வியாழன், 26 மே, 2022

வங்கி எழுத்தர் தேர்வில் தமிழ்மொழி புறக்கணிப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் வங்கி பணியாளர்கள் பங்கேற்பு

 

சென்னை, மே 26- வங்கி எழுத்தர் பணிக்கு தமிழில் தேர்ச்சி கட்டாயமில்லை.யா? தமிழ்நாட்டு இளைஞர்க ளின் வேலை வாய்ப்பை பறிக்கும் ஒன்றிய அரசின் சதித்திட்டத்தை கண் டித்து திராவிட மாணவர் கழகம் சார்பில் 24.5.2022 அன்று காலை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய பிற்படுத்தப்பட் டோர் கூட்ட மைப்பின் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி அவர்க ளின் தலைமையில் அதன் நிர்வாகிகள் பிரபாகரன், ராஜசேகரன், சுரேஷ் மற்றும் யூனியன் வங்கிப் பணியாளர்களின் சங்க நிருவாகிகள் டி.ரவிக் குமார், கே.சந்திரன் ஆகி யோர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக