சென்னை, நவ.4 கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் வங்கி களில் பணியாற்றும் பணியாளர் களுக்கு ஊதிய உயர்வு அறிவிக் கப்பட்டுள்ளது. இதனால் 22 ஆயிரத்து 48 பணியாளர்கள் பயன்பெறுவதுடன், அரசுக்கு ஆண்டுக்கு ரூ.143.72 கோடி செலவு ஏற்படும்.
தமிழகத்தில் 113 ஆண்டுகளாக பாரம்பரியமிக்க கூட்டுறவு நிறுவனங்கள் சிறப்பாகச் செயல் பட்டு வருகின்றன. அகில இந்திய அளவில் பல விருது களையும் பெற்று சாதனை புரிந் துள்ளன. இத்தகைய சிறப்பு வாய்ந்த கூட்டுறவு கடன் நிறுவ னங்களில் பணியாற்றும் பணி யாளர்களின் ஊதிய விகிதத்தை திருத்தியமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். அவர் களது கோரிக்கையை ஏற்று புதிய ஊதிய விகிதங்களை பரிந்துரை செய்ய ஏதுவாக கூட்டுறவுத் துறை அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்தக் குழுக்கள் இப்போது பரிந்துரைகளை வழங்கியுள்ளன. மேலும், மாநில தலைமை கூட் டுறவு வங்கி மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி நிர்வாக இயக்குநர்களும், தங்களது வங்கிகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு புதிய ஊதிய விகிதத்தை நிர்ணயம் செய்ய பரிந்துரை செய்துள்ளனர்.
ஊதிய உயர்வு ஆய்வுக் குழுவும், வங்கி அதிகாரிகளும் அளித்த பரிந்துரைகளை ஏற்று புதிய ஊதிய உயர்வு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதிய உயர்வு ரூ.988-ம், அதிகபட்ச ஊதிய உயர்வு ரூ.4,613 வரையும் அளிக்கப்படும். இந்த ஊதிய உயர்வு கடந்த ஏப்ரல் மாதம் முதல் முன் தேதியிட்டு நிலுவைத் தொகையுடன் நடை முறைப் படுத்தப்படும்.
மத்திய கூட்டுறவு வங்கி களைச் சேர்ந்த பணியாளர்களுக்கு ரூ.1,114 முதல் அதிகபட்சமாக ரூ.16,963 வரையில் ஊதிய உயர்வு அளிக்கப்படும். இது கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு நிலுவைத் தொகையுடன் அளிக்கப்படும். நகர கூட்டுறவு வங்கிப் பணியா ளர்களுக்கு ரூ.455 முதல் அதிக பட்சமாக ரூ.16,485 வரையில் ஊதிய உயர்வு அளிக்கப்படும். இது, கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு நடைமுறைப்படுத்தப் படும்.
பணியாளர் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கங் களைச் சேர்ந்த பணியாளர்களுக்கு ரூ.3,200 முதல் ரூ.12,500 வரை ஊதிய உயர்வு அளிக்கப்படும். இந்த ஊதிய உயர்வு ஜூலை 1-ஆம் தேதி முதல் கணக்கிடப் பட்டு நிலுவைத் தொகையுடன் அளிக்கப்படும்.
இதே போன்று, நகரக் கூட்டுறவு, தொடக்கக் கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, தமிழ்நாடு மாநிலத் தலைமை கூட்டுறவு வங்கிகளைச் சேர்ந்த பணியா ளர்களுக்கு ரூ.1,180 முதல் ரூ.28,000 வரையில் நிலைகளுக்கு ஏற்ப ஊதிய உயர்வு அளிக்கப் படும். இந்த ஊதிய உயர்வால் கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் 22 ஆயிரத்து 48 பணியாளர்கள் பயன் பெறுவர். இதனால், அரசுக்கு ஆண்டுக்கு ரூ.143.72 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்று முதல்வர் எடப் பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
- விடுதலை நாளேடு, 4.11.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக