வெள்ளி, 29 அக்டோபர், 2021

அரசு பெண் ஊழியர்களுக்கு 12 மாத மகப்பேறு விடுப்பு & ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும்

 

அரசாணை வெளியீடு

சென்னைஆக.25  நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடிஅரசு பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பை 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசாணையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசில் பணியாற்றும் திருமணமான பெண் ஊழியர்களுக்குஇரண்டு குழந்தைகள் வரையில் அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறதுஅந்த வகையில் கடந்த 2016ஆம்ஆண்டு 6 மாதங்களாக இருந்த மகப்பேறு விடுப்பானது 9 மாதங்களாக அதாவது 270 நாட்களாக உயர்த்தப்பட்டதுஇந்த விடுப்பு பிரசவத்துக்கு முன்பின் என பிரித்து எடுத்துக் கொள்ளவும்விடுப்பு காலத்தில் முழு சம்பளம் வழங்கவும் அனுமதிக்கப்பட்டதுஇதற்காக அடிப்படை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது.

நிதிநிலை அறிக்கையில்  அறிவிப்பு

இந்நிலையில்கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபோதுமகப்பேறு விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படுவதாக நிதியமைச்சர் அறிவித்தார்இதையடுத்துமகப்பேறு விடுப்பானது 12 மாதங்களாக உயர்த்தப்பட்டுஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறதுஜூலை 1ஆம் தேதிக்கு முன்னரே பெண் ஊழியர்கள் மகப்பேறு விடுப்பில் இருந்தால், 365 நாட்களுக்கு மிகாமல் அவர்கள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னைஆக.25 ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும்மீண்டும் இதில் மறுமதிப்பீட்டு முறைகள் நடத்தப்படாது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து வகைப் பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர ஒன்றிய அரசுமாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்அதன்படி நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்மொத்தம் 2 தாள்களைக் கொண்டது.

முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2ஆம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம்இதற்கிடையே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிலை இருந்ததுஅந்நிலையை மாற்றி ஆயுள் முழுவதும் டெட் சான்றிதழ் செல்லும் என்று ஒன்றியக் கல்வி அமைச்சகம் அண்மையில் அறிவித்ததுஇந்த அறிவிப்பு 2011இல் இருந்து தேர்வு எழுதியவர்களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆண்டுகள் முடிந்து டெட் சான்றிதழ் காலாவதியான நிலையில் உள்ள விண்ணப்பதாரர்களை மறுமதிப்பீடு செய்ய அல்லது புதிய டெட் சான்றிதழ்களை வழங்க அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று அப்போதைய ஒன்றியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மாநிலங்களுக்கு அறிவுறுத்தி இருந்தார்.

இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் செல்லுபடியாகும் காலத்தை ஆயுள்வரை நீட்டித்து உத்தரவிட்டதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளதுஇதற்கான அரசாணையை அரசின் முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக