ஞாயிறு, 21 ஜூலை, 2019

கரும்புத் தோட்டங்களில் பணி புரிவதற்கு கருப்பையை நீக்கும் பெண்கள்


ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஆய்வுத்தகவலைக்கொண்டு, பிபிசி தமிழ் இணையம் பணிபுரியும் பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் குறித்து எடுத் துக்காட்டியுள்ளது. அதன் விவரம் வருமாறு:
சமீபத்திய மாதங்களில் பணிக்கு செல் லும் பெண்கள் மற்றும் மாதவிடாய் தொடர் பாக வந்த இரண்டு செய்திகள் நம்மை வருத்தமடைய செய்வதாக உள்ளன.
இந்தியாவில் மாதவிடாய் என்பது இன்றும் அதிகம் பேசப்படாத ஒரு விஷய மாகவே உள்ளது. மாதவிடாய் காலப் பெண் கள் அழுக்கானவர்களாகவே கருதப்படு கின்றனர். மேலும் சமுக மற்றும் சமய நிகழ்ச்சிகளில் இருந்து அவர்கள் தள்ளியே வைக்கப்படுகின்றனர்.
சமீப வருடங்களில் இந்த நடைமுறைகள் நகர்ப்புற படித்த பெண்களால் சற்று தளர்த் தப்பட்டு வருகிறது என்று சொல்லலாம்.
இருப்பினும் அந்த சமீபத்திய இரண்டு செய்திகள் மாதவிடாய் தொடர்பாக இந்தியாவில் நிலவும் பிரச்சினைக்குரிய சூழலை வெளிச்சம் போட்டு காட்டுவதாக உள்ளது.
பெரும்பாலான பெண்கள், குறிப்பாக கல்வி கற்காத ஏழை குடும்பத்து பெண்கள் தங்களின் உடல்நலத்திலும், வாழ்க்கை முறைகளிலும் நீங்காத ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
முதலாவது, இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில் ஆயிரக்கணக்கான இளம் பெண்கள் அறுவை சிகிச்சை மூலம் தங்களின் கருப்பைகளை அகற்றுகின்றனர் என இந்திய ஊடகங்களில் வந்த செய்தி.
அதில் பெரும்பாலானோர்கள் கரும்புத் தோட்டங்களில் பணிபுரிவதற்காக அவ்வா றான அறுவை சிகிச்சைகளை செய்திருக் கின்றனர்.
ஒவ்வொரு வருடமும் மகாராட்டிரா வின் பீட், ஆஸ்மானாபாத், சங்க்லி மற்றும் சோலாப்பூர் மாவட்டத்தில் இருந்து பிழைப்பு தேடி கரும்பு பயிரிடும் பகுதியான மேற்கு மாவட்டங்களுக்கு ஆயிரக்கணக் கான குடும்பங்கள் வருகின்றன. அந்த கரும்புத் தோட்டங்களில் ஆறுமாத காலம் தங்கி அறுவடை வேலைகளை அவர்கள் செய்வதற்காக அங்கு வருகின்றனர்.
அவர்கள் அங்கு பணிக்கு வந்ததும், பேராசை மிக்க ஒப்பந்தக்காரர்கள் அனைத்து விதமான சந்தர்ப்பங்களிலும் அவர்களிடமிருந்து அதிகப்படியான வேலைகளை வாங்கிக் கொள்கின்றனர்.
முதலில் இவர்கள் பெண்களை பணிக்கு எடுக்க தயக்கம் காட்டுகின்றனர். ஏனென் றால் கரும்பு வெட்டுதல் ஒரு கடினமான பணி. மேலும் மாதவிடாய் காரணங்களால் அவர்கள் ஒன்றிரண்டு நாட்கள் பணிக்கு வரமுடியாமல் போகலாம் என்பதும் அவர்களின் தயக்கத்துக்கு ஒரு காரணம். அவர்கள் பணிக்கு வரவில்லை என்றால் அபராதம் செலுத்த வேண்டும்.
பணியிடங்களில் தங்கும் நிலை மிக மோசமான ஒன்று. கரும்புத் தோட்டங் களுக்கு அருகாமையில் கூடாரங்களிலோ அல்லது சிறிய குடிசைகளிலோ அவர்கள் வசிக்க வேண்டியுள்ளது. அங்கு கழிப் பறைகள் இருக்காது. கரும்பு அறுவடை சில நேரங்களில் இரவு நேரங்களில் கூட நடை பெறும். எனவே தூங்குவதற்கோ அல்லது தூக்கத்திலிருந்து எழுவதற்கோ குறிப்பிட்ட நேரங்கள் கிடையாது. பெண்களுக்கு மாதவிடாய் வந்துவிட்டால் அது மிகவும் கடினமான ஒரு காலமாக அமைந்துவிடும்.
எனவே மோசமான சுகாதார சூழலால் அங்குள்ள பெண்கள் பல நோய் தொற்று களுக்கு ஆளாகின்றனர். அந்த பகுதியில் பணிபுரியும் ஆர்வலர்கள், `மனசாட்சியற்ற` சில மருத்துவர்கள், மருந்துகளில் குண மடையக்கூடிய வகையில் உள்ள சிறிய பிரச்சினைகளுக்குக் கூட கருப்பையை எடுக்க பரிந்துரை செய்வதாக கூறுகின்றனர்.
இந்த பகுதியில் உள்ள பெரும்பாலான பெண்கள் இளம் வயதிலேயே திருமணமா னவர்கள். அவர்களுக்கு இருபத்தைந்து வயதுக்குள்ளாக திருமணமாகி இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் உள்ளன. எனவே கருப்பையை நீக்குவதால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து மருத்துவர்கள் சரியாக விளக்காததால் அவர்கள் கருப் பையை எடுப்பது சரி என்று முடிவுக்கு வந்து விடுகின்றனர்.
இதனால் அந்த பகுதியில் உள்ள பல கிராமங்கள் `கருப்பையற்ற பெண்களை கொண்ட கிராமங்களாக` உள்ளன.
இந்த விஷயம் தொடர்பாக கடந்த மாதம் மகாராட்டிர மாநில சட்டசபை உறுப் பினர் நீலம் கோர்ஹே கேள்வி எழுப்பிய போது, "மூன்று வருடங்களில் பீட் மாவட்டத் தில் மட்டும் 4,605 கருப்பை நீக்க அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளன." என அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஏக்நாத் சிண்டே ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் அது அனைத்தும் கரும்புத் தோட் டங்களில் வேலை பார்க்கும் பெண்களுக்கு நடத்தப்பட்டவை அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார். இம்மாதிரியான பல வழக்குகள் குறித்து விசாரிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பீட் மாவட்டத்தில் உள்ள வஞ்சர்வாடி கிராமத்திற்கு, என்னுடன் பணிபுரியும் பிபிசி மராத்தி சேவையை சேர்ந்த சக பத்திரிகையாளர், ப்ரஜக்தா துலப் பயணம் செய்தார். ஒவ்வொரு வருடமும் அக்டோ பரிலிருந்து மார்ச் மாதம் வரை 80 சதவீத கிராம மக்கள் கரும்புத் தோட்டங்களில் பணிபுரிவதற்காக அங்கிருந்து இடம் பெயர்வதாக அவர் தெரிவிக்கிறார்.
அந்த கிராமத்தில் உள்ள பாதி பெண்கள் கருப்பை நீக்க அறுவை சிகிச்சையை செய்து கொண்டனர் என்றும் அதில் பலர் 40 வயதுக்கு குறைவானவர்கள் என்றும், இன்னும் சிலர் தங்களின் இருபதுகளில்தான் உள்ளனர் என்றும் தெரிவிக்கிறார் ப்ரஜக்தா.
பல பெண்கள் அந்த அறுவை சிகிச் சைக்கு பிறகு தங்களின் உடல்நலம் மேலும் மோசமடைந்துவிட்டதாக தெரிவிக்கின்ற னர். அதில் ஒரு பெண் இந்த அறுவை சிகிச்சையால் தனக்கு தொடர்ந்து முதுகு வலி, கழுத்து வலி மற்றும் முட்டி வலி ஏற் படுவதாக தெரிவித்தார். மேலும் காலையில் எழுந்தவுடன் தனது கைகள், முகம் மற்றும் பாதங்கள் வீங்கிவிடுவதாக அவர் தெரி வித்தார். மற்றொரு பெண் தனக்கு தொடர்ந்து மயக்க நிலை ஏற்படுவதாகவும், சிறிய தொலைவில் கூட நடந்து செல்ல முடியவில்லை என்றும் கூறுகிறார். எனவே இதன் காரணமாக இருவரும் இனி கரும்புத் தோட்டங்களில் அவர்களால் பணி புரிய இயலாது.
தேசிய மகளிர் ஆணையம், மகாராட்டி ராவில் நிலவும் நிலையை "பரிதாபகரமான மற்றும் மோசமான" ஒன்று என தெரிவித்து உள்ளது.
மேலும் இம்மாதிரியான "கொடுமைகள்" எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க மாநில அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளது.
பாலினங்களுக்கு ஏற்ற கொள்கைகளை கொண்டு உலகம் முழுவதும் பணியிடங் களில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் தருணத்தில் இந்த செய்திகள் வெளியாகி யுள்ளன.
- கீதா பாண்டே,
பிபிசி தமிழ் இணையம், 8.7.2019
-  விடுதலை ஞாயிறு மலர், 13.7.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக