சென்னை, மே 29 தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எஃப்) தொடர்பான குறைதீர் கூட்டம் முகப்பேரில் உள்ள அம்பத்தூர் மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன அலுவலகத்தில் வரும் ஜூன் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து பி.எஃப். மண்டல ஆணையர் சைலேந்திரசிங் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொழி லாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், ஆர் 40 ஏ, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அலுவலக வளாகம், முகப்பேர் சாலை, முகப்பேர் கிழக்கு, சென்னை-37 என்ற முகவரியில் ஜூன் 10-ஆம் தேதி காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 044 -26350080, 26350120 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
- விடுதலை நாளேடு, 29.5.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக