ஜெனிவா, ஜூன் 6- சுவிட்சர் லாந்தில் ஆண்களுக்கு நிக ராக பெண்களுக்கு சம ஊதி யம் வழங்க வேண்டி 1991 ஜூன் 14ஆம் நாள் 50 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட பெண் கள் அலுவலகத்திலிருந்தும், வீட்டிலிருந்தும் வெளியேறி போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
இப்போராட்டம் நடந்து 30 வருடங்கள் கடந்தும் இந்த விவகாரத்தில் பெரிய அளவு மாற்றங்கள் ஏதும் ஏற்படவில்லை என தொழிற் சங்கங்களும் பெண்கள் உரி மைகள் அமைப்பும் தெரிவிக் கின்றன.
‘சம உரிமை, சம ஊதியம்’ என்ற கோரிக்கையை வலி யுறுத்தி மீண்டும் போராட் டம் நடத்த நாடு முழுவதிலும் உள்ள பெண்கள் தயாராகி வருகின்றனர். வரும் 14-ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
சுவிட்சர்லாந்தில் பெண் களின் ஊதியம் ஆண்களின் ஊதியத்தை விட 20% குறை வாகவே உள்ளது. மேலும் கல்வித்தகுதி சமமாக இருந் தாலும் பெண்களின் ஊதியம் ஆண்களின் ஊதியத்தை விட 8% குறைவாகவே உள்ளது.
கடந்த ஆண்டு சுவிட்சர் லாந்தின் மிகப்பெரிய தொழிற்சங்கமான யூ.என்.அய்.ஏ. வெளியிட்ட அறிக் கையில், கல்வித்தகுதியும், துறை சார்ந்த அனுபவமும் சமமாக இருந்தாலும் அவ ரது வேலைக்காலத்தில், பெண் என்ற ஒரே காரணத்தினால் ஊதியம் வாயிலாக 300000 ப்ரான்க் (இந்திய மதிப்பில் ரூ.2.09 கோடி) இழப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க நடவடிக்கை, பெண் களின் வேலைக்கு ஏற்ற சம்பளம் மற்றும் மரியாதை உள்ளிட்ட பல கோரிக்கைக ளையும் போராட்டக்குழுவி னர் வலியுறுத்த உள்ளனர்.
- விடுதலை நாளேடு, 6 .6.2019
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக