வியாழன், 26 மே, 2022

100 நாள் வேலை உறுதித் திட்ட தினக்கூலியில் மாற்றம்: தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட அநீதி


21  மாநிலங்கள்யூனியன் பிரதேசங் களில் 5 சதவீதத்திற்கும் குறைவான ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 10 மாநிலங் களுக்கு மட்டுமே 5சதவீதத்திற்கும் அதிக மான உயர்வு கிடைத்துள்ளதுஇவை ஏப் ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது

2022-2023 நிதியாண்டிற்கான கிராமப்புற வேலை உறுதித் திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் புதிய ஊதிய விகிதங்களை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

34 மாநிலங்களில் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 5 சதவீதத்திற்கும் குறைவாகவும், 10 மாநிலங்கள் 5 சதவீதத் திற்கும் அதிகமான உயர்வும் பெறுகின்றனமணிப்பூர்மிசோரம்திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களில் எவ்வித மாற்றமும் மேற் கொள்ளவில்லைஇந்த புதிய ஊதியம் ஏப் ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிர தேசங்களில்அதிகபட்சமாக கோவாவுக்கு 7.14 சதவீதம் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளதுஅதாவது, 2021-2022இல் தினக்கூலியாக ரூ.294 இருந்த நிலையில், 2022-2023க்கு 315ஆக உயர்ந்துள்ளதுகுறைவான ஊதிய உயர்வாக 1.77% மேகலாயாவுக்கு கிடைத்து உள்ளதுஅங்கு தினக்கூலி 226இல் இருந்து 230ஆக உயர்ந்துள்ளதுமேகாலயாவைத் தவிரஅருணாச்சலப் பிரதேசம்நாகாலாந்து  ஆகிய இரண்டு மாநிலங்களும் தினக்கூலி ஊதியம் 2 சதவீதத்திற்கும் குறைவான அதிகரிப்பைக் கண்டுள்ளன.

அசாம்தமிழ்நாடுபுதுச்சேரியில் ஊதியம் 2 முதல் 3 சதவீதம் வரை உயர்த் தப்பட்டுள்ளதுமகாராட்டிராஒடிசாதாத்ராநாகர் ஹவேலிடாமன் மற்றும் டையூவில் 3 முதல் 4% வரையும்குஜராத்உத்தரப்பிரதேசம்உத்தரகாண்ட்ராஜஸ் தான்மேற்கு வங்கம்சிக்கிம்ஹிமாச்சல பிரதேசம்அந்தமான் & நிக்கோபார் தீவுகள்பஞ்சாப்ஆந்திராதெலங்கானா ஆகிய மாநிலங்களில் 4 முதல் 5 சதவீதம் வரையும் ஊதிய உயர்வை பெற்றுள்ளன.

அரியானாசத்தீஸ்கர்மத்தியப் பிர தேசம்பீகார்ஜார்கண்ட்ஜம்மு & காஷ்மீர்லட்சத்தீவுகேரளாகருநாடகா மற்றும் கோவா ஆகிய 10 மாநிலங்கள் மட்டுமே 5 சதவீதத்திற்கும் அதிகமான ஊதிய உயர்வு கிடைத்துள்ளது.  அதாவது, 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான NREGS ஊதியங் கள் ஒரு நாளைக்கு ரூ. 4 முதல் ரூ. 21 வரை அதிகரிக்கப்பட்டுள்ளன.

MGNREGA ஊதிய விகிதங்கள் சிறிமி-கிலி (நுகர்வோர் விலைக் குறியீடு-விவசாயத் தொழிலாளர்மாற்றங்களின்படி நிர்ணயிக் கப்படுகின்றனஇது கிராமப்புறங்களில் பணவீக்கத்தின் அதிகரிப்பைப் பிரதிபலிக் கிறதுபுதிய ஊதிய விகிதங்களின்படிஅய்ந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங் களில் அதிக  NREGS ஊதியம் பெறுவதில் முதலிடத்தில் அரியானா (தினக்கூலி 331 ரூபாய்உள்ளதுஇதைத் தொடர்ந்துகோவா (ரூ315), கேரளா (ரூ311), கருநாடகா (ரூ309), அந்தமான் நிக்கோபார் (308) ஆகும்குறைவான ஊதிய உயர்வில் திரிபுரா (தினக்கூலி ரூ212), பிகார் (ரூ210), ஜார்க்கண்ட் (ரூ210), சத்தீஸ்கர் (ரூ204), மத்திய பிரதேசம் (ரூ204) ஆகும்.

உத்தரப்பிரதேசம்உத்தரகாண்ட் ஆகிய இரண்டுக்கும் ஒரு நாளைக்கு ரூ.213 ஆகவும்அருணாச்சலப் பிரதேசம்சிக்கி முக்கு ரூ.216 ஆகவும்ஒடிசா மற்றும் சிக்கி முக்கு ரூ.222 ஆகவும்மேற்கு வங்கத்தில் ரூ.223 ஆகவும்ஜம்மு-காஷ்மீருக்கு ரூ.227 ஆகவும் ஊதிய தொகை உள்ளது.

இதன் படி தமிழ்நாடு அதிக வரி வரு வாயை ஒன்றிய அரசுக்குக் கொடுத்த போதிலும் தொடர்ந்து அனைத்து விதங் களிலும் தமிழ்நாட்டை ஒன்றிய அரசு புறக்கணித்து வருகிறதுதற்போது நூறுநாள் வேலை வாய்ப்பு ஊதியம் வழங்குவதிலும் பார பட்சம் காட்டி நடந்துள்ளதுஎன்பது தெரிய வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக