ஓசூர், ஆக. 10- ஓசூரில் ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ஒழித்துக் கட்டி அனைவரையும் நிரந்தரமாக்கக் கோரி கருத்தரங்கம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – தமிழகத் தொழிலாளர் முன்னணி சார்பில் பு.ஜ.தொ.மு மாவட்ட செயலாளர் இரா.சங்கர் தலைமையில் ஒசூர் ஆந்திரா சமிதியில் நடைபெற்றது.
திராவிடர் கழக தொழிலாளர் அணி சார்பில் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன் கலந்து கொண்டு உரையாற்றினார். இக்கருத்தரங்கில் தமிழக தொழிலாளர் முன்னணி மாவட்ட செயலாளர் சந்தோஷ்,ஒசூர் வழக்குரைஞர் சங்கம் இணைச்செயலாளர் வழக்குரைஞர் எம்.வெங்கடேஷ், தமிழ்நாடு தொழிற்சங்க நடுவம் பொதுச்செயலாளர் ஜே.ஆதிரூபன், ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பு சுந்தரம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாவட்ட தலைவர் இரவிச்சந்திரன், தமிழ்த்தேச குடியரசு இயக்கம் தலைமை குழு உறுப்பினர் க.இரா.தமிழரசன், பு.ஜ.தொ.மு.இ.கோ. வெங்கடேசன், புரட்சிகர மக்கள் அதிகாரம் வழக்குரைஞர் முரளி, ஜெயராமன், ஆகியோர் கருத்துரைக்கு பின் பெங்களூரு உயர்நீதிமன்றம் மாநில அய்.எப்.டி.யூ. தலைவர் சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியின் இடையே விடியல் காலை குழுவின் பறையிசை, புரட்சிகர பாடல்கள் பாடப்பட்டது.இந்நிகழ்ச்சியில் திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். திராவிடர்கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் மா.சின்னசாமி, மாவட்ட துணைச் செயலாளர் ச.எழிலன், மாநகர தலைவர் து.ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர் முடிவில் பு.ஜ.தொ.மு.இணைச் செயலாளர் இரவிச்சந்திரன் நன்றி கூறினார்.
-விடுதலை நாளேடு, 10.08.2026
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக