சென்னை, ஏப்.21_ அரசு ஊழி யர்கள் -ஆசிரியர்களுக்கு 6 சதவீத அக விலைப்படியை தமிழக அரசு உயர்த்தி வழங்கியுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளதால், தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கும் போது, மாநில அரசு ஊழியர்களுக்கும் அதே அளவில் உயர்த்தி வழங்கப்படுவது வழக்கம்.
கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 6 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதனால், அகவிலைப்படியின் அளவு 119 சதவீதத்தில் இருந்து 125 சதவீதமாக அதிகரித்தது.
இந்த உத்தரவு விவரம்: தமிழக அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக் கப்படுகிறது. இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும். இந்த உயர்வால் சுமார் 18 லட்சம் அரசு அலுவலர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் பயனடைவர் என்று சண்முகம் தெரிவித்துள்ளார்.
-விடுதலை,21.4.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக