வெள்ளி, 29 அக்டோபர், 2021

அரசு ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி இருப்பை அறிந்துகொள்ள புதிய முறை

 

சென்னைஜூலை 23     அரசு ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி இருப்பை அறிந்துகொள்ள புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள் ளது.

தமிழ்நாடு மாநில கணக்காயர் அலுவலகம் கடந்த 14ஆம் தேதி முதல் மேம்படுத்தப்பட்ட ‘இன்டர் ஆக்டிவ் குரல் மறுமொழி’ (அய்.விஆர்.எஸ்.) முறையை அறிமுகம் செய்துள்ளதுஇந்த சேவையை 044-24325050 என்ற எண்ணை தொடர்புக்கொள்வதன் மூலம் பயன்படுத்தலாம்.

இந்த சேவையின் மூலமாக தமிழ்நாடு அரசு பணிநிலை சார்ந்த அனைத்து அய்..எஸ்அதி காரிகள்தமிழ்நாடு அரசு ஊழி யர்கள்ஆசிரியர்கள்சென்னை மற்றும் மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஊழியர் களின் பொது சேம நல நிதிஆசிரியர் சேம நல நிதி சந்தா தாரர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதி நடப்பு இருப்புநடப்பு ஆண்டில் பெற்ற கடன்விடுபட்ட தொகை மற்றும் கணக்கில் உள்ள இறுதித்தொகை பெறுவதற்கு அனுப்பப்பட்ட விண்ணப்பத்தின் நிலை ஆகியவற்றை பற்றிய விவரங் களை அறிந்துகொள்ள முடியும்.

ஓய்வூதியம்

தமிழ்நாடு ஓய்வூதிய விதிகளின் கீழ் ஓய்வூதியம் பெறத் தகுதியுடைய மேற்குறிப்பிட்ட அதிகாரிகள் ஓய்வூதியதாரர்கள் மற்றும் உள் ளாட்சி அமைப்புகளின் பள்ளிகள் உள்ளிட்ட அரசு சாரா கல்வி நிறு வனங்களின் பணியா ளர்கள் ஆகியோரின் ஓய்வூதிய விண்ணப் பங்களின் நிலையை அறியவும் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் ஓய்வூதியம் பெறும் பிற அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் சிறப்பு பிரிவு ஓய்வூதிய தாரர்களான அரசு கலைஞர்களை தவிர வேறு நபர்கள்கலைஞர் ஓய்வூதியம்தமிழ் அறிஞர் ஓய்வூ தியம்பத்திரிகையாளர் ஓய்வூதியம்நலிந்த விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம்சமஸ்கிருத அறிஞர் ஓய்வூதியம் போன்ற ஓய்வூதியம் பெறுவதற்கான விண்ணப்பங் களின் நிலையை அறியவும் இந்த வசதி பயன்படும்.

மேலும் சுயவரைதல் அதிகாரிகள் தங்களது ஊதிய சீட்டினை பதிவேற்றுதல் குறித்த தகவல்களையும் அறிந்து கொள்ள லாம்.

மேற்கண்ட தகவல் முதுநிலை துணை மாநில கணக்காயர் .தினகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக