வெள்ளி, 31 மே, 2019

பி.எஃப். அலுவலகத்தில் ஜூன் 10-இல் குறைதீர் கூட்டம்

சென்னை, மே 29  தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எஃப்) தொடர்பான குறைதீர் கூட்டம் முகப்பேரில் உள்ள அம்பத்தூர் மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன அலுவலகத்தில் வரும் ஜூன் 10-ஆம் தேதி  நடைபெறவுள்ளது.

இதுகுறித்து பி.எஃப். மண்டல ஆணையர் சைலேந்திரசிங் வெளியிட்ட செய்திக்குறிப்பு:  தொழி லாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், ஆர் 40 ஏ, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அலுவலக வளாகம், முகப்பேர் சாலை, முகப்பேர் கிழக்கு, சென்னை-37 என்ற முகவரியில் ஜூன் 10-ஆம் தேதி  காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 044 -26350080, 26350120 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

- விடுதலை நாளேடு, 29.5.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக