செவ்வாய், 2 ஜூலை, 2019

சம ஊதியம் கேட்டு பெண்கள் போராட்டம்

ஜெனிவா, ஜூன் 6- சுவிட்சர் லாந்தில் ஆண்களுக்கு நிக ராக பெண்களுக்கு சம ஊதி யம் வழங்க வேண்டி 1991 ஜூன் 14ஆம் நாள் 50 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட பெண் கள் அலுவலகத்திலிருந்தும், வீட்டிலிருந்தும் வெளியேறி போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

இப்போராட்டம் நடந்து 30 வருடங்கள் கடந்தும் இந்த விவகாரத்தில் பெரிய அளவு மாற்றங்கள் ஏதும் ஏற்படவில்லை என தொழிற் சங்கங்களும் பெண்கள் உரி மைகள் அமைப்பும் தெரிவிக் கின்றன.

‘சம உரிமை, சம ஊதியம்’ என்ற கோரிக்கையை வலி யுறுத்தி மீண்டும் போராட் டம் நடத்த நாடு முழுவதிலும் உள்ள பெண்கள் தயாராகி வருகின்றனர். வரும் 14-ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

சுவிட்சர்லாந்தில் பெண் களின் ஊதியம் ஆண்களின் ஊதியத்தை விட 20% குறை வாகவே உள்ளது. மேலும் கல்வித்தகுதி சமமாக இருந் தாலும் பெண்களின் ஊதியம் ஆண்களின் ஊதியத்தை விட 8% குறைவாகவே உள்ளது.

கடந்த ஆண்டு சுவிட்சர் லாந்தின் மிகப்பெரிய தொழிற்சங்கமான யூ.என்.அய்.ஏ. வெளியிட்ட அறிக் கையில், கல்வித்தகுதியும், துறை சார்ந்த அனுபவமும் சமமாக இருந்தாலும் அவ ரது வேலைக்காலத்தில், பெண் என்ற ஒரே காரணத்தினால் ஊதியம் வாயிலாக 300000 ப்ரான்க் (இந்திய மதிப்பில் ரூ.2.09 கோடி) இழப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க நடவடிக்கை, பெண் களின் வேலைக்கு ஏற்ற சம்பளம் மற்றும் மரியாதை உள்ளிட்ட பல கோரிக்கைக ளையும் போராட்டக்குழுவி னர் வலியுறுத்த உள்ளனர்.

- விடுதலை நாளேடு, 6 .6.2019

கடைகள், வர்த்தக நிறுவனங்களை 24 மணி நேரமும் திறந்து வைக்கலாம்

கடைகள், வர்த்தக நிறுவனங்களை 24 மணி நேரமும்

திறந்து வைக்கலாம்:  தமிழக அரசு அனுமதி

சென்னை, ஜூன் 7 தொழில் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பை அதிகரிக்கும் விதமாக தமிழகத்தில் 24 மணிநேரமும் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,  வரும் ஜூலை 1 ஆம் தேதி அமலுக்கு வரும் இந்த அரசாணையின்படி 24 மணி நேரமும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவகங்கள், விடுதிகள், திரையரங்குகள் ஆகியவை 365 நாட்களும் திறந்திருக்கலாம். அதே நேரத்தில் ஒரு பணியாளரை ஒரு நாளைக்கு 8 மணி நேரம் மட்டுமே பணியில் ஈடுபடுத்த வேண்டும். இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் பணியாற்றக் கூடாது.

பெண்கள் இரவில் பணி செய்வதாக இருந்தால் அவர்களிடம் எழுத்துப்பூர்வமான அனுமதி பெறுவதோடு, இரவு 8 மணியில் இருந்து காலை 6 மணி வரை அவர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு பணியாளருக்கும் சுழற்சி முறையில் கட்டாயம் வார விடுமுறை அளிக்க வேண்டும்.

விடுமுறை நாட்களிலோ அல்லது வேலைக்கான நேரத்தை தவிர கூடுதல் நேரமோ பணியாளரை கட்டாயப்படுத்தி வேலை வாங்கினால் அந்த நிறுவன உரிமையாளர் அல்லது மேலாளருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

8 மணி நேரத்தை தவிர கூடுதல் நேரம் பணியாளர் விருப்பப்பட்டு வேலை செய்தால் அவர்களது வங்கிக் கணக்கில் தான் அந்த பணத்தை சேர்க்க வேண்டும்.

ஷிப்ட் அடிப்படையில் பணிபுரியும் பெண்களுக்கு, நிறுவனத்தின் முக்கிய நுழைவு வாயில் வரையில் வாகன வசதிகளை கட்டாயம் அந்த நிறுவனம் அளிக்க வேண்டும்.

பாலியல் ரீதியான தொந்தரவுகளை தடுப்பதற்காக நிறுவனத்தில் கட்டாயம் பெண்கள் தலைமையிலான புகார் அளிக்கும் குழு இருக்க வேண்டும்.

ஒவ்வொரு நிறுவனமும் யார் யார் இன்று வேலைக்கு வருவார்கள் யார் யாருக்கு விடுமுறை என்ற தகவலை தெரியப்படுத்த வேண்டும்.

இந்த புதிய அரசாணை அடுத்த 3 ஆண்டுகள் வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- விடுதலை நாளேடு, 7.6.19

வெள்ளி, 31 மே, 2019

பி.எஃப். அலுவலகத்தில் ஜூன் 10-இல் குறைதீர் கூட்டம்

சென்னை, மே 29  தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எஃப்) தொடர்பான குறைதீர் கூட்டம் முகப்பேரில் உள்ள அம்பத்தூர் மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன அலுவலகத்தில் வரும் ஜூன் 10-ஆம் தேதி  நடைபெறவுள்ளது.

இதுகுறித்து பி.எஃப். மண்டல ஆணையர் சைலேந்திரசிங் வெளியிட்ட செய்திக்குறிப்பு:  தொழி லாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், ஆர் 40 ஏ, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அலுவலக வளாகம், முகப்பேர் சாலை, முகப்பேர் கிழக்கு, சென்னை-37 என்ற முகவரியில் ஜூன் 10-ஆம் தேதி  காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 044 -26350080, 26350120 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

- விடுதலை நாளேடு, 29.5.19

ஊரக வேலை திட்டத்தில் பணி வழங்காததால் நகரங்களில் குடியேறும் கிராம மக்கள் கூடுதல் நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

சென்னை, மே 29 - மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத் தில் முறையாக வேலை வழங்காததால் கிராமப்புறங்களில் இருந்து வேலைக் காக மக்கள் நகரங்களில் குடியேறி வருகின்றனர். எனவே, இத்திட்டத்தில் முறைகேடுகளைக் களைந்து, கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என விவசா யிகள் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ள னர்.

இந்தியா முழுவதும் கடந்த 2005 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டது. விவசாயப் பணிகள் இல்லாத காலங்களில் கிரா மப்புற மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்தில், நாள் கூலியாக ரூ.224 வழங்கப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக ஊரக வேலை உறுதி திட்டப் பணிகளில் இயந்திரங்களை பயன்படுத்தி முறை கேடுகள் நடப்பதாகவும், சரிவர வேலை வழங்குவதில்லை எனவும் கூறி, பல்வேறு அரசு அலுவலகங்களில் கிராமத் தொழிலாளர்கள் மனு அளித்து வருகின்றனர். இதுகுறித்து, அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க தூத்துக்குடி மாவட்டத் தலைவர் குரவீந்திரன் கூறியதாவது: இத்திட் டத்தின் படி அடையாள அட்டை வைத்துள்ள குடும்பத்துக்கு 100 நாட் கள் வேலை வழங்க வேண்டும். அப் படி வேலை வழங்காத நாட்களுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண் டும். ஆனால், அதிகாரிகள் இவ்வாறு வழங்குவதில்லை. இது சட்டவிரோதமாகும்.

இத்திட்டத்தில் இயந்திரங்கள் பயன்படுத்த அனுமதி இல்லை . ஆனால், சில இடங்களில் ஜேசிபி உள்ளிட்ட இயந்திரங்களை பயன் படுத்தி முறைகேடு நடந்து வருகிறது. மத்திய அரசிடமிருந்து நிதி வரவில் லையென எனக் கூறி, தற்போது, 5 சதவீத பணியாளர்களுக்கு கூட வேலை வழங்குவதில்லை . மத்திய அரசு இத்திட்டத்துக்கான நிதியை குறைக்கா மல் வழங்கவேண்டும். முழுமையான கூலி ரூ.224 வழங்க வேண்டும். இத்திட்டத்தில் முறைகேடுகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் கே.பி. பெரு மாள் கூறும்போது, "100 நாள் திட்டத்தில் வேலை இல்லாததால் மக்கள் கிராமங்களில் இருந்து வேலைக்காக நகரங்களில் குடியேறி வருகின்றனர். இத்திட்டத்தை முடக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட்டு, முறையாக செயல்படுத்த வேண்டும்" என்றார்.

ஊரக வளர்ச்சித்துறை அதி காரிகள் கூறும்போது, "இத்திட்டத் தில் அனைத்தும் ஆன்லைன் முறை யில் மேற்கொள்வதால் தவறுகள் நடப்பதற்கு வாய்ப்பில்லை. மேலும், ஜூன் 1 ஆம் தேதி முதல் புதிய நிர்வாக ஒப்புதல் கிடைத்துவிடும். அதுவரை இருக்கும் நிதியைக் கொண்டு சமாளிக்க வேண்டும் என்பதால் சில இடங்களில் இருப்புத் தொகைக்கு ஏற்ப வேலை வழங்கப்படுகிறது" என்றனர்.

-  விடுதலை நாளேடு,29.5.19

அரசு ஊழியர்களின் வார வேலை நாட்களை குறைத்து உத்தரவிட்ட சிக்கிம் முதல்வர்

கேங்டாக், மே 29 அரசு ஊழியர்களின் வார வேலை நாட்களை குறைத்து சிக்கிம் மாநில முதல்வர் பிஎஸ் கோலே உத்தரவிட்டுள்ளார்.

சிக்கிம் சட்டப் பேரவைத் தேர்தலில் சிக்கிம் கிராந்தி காரி மோர்ச்சா (எஸ்.கே.எம்.) கட்சி வெற்றி பெற்றது.

அதன் தொடர்ச்சியாக சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடாத பிஎஸ் கோகலேவை, அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் சட்டப்பேரவை குழுத்தலைவராக தேர்வு செய்தனர்.

இதையடுத்து பல்ஜோர் விளையாட்டு மைதானத்தில் திங்களன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் சிக்கிம் ஆளுநர் கங்கா பிரசாத், கோகலே மற்றும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த 11 சட்டமன்ற உறுப்பினர் களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

முன்னதாக சிக்கிம் சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 32 தொகுதி களில் 17 இடங்களைக் கைப் பற்றி எஸ்.கே.எம். கட்சி வெற்றி பெற்றது.

சிக்கிம் ஜனநாயக முன்னணி 15 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், அந்த மாநிலத்தில் கடந்த 24 ஆண்டுகளாக நீடித்து வந்த சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் அரசு ஊழியர்களின் வார வேலை நாட்களை குறைத்து சிக்கிம் மாநில முதல்வர் பிஎஸ் கோலே உத்தரவிட்டுள்ளார்.

மாநிலத்தில் வாரத்தில் 6 நாள்களாக இருந்த அரசு ஊழியர்களின் வேலை நாட்களை 5ஆக குறைத்து முதலமைச்சர் பிஎஸ் கோலே தற்போது உத்தரவிட்டுள்ளார்.

அவர் தேர்தல் வாக்குறுதி யில் முன்பு கூறியது போலவே தற்போது செயல்பட்டுள் ளார்.

இதன் மூலம் அரசு ஊழியர்கள் தங்கள் உடல் நலத்தோடு குடும்பத்தினர் மற்றும் பெற்றோர், குழந்தை களை நன்கு கவனிக்கவும் நேரம் கிடைக்கும் என்று கோலே தெரிவித்துள்ளார்.

  -  விடுதலை நாளேடு, 29.5.19

அரசு ஊழியர்களின் வார வேலை நாட்களை குறைத்து உத்தரவிட்ட சிக்கிம் முதல்வர்

கேங்டாக், மே 29 அரசு ஊழியர்களின் வார வேலை நாட்களை குறைத்து சிக்கிம் மாநில முதல்வர் பிஎஸ் கோலே உத்தரவிட்டுள்ளார்.

சிக்கிம் சட்டப் பேரவைத் தேர்தலில் சிக்கிம் கிராந்தி காரி மோர்ச்சா (எஸ்.கே.எம்.) கட்சி வெற்றி பெற்றது.

அதன் தொடர்ச்சியாக சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடாத பிஎஸ் கோகலேவை, அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் சட்டப்பேரவை குழுத்தலைவராக தேர்வு செய்தனர்.

இதையடுத்து பல்ஜோர் விளையாட்டு மைதானத்தில் திங்களன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் சிக்கிம் ஆளுநர் கங்கா பிரசாத், கோகலே மற்றும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த 11 சட்டமன்ற உறுப்பினர் களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

முன்னதாக சிக்கிம் சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 32 தொகுதி களில் 17 இடங்களைக் கைப் பற்றி எஸ்.கே.எம். கட்சி வெற்றி பெற்றது.

சிக்கிம் ஜனநாயக முன்னணி 15 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், அந்த மாநிலத்தில் கடந்த 24 ஆண்டுகளாக நீடித்து வந்த சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் அரசு ஊழியர்களின் வார வேலை நாட்களை குறைத்து சிக்கிம் மாநில முதல்வர் பிஎஸ் கோலே உத்தரவிட்டுள்ளார்.

மாநிலத்தில் வாரத்தில் 6 நாள்களாக இருந்த அரசு ஊழியர்களின் வேலை நாட்களை 5ஆக குறைத்து முதலமைச்சர் பிஎஸ் கோலே தற்போது உத்தரவிட்டுள் ளார்.

அவர் தேர்தல் வாக்குறுதி யில் முன்பு கூறியது போலவே தற்போது செயல்பட்டுள் ளார்.

இதன் மூலம் அரசு ஊழியர்கள் தங்கள் உடல் நலத்தோடு குடும்பத்தினர் மற்றும் பெற்றோர், குழந்தை களை நன்கு கவனிக்கவும் நேரம் கிடைக்கும் என்று கோலே தெரிவித்துள்ளார்.

  -  விடுதலை நாளேடு, 29.5.19

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை, மே 22  தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர் களுக்கு 3 சதவிகிதம் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக நிதித்துறை செயலாளர் சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:

மத்திய அரசு ஊழியர்களுக்கு அக விலைப்படி உயர்த்தி வழங்கியதன் அடிப்படையில் தமிழக அரசு ஊழியர் களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்படுகிறது. இதன் அடிப் படையில், தமிழ்நாடு அரசு அலு வலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 1.-1-.2019 முதல் கணக்கிட்டு வழங்கப்படும். கூடுதல் ஊதிய மாக 3 சதவீதம் அளிக்கப்பட்டு, தற்போதுள்ள 9 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.

இந்த அகவிலைப்படி உயர்வு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணி புரியும் ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் அல்லாத பிற அலுவலர் களுக்கும், உள்ளாட்சி அமைப்பு களின் அலுவலர்களுக்கும், பல்கலைக்கழக மானியக்குழு /அனைத்திந்திய தொழில் நுட்பக் கல்விக்குழு சம்பள வீதங்களின் கீழ்வரும் அலுவலர்களுக்கும், அரசு மற்றும் உதவி பெறும் பல்தொழில் நுட்ப பயிற்சி பள்ளிகள், சிறப்பு பட்டய படிப்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள்/உடற்பயிற்சி இயக்குநர்கள்/ நூலகர்கள் ஆகியோருக்கும் வழங்கப் படும் என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு ஊழியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், அரசு ஊழியர், ஆசிரியர்க்கு 3 சதவிகிதம் அகவிலைப்படி உயர் வினால் ரூ.450 முதல் ரூ.6,500 வரை ஊதிய உயர்வும், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதிய தாரர்களுக்கு ரூ.225 முதல் ரூ.3,000 வரையும் ஓய்வூதிய உயர்வும் கிடைக்கும். இந்த அகவிலைப்படி உயர்வினால் சுமார் 18 லட்சம் அரசு அலுவலர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதி யர்கள் பயனடைவார்கள் என்றார்..

- விடுதலை நாளேடு 22. 5. 2019