செவ்வாய், 13 நவம்பர், 2018

இந்திய தொழிலக உற்பத்தி வளர்ச்சி 4.5 சதவிதமாக சரிவு

புதுடில்லி, நவ. 13- சுரங்கம் மற்றும் பொறியியல் பொருள் கள் துறையில் காணப்பட்ட சுணக்க நிலையால், கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்திய தொழிலக உற்பத்தி வளர்ச்சி 4.5 சதவீதமாக குறைந்துள்ளது.

இதுகுறித்து மத்திய புள்ளி யியல் அலுவலகம் (சிஎஸ்ஓ) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கடந்தாண்டு செப்டம்பரில் தொழிலக உற்பத்தி வளர்ச்சி விகிதம் 4.1 சதவீதம் என்ற அளவில் காணப்பட்டது. இது, நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத் தில் திருத்திய மதிப்பீட்டில் 4.3 சதவீதத்திலிருந்து 4.6 சதவீத மாக அதிகரிக்கப்பட்டது.

இந்த நிலையில், செப்டம் பரில் அதன் வளர்ச்சி 4.5 சதவீ தமாக குறைந்துள்ளது. இது, நான்கு மாதங்களில் காணப் படாத சரிவு நிலையாகும்.

தொழிலக உற்பத்தி வளர்ச்சி கடந்த மே மாதத்தில் தான் 3.8 சதவீதம் என்ற அளவில் மிக குறைந்து காணப்பட்டது. ஜூன் மாதத்தில் இது முதல் முறையாக 6.9 சதவீதத்தையும், ஜூலையில் 6.5 சதவீதத்தையும் எட்டியிருந்தது.

ஆகஸ்ட் மாதத்தில் 7.6 சத வீதமாக இருந்த சுரங்க துறை யின் உற்பத்தி வளர்ச்சி செப் டம்பரில் 0.2 சதவீதமாக பின் னடைந்துள்ளது. அதேபோன்று, பொறியியல் பொருள்கள் துறை உற்பத்தி வளர்ச்சியும் 8.7 சதவீதத்திலிருந்து 5.8 சதவீத மாக குறைந்துள்ளது.

இருப்பினும், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி விகிதம் 3.8 சதவீதத்திலிருந்து அதிகரித்து 4.6 சதவீதமாகியுள் ளது. அதேபோன்று, மின்துறை உற்பத்தியும் 3.4 சதவீதத்திலி ருந்து ஏற்றம் கண்டு 8.2 சதவீத மாகியுள்ளது.

நடப்பாண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், இந்திய தொழிலக உற்பத்தி வளர்ச்சி விகிதம் 5.1 சதவீதத்தை எட்டியுள்ளது.

கடந்தாண்டில் இது 2.6 சத வீதமாக மட்டுமே காணப்பட் டது என சிஎஸ்ஓ அந்த அறிக் கையில் தெரிவித்துள்ளது

- விடுதலை நாளேடு, 13.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக