உழைப்பவர் உலகு

பக்கங்கள்

  • முகப்பு
  • கோத்ரேஜ் தி.தொ.ச.[GODREJ DWU]

வெள்ளி, 10 ஜூன், 2022

தெய்வ வரி



   June 10, 2022 • Viduthalai

26.07.1925- குடிஅரசிலிருந்து... 

நம் தேசத்தில் நாம் கொடுக்கும் வரிக்கு அளவே இல்லை. அரசாங்க சம்பந்தத்தில் பூமிவரி, வருமானவரி, கள்ளுவரி, துணிவரி, சாமான் வரி முதலியவைகளோடு முனிசிபாலிடி வரி, போர்டுவரி, லஞ்ச வரி, மாமூல் வரி என்று இவ்வாறாக அநேக வரிகள் கொடுக்க வேண்டி இருக்கிறது. இதல்லாமல் தெய்வத்திற்காகவும், மதத்திற்காகவும் கொடுத்துவரும் வரி அளவுக்கு மீறினவைகளாய் இருப்பதோடு நமக்கு யாதொரு பிரயோஜனத் தையும் கொடுக்காமல் மேற்சொல்லிய அரசாங்க சம்பந்த வரிகளின் அளவைவிட ஏறக்குறைய அதிகமாகவே கொடுக்கப்படுகிறது. அன்றியும், இவ்வரிகளால் தத்துவ விசாரணையும், மத விசாரணையும் நாம் கொஞ்சமும் செய்வதிற்கில்லாமல் செய்து, நமது மூடநம்பிக்கையால் பிழைக்க வேண்டிய சிலரின் நன்மைக்காக அவர்கள் எழுதிவைத்ததையும் சொல்வதையும் நம்பி நாம் கஷ்டப்பட்டு வரி செலுத்துவதல்லாமல், வேறு என்ன உண்மை லாபம் அடைகிறோம்? தெய்வத்தை உத்தேசித்தோ, தலத்தை உத்தேசித்தோ, தீர்த்தத்தை உத்தேசித்தோ, நமது பிரயாணச் செலவு எவ்வளவு? பூஜை, பூசாரி காணிக்கை, பிரார்த்தனை முதலியவற்றுக்காக ஆகும் செலவு எவ்வளவு? சாதாரணமாய் திருப்பதி வெங்கடாசலபதி என்கிற தெய்வத்துக்கு மாத்திரம் வருஷம் ஒன்றுக்குப் பதினெட்டு லட்சம் ரூபாய் வரும்படி வருகிறது. இதைத் தவிர மேற்படி யாத்திரைக்காரர்களுக்கும் அங்குள்ள பூசாரிகளுக்காகவும் மற்றும் சில தர்மத்திற்காகவும் அங்கே போகும் ரயில் சத்தம், வண்டி சத்தத்திற்காகவும் ஆகும் செலவு எவ்வளவு? இதுபோலவே இமயம் முதல் கன்னியாகுமரி வரை உள்ள தீர்த்தம், தலம், கோவில் முதலியவைகளுக்கு மக்கள் போக்குவரவு செலவுகள் முதலியவைகளை நினைத்துப் பார்த்தால் உடல் நடுங்குகிறது. இஃதன்றி வீடுகளில் நடைபெறும் வைதீகச் சடங்குகளான கலியாணம், வாழ்வு, சாவு, திதி இவைகளுக்காகவும் அதை நடத்திவைக்கவும் புரோகிதர் பிராமணர்கள் செலவும் எவ்வளவாகிறது? இவைகளை எல்லாம் மக்களின் பேராசையும், மூடநம்பிக்கையும்தானே செய்விக்கின்றது. தாங்கள் எவ்வளவு கொடுமையும் பாவமும் செய்திருந்தாலும் மேற்கூறிய தெய்வயாத்திரையோ, வைதீகச் சடங்கோ செய்வதால் தப்பித்துக் கொள்ளலாமென்றும், தாங்கள் யோக்கியதைக்கு மேல் எதை விரும்பினும் பெற்றுவிடலாமென்றும் நினைக்கின்ற பேராசை நினைப்புகளும் இவைகளுக்குக் காரணமாய் இருப்பதன்றித் தங்கள் முன்னோர்கள் அவர்களின் குணகர்மயோக்யதையைப் பொறுத்தல்லாமல்,  தாம் வைதீகச்சடங்கு செய்து பிராமணர்களுக்குப் பணம் கொடுப்பதன் மூலமாய் அவர்களை மோட்சத்திற்கு அனுப்பிவிடலாம் என்கிற மூடநம்பிக்கையும் இவர்களை இப்படிச் செய்விக்கச் செய்கின்றது. இதனால் மக்கள் ஒழுக்கம் பெறுவதற்கு இடமுண்டாகின்றதா? ஒருவர் ஏமாறவும் மற்றொருவர் ஏமாற்றவும் தானே பழக்கப்படுகிறது. கடவுளின் உண்மைத் தத்துவத்தையும், தங்கள் தங்கள் செய்கைகளின் பலன்களையும் மக்களுக்குப் போதித்து வந்திருந்தால் இவ்வளவு பேராசையும், செலவும் தெய்வத்தின் பெயராலும் ஏமாற்றுதலாலும் ஏற்பட்டி ருக்கவே முடியாது. தெய்வத்திற்காகச் செலுத்தப்படும் காணிக்கைகள் என்னவாகின்றன?வைதிகச் சடங்குகளின் பலன்கள் என்னவாகின்றன? இவ்விரு கர்மங்களையும் நடத்தி வைப்பவர்களின் யோக்கியதைஎன்ன என்பதை மக்கள் கவனிப்பதில்லை. காளை மாடு கன்று போட்டதென்றால் கன்றுக்குட்டியைப் பிடித்துக் கொட்டத்தில் கட்டு என்றே சொல்லி விடுகிறோம். காளை மாடு எப்படி கன்று போடும் என்பதை நாம் கவனிப்பதே இல்லை. பூசாரிக்குப் பணம் கொடுப்பதாலும், காணிக்கைப் போடுவதாலும், நமது குற்றச் செயல்கள் எவ்வாறு மன்னிக்கப்படும்? நமது ஆசைகள் எவ்வாறு நிறைவேறும்? தெருவில் போகும் பிராமணர்களைக் கூப்பிட்டு அவர்களுக்கு அரிசி, பருப்பு, பணம், காசு கொடுப்பதாலும் அவர்கள் ஏதோ சில வார்த்தைகளை உச்சரிப்பதாலும் நமது முன்னோர்கள் எப்படிச் சுகப்படுவார்கள் என்று யோசிப்பதே இல்லை. இவைகளால் நமது பொருள், நேரம், தத்துவம் வீணாகப் போவதல்லாமல், ஒரு மனிதன் கொலை, கொள்ளை முதலிய துஷ்டச் செயல்கள் செய்யும் பொழுது தன்னுடைய பணச் செருக்கையும், வக்கீல்களையும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதையும் நினைத்துக் கொண்டு, இவர்களால் தப்பித்துக் கொள்ளலாமென்று எப்படித் தைரியமாய்ச் செய்கிறானோ அப்படியே இந்த க்ஷேத்திரங்களையும், காணிக்கைகளையும், புரோகிதர்களையும் நம்பிக்கொண்டு தைரியமாய்க் குற்றங்கள் செய்கிறான். அதோடு அல்லாமல் தேசத்தில் சோம்பேறிகளும், கெட்டகாரியங்களும் வளருகின்றன. நல்ல யாத்திரை தலம் என்று சொன்னால் நல்ல வியாபார தலம் என்பது தான் பொருளாக விளங்குகிறது. தேர்த்திருவிழா தலங்களுக்குப் போனவர்களுக்கும், யாத்திரை ஸ்தலங்களுக்கு போனவர்களுக்கும் அநேகமாக இதன் உண்மை விளங்காதிருக்காது. நல்ல புரோகிதர்கள் என்போர்கள் தங்கள் வரும்படியை விபச்சாரத்திற்கும். சூதுக்கும், போதை வதுகளுக்குமே பெரும்பான்மையாக உபயோகித்து வருகின்றனர். வைதீகச் சடங்கைப் பற்றி ஒரு பெரியாரால் சொல்லப்பட்ட ஒரு கதையைச் சொல்லி இக்கட்டுரையை முடிக் கிறோம். ஒரு ஆற்றங்கரை ஓரத்தில் ஒரு புரோகிதர் ஒருவருக்கு வைதீக கர்மம் செய்து வைத்துக்கொண்டிருக்கும்பொழுது, தான் கிழக்கு முகமாக நின்று தன் இரு கைகளாலும் தண்ணீரை அள்ளி இறைத்துக் கொண்டிருந்தார். அதைக் கண்டு ஒரு பெரியார், தான் மேற்கு முகமாய் நின்று தன் இரு கைகளாலும் தண்ணீரை அள்ளி இறைத்தார்.

புரோகிதர்: அய்யா, என்ன மேற்கு முகமாய்ப் பார்த்து தண்ணீரை இறைத்துக் கொண்டிருக்கிறீர்?

பெரியார் : நீங்கள் கிழக்கு முகமாய்ப் பார்த்து எதற்காகத் தண்ணீர் இறைக்கிறீர்கள்?

புரோகிதர் : இது, மேல் உலகத்திலுள்ள பிதுர்க்களைப் பரிசுத்தமாக்கும்.

பெரியார் : நான் இறைப்பது என்னுடைய காய்கறித் தோட்டத்தின் செடிகளை நன்றாக வளர்க்கும்.

புரோகிதர் : இங்கு நின்று கையால் வாரி இறைப்பது வெகுதூரத்திலுள்ள தோட்டத்திற்கு எவ்வாறு போய்சேரும்? பயித்தியமாய் இருக்கிறீர்களே!

பெரியார் : நீர் ! இறைக்கும் தண்ணீர் மாத்திரம் என்னுடைய தோட்டத்தை விட எத்தனையோ அதிக தூரத்திலிருக்கும் மேல் உலகத்திற்கு எப்படிப் போய்ச் சேரும்?

புரோகிதர் :  (வெட்கத்துடன்) இந்த வார்த்தையை இவ்வளவுடன் விட்டு விடுங்கள். வெளியில் சொல்லி என் வரும்படியைக் கெடுத்துவிடாதீர்கள்.

இஃதல்லாமல் குருமார்களென்று எத்தனை யோ பேர் நமது நாட்டிடைத் தோன்றி மக்களைத் தம் சிஷ்யர்களாக்கி அவர்களிடை எவ்வளவு பணம் பறித்துப் பாழாக்குகிறார்கள் என்பதைப் பற்றி மற்றொரு சமயம் எழுதுவோம்.


இடுகையிட்டது dwu நேரம் 8:27 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: பெரியார், வரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

திதொக கொடி

திதொக கொடி
திராவிடர் கழக தொழிலாளர் கொடி

உழைப்பாளர் சிலை

உழைப்பாளர் சிலை
Powered By Blogger

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

லேபிள்கள்

  • 100 நாள்
  • 100 நாள் வேலை
  • 100 வயது
  • 100நாள்
  • 20 விழுக்காடு
  • 24 மணி நேரம்
  • 4 நாட்கள் வேலை
  • அகவிலை படி
  • அகவிலைப்படி
  • அதிக ஓய்வூதியம்
  • அபராதம்
  • அமைச்சர்
  • அமைப்புசாரா
  • அமைப்புசாரா தொழிலாளர்
  • அயல்நாட்டு வேலை
  • அயலக தமிழர்
  • அர்ச்சகர்
  • அரசாணை
  • அரசு ஊதியம்
  • அரசு ஊழியர்
  • அரசு மருத்துவமனை
  • அரசு வேலை
  • அறநிலையத்துறை
  • அறிக்கை
  • ஆசிரியர்
  • ஆசிரியர் அறிக்கை
  • ஆசிரியர் பணி
  • ஆசிரியர்கள்
  • ஆட்டோ சங்கம்
  • ஆணை
  • ஆதார்
  • ஆர்ப்பாட்டம்
  • இஎஸ்அய்
  • இங்கிலாந்து
  • இசைக் கலைஞர்
  • இடஒதுக்கீடு
  • இணையம்
  • இந்திய ஸ்டேட் வங்கி
  • இரயில்வே
  • இரவு
  • இரவுப்பணி
  • இலா பட்
  • இழப்பீடு
  • இஸ்திரி பெட்டி
  • இஸ்ரேல்
  • உச்ச நீதி மன்றம் தீர்ப்பு
  • உச்ச வரம்பு
  • உச்சவரம்பு வயது
  • உட்கார்ந்து பணி
  • உத்தரவு
  • உதவித்தொகை
  • உயர்நீதிமன்றம்
  • உயர்நீதிமன்றம் உத்தரவு
  • உற்பத்தி
  • உறுப்பினர்
  • ஊதிய உயர்வு
  • ஊதியக்குறைப்பு
  • ஊதியம்
  • ஊதியம் வழங்குதல்
  • ஊரக வேலை
  • ஊரக வேலை உறுதி
  • ஊரக வேலைவாய்ப்பு
  • எழுத்தர்
  • ஏழை
  • ஒடிசா
  • ஒதுக்கீடு
  • ஒப்பந்த அடிப்படை
  • ஒப்பந்த ஊழியர்
  • ஒப்பந்தம்
  • ஒபிசி
  • ஒரு லட்சம் பயனாளிகள்
  • ஒன்றிய அரசு
  • ஓட்டுநர்
  • ஓபிசி சான்றிதழ்
  • ஓய்வு ஊதிய ஆணை
  • ஓய்வு பெற்ற தொழிலாளர்
  • ஓய்வு வயது
  • ஓய்வூதியம்
  • கட்டுமானத் தொழிலாளர்
  • கட்டுமானத் தொழிலாளர்கள்
  • கடிதம்
  • கடை கள் மற்றும் நிறுவனங்கள்
  • கடை திறப்பு
  • கடைகள்
  • கடைகள் மற்றும் நிறுவனங்கள்
  • கணக்கெடுப்பு
  • கம்யூனிஸ்ட் கட்சி
  • கருணை அடிப்படை
  • கருணைப் பணி
  • கருநாடகா
  • கலந்துரையாடல்
  • காணொலி
  • காலிப்பணியிடங்கள்
  • காவல்
  • கிண்டி தொழிற்பேட்டை
  • கிராமப்புற வேலைத் திட்டம்
  • குடும்ப ஓய்வூதியம்
  • குடும்ப நலன்
  • குழந்தை தொழிலாளர்
  • குழு
  • குறைந்த வருமானம்
  • குறைந்தபட்ச ஊதியம்
  • குறைந்தளவு ஊதியம்
  • கேரளா
  • கைது
  • கையேடு
  • கொத்தடிமை
  • கோரிக்கை
  • சட்ட திருத்தம்
  • சட்ட விதிகள்
  • சட்டத் திருத்தம்
  • சட்டம்
  • சத்துணவு ஊழியர்
  • சந்திப்பு
  • சம ஊதியம்
  • சாதனை
  • சாம்சங்
  • சாம்சங் தொழிலாளர்கள்
  • சான்றிதழ்
  • சிக்கிம்
  • சிறுசேரி
  • சிறுவர்
  • சுகாதாரபணி
  • சுழற்சி அடிப்படையில் பணி
  • சுற்றுச்சூழல்
  • சேமநலநிதி பிஎப்
  • தகுதித் தேர்வு
  • தமிழ்
  • தமிழ் வழி படிப்பு
  • தமிழ்நாடு
  • தரவு மய்யம்
  • தற்காலிக பணியாளர்
  • தாம்பரம்
  • திராவிடர் தொழிலாளரணி
  • திருத்தம்
  • தில்லி கடைகள் சட்டம்
  • திறந்தவெளி பல்கலை
  • தினக்கூலி
  • தீர்ப்பு
  • தீர்மானம்
  • துபாய்
  • தேசிய அளவில்
  • தேசிய அளவிலான குறைந்தபட்ச ஊதியம்
  • தேயிலைத் தோட்டம்
  • தேர்தல்
  • தொ.மு.ச.
  • தொ.மு.ச. மாநாடு
  • தொகுப்பூதிய பணி
  • தொடக்கப் பள்ளி
  • தொழில்
  • தொழில் கடன்
  • தொழில் மனைப் பட்டா
  • தொழில் முகவர்
  • தொழில் முனைவோர்
  • தொழில் வளாகம்
  • தொழிலாளர்
  • தொழிலாளர் அமைச்சர்
  • தொழிலாளர் கூட்டம்
  • தொழிலாளர் நல நிதியம்
  • தொழிலாளர் நலத் துறை
  • தொழிலாளரணி
  • தொழிலாளி
  • தொழிற்சங்கம்.
  • தொழிற்சாலை
  • தொழிற்சாலைகள் சட்டம்
  • நடவடிக்கை
  • நல வாரியம்
  • நலச் சட்டங்கள்
  • நலத்திட்ட உதவிகள்
  • நலத்துறை
  • நலவாரியம்
  • நன்கொடை
  • நாட்டுப்புற கலைஞர்கள்
  • நான் முதல்வன்
  • நிதி
  • நிதி ஒதுக்கீடு
  • நிதியுதவி
  • நியமனம்
  • நிரந்தரம்
  • நிலை ஆணைகள்
  • நிலையாணை
  • நிறுவன பதிவுச் சான்றிதழ்
  • நிறுவனம்
  • நீக்கம்
  • நீதிமன்றம்
  • நீதிமன்றம் ஆணை
  • நூல் வெளியீடு
  • நேரம்
  • படிப்பு
  • பணி ஆணை
  • பணி ஓய்வு
  • பணி நியமன ஆணை
  • பணி நியமனம்
  • பணிக்காலம்
  • பணிக்கொடை
  • பணிநீக்கம்
  • பணியிடை நீக்கம்
  • பத்திரிகையாளர்
  • பதவி உயர்வு
  • பதிவு
  • பதிவை புதுப்பித்தல்
  • பயிர்க் கடன்
  • பயிற்சி
  • பயிற்சி வகுப்புகள்
  • பயிற்சிப் பள்ளிகள்
  • பழங்குடியினர்
  • பாகுபாடு
  • பாதிப்பு
  • பாராட்டு
  • பி.எப்.
  • பிற்படுத்தப்பட்டோர்
  • பிற்படுத்தப்பட்டோர் சங்கம்
  • பின்னலாடை
  • பிஜேபி
  • புகார் குழு
  • புத்தொழில்
  • புதிய இணையதளம்
  • புதுப்பிப்பு
  • புலம் பெயர் தொழிலாளர்
  • புலம்பெயர் தமிழர்
  • புறக்கண்ணிப்பு
  • பெண்
  • பெண்கள்
  • பெரியார்
  • பெல் நிறுவனம்
  • பேச்சுவார்த்தை
  • பொதுப்பிரிவு
  • பொதுவிடுமுறை
  • பொருளாதாரம்
  • பொறுப்பாளர்
  • போக்குவரத்து
  • போக்குவரத்து ஊழியர்
  • போக்குவரத்து கழகங்கள்
  • போக்குவரத்துக் கழகம்
  • போனஸ்
  • மகப்பேறு விடுப்பு
  • மகளிர் சுய உதவிக் குழு
  • மகளிர் புகார்
  • மத்திய ஆரசு
  • மருத்துவ கல்லூரி
  • மருத்துவ காப்பீடு
  • மருத்துவத்துறை
  • மாதவிலக்கு விடுப்பு
  • மாநாடு
  • மாநில மாநாட்டு
  • மாநில மாநாடு
  • மாற்றுத் திறனாளி
  • மாற்றுத் திறனாளிகள்
  • மாற்றுத் திறனாளிகள் சட்டம்
  • மின் ஊழியர்
  • மீட்பு
  • மு.சண்முகம்
  • முத்தரசன்
  • முதல்வர்
  • முதலமைச்சர்
  • முதலாளி
  • முதலீடு
  • முன்னுரிமை
  • மூத்தவர்
  • மே தினம்
  • மே நாள்
  • யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா
  • யூனியன் வங்கி
  • ரயில்வே
  • ரேஷன்
  • வங்கி
  • வங்கி தொழிற்சங்கம்
  • வசதிகள்
  • வட்டி
  • வட்டி குறைப்பு
  • வடமாநில தொழிலாளர்
  • வணிகம்
  • வணிகர்
  • வணிகவரி
  • வயது
  • வயது உச்சவரம்பு
  • வரவேற்பாளர்
  • வரி
  • வருங்கால வைப்பு நிதி
  • வருமான வரி
  • வருமானம்
  • வழக்கு
  • வாக்குறுதி
  • வாடகைத் தாய்
  • வாரியம்
  • வாழ்த்து
  • வாழ்நாள்
  • விடுப்பு
  • விடுமுறை
  • விபத்தில் உயிரிழப்பு
  • விருப்ப ஓய்வு
  • விலக்கு
  • விளையாட்டு
  • வெகுமதி
  • வெளி மாநிலத் தொழிலாளர்
  • வெளிநாடு
  • வெளிமாநில தொழிலாளர்கள்
  • வெளிமாநிலம்
  • வெளியேற்றம்
  • வேலை
  • வேலை உறுதியளிப்பு
  • வேலை நாள்கள்
  • வேலை நிறுத்தம்
  • வேலை நீக்கம்
  • வேலை நேரம்
  • வேலை வாய்ப்பு
  • வேலை வாய்ப்புகள்
  • வேலைவாய்ப்பு
  • வேலைவாய்ப்புத் திட்டம்
  • வேளாண் துறை
  • வேளாண்மை
  • ஜாக்டோ-ஜியோ
  • standing order

இந்த வலைப்பதிவில் தேடு

பக்கங்கள்

  • முகப்பு

மொத்தப் பக்கக்காட்சிகள்

பிரபலமான இடுகைகள்

  • தமிழக அரசு ஊழியர்களுக்கு படி உயர்வு: அரசு ஆணை வெளியீடு
    சென்னை, அக். 18- அரசு ஊழியர் களுக்கு மருத்துவப் படி, இடர் படி, பராமரிப்பு படி உள்ளிட்ட  படிகளை உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இ...
  • நாடாளுமன்றத்தில் போனஸ் மசோதா நிறைவேறியது
    புதுடில்லி, டிச.23-  20 அல்லது அதற்கு மேற்பட்டோர் பணியாற்றும் தொழிற்சாலைகளில் ஆண்டுதோறும் பணியாளர்களுக்கு போனஸ் வழங்க போனஸ் சட்டம்-1965...
  • க.தமிழினியன்¢ பணிநிறைவு பாராட்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்று வாழ்த்து
    சென்னை, பிப். 3-  திராவிடர் தொழிலாளர் கழகத்தின் செயலாளர் க.தமிழினியன் பணிநிறைவு பாராட்டு விழா மற்றும் அவர் எழு திய தமிழ் தமிழர் ...
  • போனஸ் வழங்கல் சட்ட திருத்தம்-2016
  • வேலையின்மை, குறைவான ஊதியம் ஏன்? பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி
    புதுடில்லி, டிச. 5 நாட்டில் வேலையின்மை பிரச்சினை ஏன் தொடர்கிறது? தொழிலாளர்களுக்கு குறைவான ஊதியம் ஏன் வழங்கப்படுகிறது? ஆகிய கேள்விக...
  • கருணை அடிப்படையில் பணி வாய்ப்பு உயர்நீதிமன்றம் உத்தரவு
           சென்னை, மே 16-_ கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு பதவியை பெறுவ தற்கு கருணை அடிப் படையில் பணியில் சேர்ந் தவர்களுக்கு உரிமை உள் ளது ...
  • தொழிலாளர் விடுதலையே தமிழர் விடுதலை
    - தந்தை பெரியார் தலைவரவர்களே! தாய்மார்களே! தோழர்களே! மற்றும் முத்தையா முதலி யார், தாவூத்ஷா முதலிய தலைவர்களே! இன்று இங்கு நீங்கள் லட்...
  • தேசிய அடிநிலை குறைந்த அளவு ஊதியம்(NFLMW)மீண்டும் உயர்வு-W.E.F. 01.07.2015
              இந்தியா முழுவதும் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கென்று இதைவிட குறைவாக கூலி கொடுக்கக்கூடாது என்று ஒரு தொகையை இந்திய தொழிலாளர் அம...
  • கருணை அடிப்படையில் வேலை கோரி 35 ஆண்டுகளாக போராடியவருக்கு வேலை உயர் நீதிமன்றம் உத்தரவு
    மதுரை, செப்.4_ நில அளவைத்துறையில் பணியின் போது தந்தை இறந்ததால்,  கருணை அடிப்படையில் வேலை கேட்டு 35 ஆண்டாக போராடியவருக்கு வேலை வழங்க உயர்நீ...
  • பிஎஃப் கணக்கு… கவனிக்க வேண்டிய 10 முறைமைகள்!
    By  vayal  on  25/08/2015 மா தச் சம்பளம் வாங்கும் அனைவருக்கும் பிஎஃப் கணக்கு என்பது நிச்சயம் இருக்கும். பிஎஃப் கணக்கில் தெரிந்து வை...

Translate

என்னைப் பற்றி

dwu
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2025 (8)
    • ►  மே (3)
    • ►  ஏப்ரல் (5)
  • ►  2024 (37)
    • ►  டிசம்பர் (2)
    • ►  அக்டோபர் (8)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (3)
    • ►  மே (7)
    • ►  மார்ச் (4)
    • ►  பிப்ரவரி (6)
  • ►  2023 (103)
    • ►  நவம்பர் (6)
    • ►  ஆகஸ்ட் (11)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (29)
    • ►  ஏப்ரல் (12)
    • ►  மார்ச் (28)
    • ►  பிப்ரவரி (6)
    • ►  ஜனவரி (5)
  • ▼  2022 (27)
    • ►  டிசம்பர் (3)
    • ►  நவம்பர் (5)
    • ►  ஜூலை (3)
    • ▼  ஜூன் (2)
      • தமிழ்நாட்டில் கடைகள், வணிக நிறுவனங்கள் 24 மணி நேரம...
      • தெய்வ வரி
    • ►  மே (11)
    • ►  மார்ச் (2)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2021 (22)
    • ►  அக்டோபர் (16)
    • ►  ஆகஸ்ட் (6)
  • ►  2019 (46)
    • ►  டிசம்பர் (5)
    • ►  அக்டோபர் (2)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஜூலை (5)
    • ►  மே (9)
    • ►  ஏப்ரல் (3)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (9)
    • ►  ஜனவரி (4)
  • ►  2018 (16)
    • ►  நவம்பர் (11)
    • ►  அக்டோபர் (2)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜனவரி (2)
  • ►  2017 (58)
    • ►  அக்டோபர் (1)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (3)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  மார்ச் (4)
    • ►  பிப்ரவரி (21)
    • ►  ஜனவரி (21)
  • ►  2016 (43)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (1)
    • ►  ஆகஸ்ட் (9)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (10)
    • ►  பிப்ரவரி (5)
    • ►  ஜனவரி (1)
  • ►  2015 (62)
    • ►  டிசம்பர் (3)
    • ►  நவம்பர் (4)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (7)
    • ►  ஆகஸ்ட் (19)
    • ►  ஜூலை (6)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (2)
    • ►  ஜனவரி (1)
  • ►  2014 (1)
    • ►  நவம்பர் (1)
பட சாளரம் தீம். Blogger இயக்குவது.