செவ்வாய், 13 நவம்பர், 2018

10ஆவது மாநில மாநாடு: தமிழ்நாடு

தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் அறிவிப்பு

சென்னை, நவ. 13- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் 10ஆவது மாநில மாநாட்டிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஜாக்டோ ஜியோ கோரிக்கையை ஏற்கும் அரசியல் கட்சி தலை வர்களை அழைக்க இருப்பதாக மாநில செயலாளர் மீனாட்சி சுந்தரம் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மாநில தலைவர் தியோடர் ராபின்சன் தலைமையில், பொதுச் செய லாளர் மீனாட்சி சுந்தரம், பொரு ளாளர் கணேசன் முன்னிலை யில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் கள் வருமாறு:

கடந்த ஓராண்டுக்கும் மேலாக பிரிந்து சென்று செயல் பட்டு வந்த ஜாக்டோ-ஜியோ கடந்த 9ஆம் தேதி பேச்சு வார்த்தை நடத்தி இணைந்து உள்ளதற்கு ஒருங்கிணைப்பா ளர்கள் மற்றும் உயர்மட்டக் குழுவினரையும் ஆசிரியர் மன் றம் பாராட்டுகிறது.

மேலும் பங்கேற்பு ஓய்வூ திய திட்டத்தை ரத்து செய்தல், பழைய ஒய்வூதியத் திட்டத் தையே அமுல்படுத்துதல், இடை நிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்காமல் இழைக்கப்பட்ட அநீதியை நீக்குதல், முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் 50க்கும்  மேற்ப்பட்ட அமைச்சுப் பணி யாளர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளைக் களைதல், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பகுதிநேர ஆசிரி யர்கள் மற்றும் சத்துணவுப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் காலமுறை ஊதியம்  வழங்குதல், 21 மாத ஊதிய நிலுவை தொகையை வழங்குதல், பள்ளிகளிலும், 5000 அரசு பள்ளிகளை மூடு வதை கைவிடுதல் ஆகிய கோரிக் கைகளை அரசு நிறைவேற்றும் வரை காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் டிசம் பர் 12ம் தேதி முதல் ஈடுபடுவது என ஒருங்கிணைந்த ஜாக்டோ ஜியோ எடுத்துள்ள முடிவை ஆசிரியர் மன்றம் வரவேற்கிறது.

இடைநிலை ஆசிரியர்க ளுக்கு மட்டும் 3 வகையான ஊதியம் வழங்குவதால் மத்திய அரசு ஊதியத்தைவிட மாதம் ரூ.15 ஆயிரம் இழப்பு ஏற்படும் வகையில் அநீதியை இழைத் துள்ளது. அக்கோரிக்கையை வலியுறுத்தி சிறை நிரப்பும் போராட்டம் விரைவில் நடத் தப்படும். ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தர நியமிக்கப்பட்ட ஒரு நபர்க்குழு வின் பதவிகாலம் 9வது முறை யாக நீட்டிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு தொடக் கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் 10வது மாநில மாநாட்டிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டா லின், ஜாக்டோ ஜியோவின் கோரிக்கைகளை ஏற்கும் அரசி யல் கட்சி தலைவர்கள் அனை வரையும் அழைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மாநில செயலாளர் மீனாட்சிசுந்தரம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

-  விடுதலை நாளேடு, 13.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக