• Viduthalai
புதுடில்லி, ஆக. 23- தொழிலா ளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎப் ஓவில் ஜூன் மாதத்தில் 12.83 லட்சம் சந்தாதா ரர்கள் சேர்க்கப்பட்டுள்ள னர். கரோனா தொற் றுக்கு பிறகு அதிகமான தொழிலாளர்கள் இணைந்துள்ளதாக வருங்கால வைப்பு நிதி அமைப்பு தெரிவித்துள்ளது.
நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்க ளின், தற்காலிக தரவு விவ ரங்களை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி வெளியிட் டது. இதில் கடந்த ஜூன் மாதம், 12.83 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்துடன் ஒப்பிடுகை யில் கரோனா தொற்றின் 2ஆவது தாக்கம் கடந்த ஜூன் மாதம் குறைந்தது.
இது தொழிலாளர்கள் எண்ணிக்கை மிக அதிகள வில் அதிகரிக்க வழிவகுத் துள்ளது. கடந்த மே மாதத் துடன் ஒப்பிடுகையில், நிகர சந்தாதாரர்கள் எண்ணிக் கையில் 5.09 லட்சம் பேர் அதிகரித்துள் ளனர்.
கடந்த ஜூன் மாதம் இணைந்த சந்தாதாரர் கள் 12.83 லட்சம் பேரில், 8.11 லட்சம் பேர், இபி எப்-ன் சமூக பாதுகாப்பு திட் டத்தில் இணைந்த புதிய உறுப்பினர்கள். அதே மாதத்தில் 4.73 லட்சம் சந்தாதாரர்கள் பணிமாற் றம் காரணமாக வெளி யேறி இபிஎப்ஓ அமைப் பில் மீண்டும் இணைந்து உள்ளனர்.
பெரும்பாலான சந்தாதாரர்கள், இபிஎப்ஓ அமைப்பில் தொடர்ந்து இருக்க விரும்புவதை இது காட்டுகிறது. இவர் களின் பழைய தொழிலா ளர் வைப்பு நிதி கணக்கு நிதிகள், புதிய நிறுவனத் தின் பி.எப் கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளன.
மாநில வாரியாக ஒப் பிடுகையில் மகாராட் டிரா, அரியானா, குஜ ராத், தமிழ்நாடு மற்றும் கருநாடகா ஆகிய மாநி லங்கள் தொழிலாளர்கள் சேர்ப்பில் இன்னும் முன் னணியில் உள்ளன. இந்த மாநிலங்களில் மட்டும் சுமார் 7.78 லட்சம் சந்தா தாரர்கள் கடந்த ஜூன் மாதத்தில் சேர்ந்துள்ள னர். இது கூடுதலாக சேர்ந்த, அனைத்து வயது பிரிவு மொத்த நிகர சந்தா தாரர்களில் 60.61 சதவீதம் என தொழிலாளர் வருங் கால வைப்பு நிதி அமைப்பு தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக