கழகக் குழுத் தலைவரு மான கனிமொழி ஆவேசமாக தெரிவித்தார்.
பெண்களுக்கான மகப்பேறு விடுமுறை திருத்த மசோதா ஆகஸ்டு 11-ஆம் தேதி மாநிலங்களவையில் கொண்டு வரப் பட்டது.
இந்த திருத்த மசோதாவில் குழந்தை பெறும் பெண்களுக்கு மகப்பேறு விடுமுறை ஆறுமாதமாக அறிவிக்கப் பட்டது. ஆனால், கருத்தரிக்க வாய்ப் பில்லாத பெண்களுக்காக... தங்களது கருவில் குழந்தையைத் தாங்கி பெற்றுத் தரும் தாய்மார்களுக்கு இந்த ஆறுமாத விடுமுறை இல்லை என்றும், 15 முதல் 20 நாள் வரையிலான சாதாரண விடுமுறைதான் என்றும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை எதிர்த்து மாநிலங்களவையில் கனிமொழி பேசியதாவது:-
"பெண்களை குழந்தை பெறும் இயந்திரங்களாகப் பார்க்கா தீர்கள். பெற்ற குழந்தையோடு இருக்க வேண்டிய அந்தத் தாய்க்கு மகப்பேறு விடுப்பு என்பது நியாயமானதாக இல்லை. குழந்தை பெறுதல் என்பது பெண்களுக்கு மறு பிறப்பு மாதிரி. பிரசவம் ஆன தாய் மார்கள் அனைவரும் மீண்டும் ஆரோக்கியமான உடல் நலம் பெற ஒய்வு தேவை. எனவே, அனைத்து வித தாய்மார்களுக்கும்.
ஒரே மாதிரியான விடுப்பு என்றே இருக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார். ஆனால் கனிமொழி எம்.பி.க்கு பதிலளித்த மத்திய பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி, "மற்றவர்களுக்காக தங்கள் கருவில் குழந்தைகளை சுமந்து பிரசவிக்கும் பெண்கள். குழந்தை பெற்ற பிறகு குழந்தையுடனே இருப்பதில்லை. அதனால் அவர்கள் இந்த மகப்பேறு விடுமுறை சலுகைக்குள் வரமாட்டார்கள்" என்று தெரிவித்தார்.
 -விடுதலை,12.8.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக