புதன், 31 ஆகஸ்ட், 2016

வருமான உச்ச வரம்பை ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும் கலைஞர் வலியுறுத்தல்

பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு
கிரீமிலேயர் வருமான உச்ச வரம்பை
ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும்
கலைஞர் வலியுறுத்தல் 

சென்னை, ஆக.31
 மத்திய அரசின் கல்வி மற்றும வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் அதிக அளவில் பயன் அடையும் வகையில் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு வரு மான வரம்பை ரூ.15 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.
இது குறித்து திமுக தலைவர் கலைஞர் நேற்று (30.8.2016) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசின்  கல்வி மற்றும்  வேலை வாய்ப் புகளில்  பிற்படுத்தப்பட்டோர்  இடஒதுக்கீட்டின் பலனைப் பெற, நடைமுறையில் இருந்து வரும்  வருமான வரம்பினை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக  செய்தி வந்துள்ளது.  மத்திய அரசின் கல்வி, வேலை வாய்ப்புகளில்  ஓ.பி.சி.  என்னும்  இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு  தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது.
இதற்கு ஓ.பி.சி.  சான்றிதழ் பெறவேண்டுமானால், பெற்றோரின்  ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்திற்குள் தான் இருக்க வேண்டும் என்று இதுவரை விதி முறையில் கூறப்பட்டுள்ளது.  தற்போதுள்ள சூழலில்  ஆண்டு வருமானம்  ரூ.6 லட்சம் என்ற வரையறைக்குள்  பெரும்பாலோர் வருவதில்லை.  இதன் காரணமாக பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்கள் அனைத்தையும் நிரப்ப முடிவதில்லை.
எனவே தான்,  6.5.2015இல் நான் விடுத்த அறிக்கை யில், ஓ.பி.சி என்று அழைக்கப்படும்  இதர பிற் படுத்தப்பட்ட சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள்  பயன்பெறும் வகையில், கிரீமிலேயர் உச்ச வரம்பை,  தற்போதுள்ள ரூ.6 லட்சம் என்பதிலிருந்து,  ரூ.10.50 லட்சமாக உயர்த்த வேண்டும்  என்று மத்திய அரசுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான  தேசியக் கமிஷன்,  வரவேற்கத்தக்க பரிந்துரை  செய்துள்ளது.
இந்தப் பரிந்துரையை  மத்திய பாஜக அரசு ஏற்றுக் கொண்டால், இதர பிற்படுத்தப்பட்ட சமு தாயங்களைச் சேர்ந்த பல்லாயிரம் பேருக்கு,  மத்திய  அரசின்   வேலை வாய்ப்பு  மற்றும் கல்வியில்  மேலும் கூடுதலாக  இடஒதுக்கீட்டுப் பலன்கள் கிடைக்கும் என்பதால்,  மத்திய பாஜக அரசு உடனடியாக முன் வந்து  இந்தப் பரிந்துரையை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று,
இட ஒதுக் கீட்டிற்காகத்  தொடர்ந்து பாடுபட்டு வரும் இயக்கம்  திமுக என்ற முறையில் அதன்  சார்பில் வேண்டு கோள் விடுக்கிறேன் என்று கேட்டுக் கொண்டி ருந்தேன். இந்தப் பின்னணி யில்   தற்போது ஆண்டு வருமானம் ரூ.6 லட்சம் என்பதை ரூ.8 லட்சம் என்ற அளவில் உயர்த்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்தி வந்திருக்கிறது.
இது தொடர்பாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக் கான தேசிய ஆணையத்தின் உறுப்பினர் அசோக்  சைனி, வருமான வரம்பினை ரூ.15 லட்சம் அளவுக்கு  உயர்த்த வேண்டுமென்று சிபாரிசு செய்துள்ளதாகக் கூறியிருக்கிறார்.
எனவே  பிரதமர் நரேந்திர மோடி தலைமை யிலான  பா.ஜ.க. அரசு, இந்தியாவில் உள்ள  பிற் படுத்தப்பட்டோர் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்னும் நோக்கில், அவர்களின் ஆண்டு வருமானம்  ரூ.6 லட்சம் என்பதை பிற்படுத்தப்பட்ட வகுப்பி னருக்கான தேசிய ஆணையத்தின் உறுப்பினர் பரிந்துரை செய்துள்ள ரூ.15 லட்சம் என்ற அளவுக்கோ அல்லது குறைந்தபட்சம் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கடந்த ஆண்டு பரிந்துரை செய்த ரூ.10.50 லட்சம் அளவுக்கோ உயர்த்தி அறிவிக்க வேண்டு மென்று திமுக சார்பில் வலியுறுத்தி வேண்டுகிறேன்.
இவ்வாறு கலைஞர் கூறியுள்ளார்.
-விடுதலை,31.8.16

அரசு ஒப்பந்த ஊழியர்களின் குறைந்த பட்ச ஊதியம் 42 சதவீதம் உயர்வு



புதுடில்லி, ஆக.31
 மத்திய அரசு,  ஒப்பந்த ஊழியர்களுக்கு, குறைந்தபட்ச ஊதியத்தை, 42 சத வீதம் உயர்த்தி உள்ளது.
மத்திய அரசு பணியில் உள்ள ஒப்பந்த ஊழியர்களுக்கு, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிற்சங்கங்கள்,  செப்டம்பர் 2இல், நாடு தழுவிய வேலைநிறுத்தபோராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளன.
இந்நிலையில், மத்திய அரசு ஒப்பந்த ஊழியர்களுக்கு,குறைந்த பட்ச ஊதியத்தை, 42 சதவீதம் உயர்த்தி, மத்திய அரசு அறிவித்துள் ளது.
தவிர, இரு ஆண்டுகளுக்கு போனஸ் அளிப்பது குறித்தும், அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதையடுத்து, வேலைநிறுத்த போ ராட்ட அறிவிப்பை, அனைத்து தொழிற்சங்கங்களும் மறுபரி சீலனை செய்யும்படி, மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா வேண்டு கோள் விடுத்துள்ளார்.
மத்திய அரசு ஒப்பந்த ஊழி யர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய, நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில், அமைச்ச கங்கள் இடையிலான குழு, கடந் தாண்டு அமைக்கப்பட்டது.
இக் குழு அளித்த பரிந்துரை களின்படி, குறைந்தபட்ச ஊதிய உயர்வு உள் ளிட்ட அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
-விடுதலை,31.8.16

திங்கள், 29 ஆகஸ்ட், 2016

பிற்படுத்தப்பட்டோரின் ஆண்டு வருமான உச்சவரம்பை ரூ.15 இலட்சங்களாக உயர்த்திட பரிந்துரை

மத்திய அரசு கல்வி, வேலை வாய்ப்புகளில் 
பிற்படுத்தப்பட்டோரின் ஆண்டு வருமான உச்சவரம்பை ரூ.15 இலட்சங்களாக உயர்த்திட 
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரை
புதுடில்லி, ஆக.29 மேனாள் பிரதமர் சமூகநீதிக் காவ0லர் வி.பி.சிங் தலைமையிலான மத்திய அரசு அமைந்த போது மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப் புகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிட பரிந்துரைத்த மண்டல் கமிஷன் அறிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டது.

27 விழுக்காடு இட ஒதுக்கீடு


அதன்படி மத்திய அரசின் கல்வி, வேலை வாய்ப் புகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிட ஆணை பிறப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.
அதன்பிறகு 27 விழுக்காடு முழுமையாக நடை முறைப்படுத்தப்படாமல், வெறும் 12 விழுக்காட்டுக் குள்ளாகவே பிற்படுத்தப்பட்டவர்களுக்கு  வாய்ப்புகள் வழங்கப்பட்டு வந்தன. அதற்கு காரண மாக ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.6 லட்சமாக இருந்ததுதான் என ஆய்வில் கண்டறியப்பட்டது.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட  ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் என்று கூறி ஆண்டு வருமானம் ரூ.ஆறு லட்சத்துக்கும்மேல் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு  வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்தது.

வகுப்புவாரி உரிமையான இட ஒதுக்கீட்டில் பொரு ளாதார அளவுகோல் கூடாது என்று   வலியுறுத்தப்பட்டு வந்த அதேநேரத்தில், கிரீமிலேயர் நீக்கப்படும்வரை, ஆண்டு வருமான உச்சவரம்பை அதிகரிக்கக் கோரிதிராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளால் மத்திய அரசிடமும், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் திடமும் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், மத்திய அரசின் கல்வி, வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீட்டின் பலனை இதர பிற் படுத்தப்பட்டோர் பெறுவதற்கான வருமான வரம்பு உயர்த்தப்படுவதற்கு தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கல்வி, வேலை வாய்ப்புகளில் ஓ.பி.சி. என்னும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பி னருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு நடைமுறையில் இருந்து வருகிறது.
இதற்கு ஓ.பி.சி. சான்றிதழ் பெற வேண்டுமானால், பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்குள்தான் இருக்க வேண்டும் என்று விதிமுறை (கிரிமிலேயர்) வகுக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்றைய சூழலில், ஆண்டு வருமானம் ரூ.6 லட்சம் என்ற வரையறைக்குள் பெரும்பாலானோர் வருவதில்லை. இதன் காரணமாக பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்களை நிரப்ப முடிவதில்லை.

இட ஒதுக்கீட்டின்படி உரிமையைப் பெற முடியாத அவலம்

ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்கு அதிகமாக இருந்தால், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இருந் தாலும், அவர்கள் இட ஒதுக்கீட்டின் சலுகையை பெற முடியாத அவல நிலை உள்ளது. இது நாடு முழுவதும் பரவலாக கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது.

இதனால் மத்திய அரசு பணிகளில் இதர பிற் படுத்தப்பட்டோருக்கானஒதுக்கீட்டுஇடங்கள்நிரப் பப்படாமல் ஏராளமாக காலியாக இருக்கின்றன.

வருமான வரம்பு உயர்கிறது

இந்த நிலையில், ஆண்டு வருமானம் ரூ.6 லட்சம் என்ற வருமான வரம்பினை ரூ.8 லட்சம் என்ற அளவில் உயர்த்துவதற்கு மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இப்படி உயர்த்தி விட்டால் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டின் பலனை பலரும் பெறுகிற வாய்ப்பு உருவாகும். மத்திய அரசின் காலிப்பணியிடங்களும் நிரப்பப்படும்.

இது தொடர்பாக மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம் திட்ட அறிக்கை ஒன்றை தயாரித்து வருகிறது. இது தொடர்பான அமைச்சரவையின் குறிப்பு விரைவில் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் வைக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.

வருமான வரம்பு ரூ.15 இலட்சங்களாக உயர்த்தப் பரிந்துரை

இது தொடர்பாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக் கான தேசிய ஆணையத்தின் உறுப்பினர் அசோக் சைனி கூறும்போது, ‘‘மத்திய அரசுப்பணிகள், கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அறிமுகமாகி 20 ஆண்டுகள் ஆன பின்னரும், 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டில், 12 முதல் 15 விழுக்காட்டினர் மட்டுமே பலன் பெறுகின்றனர். நாங்கள் இது குறித்து ஆராய்ந்தபோது ஆண்டு வரு மான வரம்புதான் இந்த உரிமையைப் பெறுவதற்கு தடையாக அமைந்துள்ளது என்பதை கண்டறிந்தோம். எனவே, வருமான வரம்பினை ரூ.15 லட்சம் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளோம்’’ என கூறினார்.
-விடுதலை,29.8.16

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

பேறுகால சலுகைகள்: அவசர சட்டம் இயற்ற மத்திய அரசு பரிசீலனை


புதுடில்லி, ஆக.18 தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கும் 26 வார பேறுகால விடுப்பு வழங்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவை அவசரச் சட்டமாக இயற்றுவதற்கு மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

அரசுத் துறையில் பணியாற்றும் பெண்களுக்கு 26 வாரங்களும், தனி யார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண் களுக்கு அதிகபட்சமாக 12 வாரங்களும் (3 மாதங்கள்) தற்போது பேறுகால விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தனியார் துறை பெண்களுக்கும் 26 வார பேறுவிடுப்பு வழங்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா, கடந்த வாரம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதா, மக்களவையில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நிறைவடைந்து
விட்டது.

இந்நிலையில், இன்னும் 3 மாதங்கள் கழித்து நடைபெறவுள்ள நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத்தொடரிலேயேஇந்த மசோதா, மக்களையில் தாக்கல் செய்யப் படும். ஆனால், அதற்குள் பலர் பயன டையும் வகையில், இந்த மசோதாவை அவசரச் சட்டமாக இயற்றுவதற்கு மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் புதன்கிழமை (17.8.2016) கூறியதாவது:

இந்த மசோதா, மாநிலங்களவையில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட மறு தினமே பேறுகால விடுப்பு தொடர்பாக விளக்கம் கேட்டு மத்திய மகளிர் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்திக்கு நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்கள் குவிந்தன. அந்த மசோதா எப்போது நடைமுறைக்கு வரும்? பேறுகாலப் பலன்களை உடனடியாகப் பெற முடியுமா? என்கிற வகையில் அந்தக் கேள்விகள் இருந்தன. எனவே, கர்ப்பிணிகள் பலரும் பயன்பெறும் வகையில், இந்த மசோதாவை அடுத்த வாரத்தில் அவசரச் சட்டமாக இயற்றுவதற்கான பணிகளில் மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
-விடுதலை,18.8.16

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பெயர் மாற்றத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பெயர் மாற்றத்தைக் கண்டித்து
திராவிடர் கழகத்தின் சார்பில்
ஆகஸ்டு 22 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்
செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் அறிவிப்பு

விருத்தாசலம், ஆக. 13
 நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் பெயரினை என்.எல்.சி. இந்தியா லிமிடெட் என்று மாற்றப்பட்டு இருப்பதைக் கண்டித்து திராவிடர் கழகம் மற்றும் ஒத்தக் கருத்துள்ளவர்களை இணைத்து ஆகஸ்டு 22 ஆம் தேதி நெய்வேலி என்.எல்.சி. அதிபர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.
இன்று (13.8.2016) செய்தியாளர்களிடம் கூறிய விவரம் வருமாறு:
மறைமுகமாக தனியார் மயமாக்கவேண்டும் என்கிற முயற்சி...
நெய்வேலி நிலக்கரி பழுப்பு நிறுவனம் என்பது பல நூற்றுக்கணக்கான குடும்பங்களை புதுக்கூரப்பேட்டை என்ற பெயரில் அவர்கள் அகற்றியிருக்கிறார்கள். ஏற்கெனவே நிலங்களைக் கொடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை என்கிற குறைபாடும் இருக்கிறது. அதோடு, இது மேலும் வளர்ந்து லாபம் தரக்கூடிய ஒரு நிலையில், அதனுடைய பங்குகளை அவ்வப்போது விற்று,
மறைமுகமாக தனியார் மயமாக்கவேண்டும் என்கிற முயற்சி தொடர்ந்து பல ஆண்டுகாலமாக நடந்துவருவதைக் கண்டித்து, திராவிடர் கழகமும், பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி, அதற்குப் பிறகு, தமிழக  அரசும் முன்வந்து, ஒரு பங்கை நாங்கள் வாங்குகிறோம் என்று சொல்லி, அது ஓரளவிற்குத் தடுக்கப்பட்டிருக்கிறது.
என்.எல்.சி. இந்தியா லிமிடெட் என்று இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
இந்த நிலையில், இப்பொழுது மறைமுகமாக வடபுலத்திலேயும், வேறு மாநிலங்களில் இருப்பவர் களைக் கொண்டு வந்து நிரப்பவும், குறைந்த சம்பளத் திற்கு - ஒப்பந்தக்காரர்களை, அவர்களுடைய பிரச்சி னைகளைத் தீர்க்காமல் இருப்பதற்காகவும், அதே நேரத்தில், நாங்கள் தனியார் மயமாக்கவில்லை என்று சொல்லிக் கொண்டு, அவுட் சோர்சிங் என்ற பெயரால், பிறருக்குக் கொடுத்து, அதன்மூலமாக அவர்கள் ஆள் வைக்கிறார்கள்,
அதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்று மறைமுகமாக தனியார் மயமாக்கக் கூடிய ஒரு சூழ்ச்சியான திட்டத்தை முறியடிப்பதற் காகவும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கம் என்ற பெயர் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து இருக்கக்கூடிய ஒரு நிலையில், அந்தப் பெயரை மாற்றி, என்.எல்.சி. இந்தியா லிமிடெட் என்று இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
திராவிடர் கழகத்தின் சார்பில்
ஆகஸ்டு 22 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்!
அதற்காக ஒரு பெரிய  கண்டன ஆர்ப்பாட்டத்தை திராவிடர் கழகமும், ஒத்தக் கருத்துள்ளவர்களும் வருகின்ற 22 ஆம் தேதி நெய்வேலி என்.எல்.சி. அதிபர் அலுவலகத்தின்முன் நடத்துவார்கள்.
அந்த ஆர்ப்பாட்டத்தோடு, வடக்கே இருக்கின்றவர் களின் ஆதிக்கம்  - இதுபோன்று பல துறைகளில் இருக்கிறது - மொழித் திணிப்பும் இருக்கிறது என்பதற்கு அடையாளமாக - காலங்காலமாக நடந்துவருகிற - தமிழ் மொழியில் ஒலிபரப்புகின்ற மாநில செய்திகளையெல்லாம் ரத்து செய்யப் போகிறோம் என்று வந்திருக்கின்ற அறிவிப்பு- அதிர்ச்சிக்குரிய ஒரு அறிவிப்பாகும். அதனை அவர்கள் வாபஸ் வாங்கிவிட்டால், அதற்கான போராட்டம் நடைபெறாது. அதனை அவர்கள் திரும்பப் பெறாவிட்டால், இந்தப் போராட்டத்தோடு, அந்தக் கோரிக்கையும் சேர்த்துக் கொள்ளப்படும்.
வானொலியில்
தமிழ் மொழியில் செய்திகள் ரத்தா?
இங்கே மட்டும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறாது - தொடர்ந்து மத்திய அரசு அதில் பிடிவாதம் காட்டினால், எங்கெங்கெல்லாம் தமிழ்நாட்டில் வானொலி நிலை யங்கள் இருக்கிறதோ, அங்கெல்லாம் அமைதியான முறையில் அறப்போராட்டங்களாக - திராவிடர் கழகத்தாலும், ஒத்தக் கருத்துள்ளவர்களை ஒருங் கிணைத்து நடத்துவோம். - இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஆர்ப்பாட்ட விவரம்

நாள்: 22.8.2016 திங்கள் காலை 10.30 மணி
இடம்: நெய்வேலி என்.எல்.சி. அதிபர் அலுவலகத்தின் முன்
தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)
முன்னிலை: வெ.ஜெயராமன் (தஞ்சை மண்டல தலைவர், திராவிடர் கழகம்), சிவ.வீரமணி (புதுச்சேரி மாநில திராவிடர் கழகத் தலைவர்),
அரங்க.பன்னீர்செல்வம் (கடலூர் மண்டல தலைவர், திராவிடர் கழகம்), க.மு.தாஸ் (விழுப்புரம் மண்டல தலைவர், திராவிடர் கழகம்), சொ.தண்டபாணி (கடலூர் மண்டல செயலாளர், திராவிடர் கழகம்), அ.இளங்கோவன் (விருத்தாசலம் மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்), தென்.சிவக்குமார் (கடலூர் மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்), சி.காமராசு (அரியலூர் மண்டல தலைவர், திராவிடர் கழகம்), விடுதலை நீலமேகம் (அரியலூர் மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்), இரா.இராசு (புதுச்சேரி மண்டல தலைவர், திராவிடர் கழகம்).

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் பெயர் மாற்றம்: மத்திய அரசுக்கு தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை



நெய்வேலி, ஆக. 13 
இந்திய பொதுத் துறை நிறுவனங்களில் தனிச் சிறப்புடன் கடந்த 60 ஆண்டுகளாக நெய்வேலியில் என்.எல்.சி.எனஅழைக்கப்படும்நெய் வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் செயல் பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் பெயர் தற்போது என்.எல்.சி. இந் தியா லிமிடெட் என மாற்றம் செய்யப் பட்டுள்ளது.
கடந்த ஒன்றாம் தேதி முதல் இந்த உத்தவு அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக் கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் என்.எல்.சி. பெயர் மாற்றத்துக்கு அந்த பகுதி பொது மக் களும், தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மீண்டும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (என்.எல்.சி.) என பெயரை மாற்ற வேண்டும். இல் லையென்றால் பெயர் மாற்றத்தை கைவிடும் வரை போராட்டத்தில் ஈடு படுவோம் என அறிவித்துள்ளனர்.
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்மான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் (தொ.மு.ச.) பொதுச் செயலாளர் சுகுமார் கூறியதாவது:-
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் கடந்த 60 ஆண்டுகளாக நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் என்று பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வந்தது.
ஆனால், மத்திய அரசு என்.எல்.சி. நிறுவனமானது மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் முதன்மையானதாக இருப்பதால் இந்திய அளவில் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்ற விதத்தில் என்.எல்.சி. இந்தியா லிமிடெட் என்று பெயர் மாற்றம் செய்துள்ளது. பாரம் பரியமிக்க பெயரை மாற்றி இருப்பதை அறிந்து இங்குள்ள தொழிற் சங்கங்கள் மட்டுமன்றி பொதுமக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தொ.மு.ச. சார்பிலும், தொழிலாளர் கள் சார்பிலும் மாநிலத்தின் பெருமையை காக்கும் வகையிலும் மீண்டும் என்.எல்.சி. நிறுவனம் என்று செயல்பட மத்திய அரசை வலியுறுத்துவோம்.
மேற்கண்டவாறு அவர் கூறினார்.
-விடுதலை,13.8.16

முறைசாரா தொழிலாளர்களுக்கும் மகப்பேறு கால சலுகைகள்


புதுடில்லி, ஆக. 16- முறைசாரா தொழிலாளர்களுக்கும் மகப் பேறு கால சலுகைள் வழங்கும் வகையில் அரசு புதிய முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாக  தொழிலா ளர் துறை செயலர் தெரிவித்து உள்ளார்.
பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு 6 மாதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான சட்ட  திருத்த மசோதா சமீபத்தில் மாநிலங்களவையில் நிறை வேற்றப்பட்டது.இந்நிலையில் முறைசாரா தொழிலாளர்களும் மகப்பேறு கால  சலுகைகள் வழங்குவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
இது தொடர்பாக தொழிலா ளர் துறை செயலர் சங்கர் அகர் வால் கூறியதாவது:
முறைசாரா தொழில்களில் உள்ள பெண்  தொழிலாளர்களும் மகப்பேறு காலத்தில் பயனடை யும் வகையில், அரசு மற்றும் அவர்களுக்கு பணி வாய்ப்பை வழங்கியோர் தரப்பில் ஒரு  குறிப் பிட்ட தொகை திரட்டப்படும். இந்த குறிப்பிட்ட தொகையை காட்டிலும் அதிகபட்ச தொகையை கூட அவர்கள் பங்களிப்பாக வழங்கலாம். இந்த பணம் டெபா சிட் செய்யப்பட்டு மகப்பேறு காலத்தில் வழங்கப்படும்.
இதற்கான வட்டி உள்ளிட்ட வையும் வழங்கப்படும்.  சம்பந் தப்பட்ட உறுப்பினர், குறிப் பிட்ட வயதுக்குள் குழந்தை பெறாத பட்சத்தில் அவரது  கணக்கில் உள்ள இந்த மகப்பேறு கால நிதியை முழுமையாக எடுத்துக் கொள்ளலாம் என்றார். முறை சாரா தொழிலாளர்களுக்கு அரசு 6 மாத  விடுப்பு வழங்க இய லாது என்பதால் அவர்கள் மகப் பேறு காலத்தில்  பயன்பெற இது போன்ற திட்டம் செயல்படுத் தப்பட உள்ளது.
-விடுதலை,16.8.16

வீட்டுப் பணியாளர்களுக்கு விரைவில் இஎஸ்அய் திட்டம்


அய்தராபாத், ஆக.16 அனைத்து மக்களுக் கும் ஆரோக்கிய காப்பீடு அளிக்கும் மத்திய அரசின் திட்டத்தில் ஒரு பகுதியாக, தொழிலாளர் காப்பீட்டுத் திட்டத்தை (இஎஸ்அய்) வீட்டுப் பணியாளர்களுக்கும் விரிவுப்படுத்துவதற்காக, டில்லி, அய்தரா பாத் ஆகிய நகரங்களில் விரைவில் சோதனை முயற்சி நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, அய்தராபாதில் செய் தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
தொழிலாளர் காப்பீட்டுத் திட்டத் தில் வீட்டுப் பணியாளர்களையும் கொண்டு வரும் வகையில், புதிய திட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளோம்.
இஎஸ்அய்-யின் வசதிகளை வீட்டுப் பணியாளர்களுக்கும் அளிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். வீட்டுப் பணியாளர்களுக்கு மருத்துவ வசதி களை அளிப்பதற்காக, இந்தத் திட்டத் தின் கீழ் மாதந்தோறும் ரூ.200-அய் முத லாளிகள் செலுத்த வேண்டும்.
இந்தத் திட்டத்தை, டில்லி, அய்தரா பாத் ஆகிய நகரங்களில் முதலில் சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்த உள்ளோம்.
இந்த நடவடிக்கையில் தொண்டு நிறுவனங்களையும் ஈடுபடுத்த உள் ளோம். மேலும், மாநில அரசு களுட னும் பேச்சுவார்த்தை நடத்துவோம்.
அனைத்து அமைப்பு சாரா தொழி லாளர்களையும் சமூகப் பாது காப்புத் திட்டங்களின் கீழ் கொண்டு வர மத்திய அரசு கடமைப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள 5 கோடி கட்டடத் தொழிலாளர்களுக்கு தொழிலாளர் வைப்பு நிதியையும் தொழிலாளர் காப்பீட்டுத் திட்டத்தையும் வழங்கு வதற்கான நடவடிக்கைகள் தொடங்கப் பட்டுள்ளன.
மகப்பேறு விடுப்பு சட்டத் திருத்த மசோதா அண்மையில் நாடாளுமன்றத் தில் நிறைவேற்றப் பட்டதன் மூலம், பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு அளிப்பதில் நார்வே, கனடா ஆகிய நாடுகளை அடுத்து மூன்றாவது இடத் துக்கு இந்தியா முன்னேறியுள்ளது. புதிய மசோதாவின் மூலம், 18 லட்சம் பேர் பயனடைய உள்ளனர்.
தொழிலாளர் சட்டங்கள் முறையாக அமல்படுத்தப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க, அர்ப்பணிப்பு கொண்ட குழுக்களை அமைக்க முயற் சித்து வருகிறோம் என்று பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார்.
-விடுதலை,16.8.16

"குழந்தை பெற்றுத் தரும் இயந்திரங்களாக தாய்மார்களைப் பார்க்காதீர்கள்!"

மத்திய அரசுக்கு கனிமொழி எம்.பி. எச்சரிக்கை
புதுடில்லி, ஆக.12 "தாய்மார்களை குழந்தை பெற்றுத் தரும் இயந்திரமாகப் பார்க்காதீர்கள் என்றும் மத்திய அரசை நோக்கி" கழக மகளிரணிச் செயலாள ரும், மாநிலங்களவை தி.மு.கழகக் குழுத் தலைவரு மான கனிமொழி ஆவேசமாக தெரிவித்தார்.
பெண்களுக்கான மகப்பேறு விடுமுறை திருத்த மசோதா ஆகஸ்டு 11-ஆம் தேதி மாநிலங்களவையில் கொண்டு வரப் பட்டது.
இந்த திருத்த மசோதாவில் குழந்தை பெறும் பெண்களுக்கு மகப்பேறு விடுமுறை ஆறுமாதமாக அறிவிக்கப் பட்டது. ஆனால், கருத்தரிக்க வாய்ப் பில்லாத பெண்களுக்காக... தங்களது கருவில் குழந்தையைத் தாங்கி பெற்றுத் தரும் தாய்மார்களுக்கு இந்த ஆறுமாத விடுமுறை இல்லை என்றும், 15 முதல் 20 நாள் வரையிலான சாதாரண விடுமுறைதான் என்றும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை எதிர்த்து மாநிலங்களவையில் கனிமொழி பேசியதாவது:-
"பெண்களை குழந்தை பெறும் இயந்திரங்களாகப் பார்க்கா தீர்கள். பெற்ற குழந்தையோடு இருக்க வேண்டிய அந்தத் தாய்க்கு மகப்பேறு விடுப்பு என்பது நியாயமானதாக இல்லை. குழந்தை பெறுதல் என்பது பெண்களுக்கு மறு பிறப்பு மாதிரி. பிரசவம் ஆன தாய் மார்கள் அனைவரும் மீண்டும் ஆரோக்கியமான உடல் நலம் பெற ஒய்வு தேவை. எனவே, அனைத்து வித தாய்மார்களுக்கும்.
ஒரே மாதிரியான விடுப்பு என்றே இருக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார். ஆனால் கனிமொழி எம்.பி.க்கு பதிலளித்த மத்திய பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி, "மற்றவர்களுக்காக தங்கள் கருவில் குழந்தைகளை சுமந்து பிரசவிக்கும் பெண்கள். குழந்தை பெற்ற பிறகு குழந்தையுடனே இருப்பதில்லை. அதனால் அவர்கள் இந்த மகப்பேறு விடுமுறை சலுகைக்குள் வரமாட்டார்கள்" என்று தெரிவித்தார்.
 -விடுதலை,12.8.16