வெள்ளி, 31 மே, 2019

பிரிமீயம் செலுத்தும் அரசு ஊழியர், ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ செலவை தருவது அரசின் கடமை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை,மே 29, மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பிரிமீயம் செலுத்தும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூ தியதாரர்களுக்கான மருத் துவ செலவுகளை நொண்டிச் சாக்கு கூறி மறுக்காமல் கண்டிப்பாக திருப்பி வழங்க வேண்டியது அரசின் கடமை என உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழி யர்கள் சுகாதார நிதித் திட் டத்தின்கீழ் பணியில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான கட்டாய மருத்துவக் காப்பீட் டுத்  திட்டம் அமலில் உள் ளது.

இத்திட்டத்தின் கீழ் பிரிமீயம் செலுத்தும் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதா ரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான மருத் துவச் செலவுகளை தமிழக அரசும் மருத்துவக் காப்பீட்டு நிறுவனமும் வழங்க மறுப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில், இதை எதிர்த்து தூத்துக்குடியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் உள்ளிட்ட 100-க்கும் மேற் பட்ட அரசு ஊழியர்கள் மற் றும் ஓய்வூதியதாரர்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

அதில், அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத் தினரின் நலனுக்காகவும் ஓய்வூதியதாரர்களின் உடல் நலனை கருத்தில் கொண் டுமே மருத்துவ காப்பீட்டுத் திட்டம் கொண்டுவரப்பட் டது.

இதன்படி, ஒவ்வொரு மாதமும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர் களிடம் கட்டாய பிரிமீயம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை மேற்கொள்ளும்போது செலவு செய்த மருத்துவ செலவுகளை திருப்பிக் கேட் டால், பட்டியலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறவில்லை. நோய் பாதிப்பு இவ்வளவு சதவீதம் இருந்தால் செலவுத் தொகையை திருப் பிக் கோரமுடியாது. பட்டி யலில் இல்லாத இந்த நோய் பாதிப்புக்கு காப்பீடு கிடை யாது. சரியான நேரத்தில் இழப்பீடு கோரவில்லை என நொண்டிச்சாக்குகளைக் கூறி மாவட்ட அளவில் உள்ள மருத்துவ காப்பீட்டுக் குழு செலவு செய்துள்ள தொகையை வழங்க மறுத்து உத்தரவிட்டுள்ளது. இது சட்டவிரோதம். எனவே நாங்கள் மருத்துவத்துக்காக செலவு செய்து உள்ள தொகையை திருப்பி வழங்க உத்தரவிட வேண்டும்’ என அதில் கோரியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதிய தாரர்களுக்கும் இந்த திட்டம் கட்டாயமாக் கப்பட்டுள் ளது.

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பிரிமீயம் செலுத்தும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர் களுக் கான மருத்துவ செலவுகளை வழங்க வேண்டியது அரசின் கடமை. அதை நொண்டிச் சாக்கு கூறி மறுக்கக்கூடாது.

எனவே, தமிழகம் முழுவ தும் இத்திட்டத்தின்கீழ் உள்ள அரசு ஊழியர்கள், ஓய்வூதிய தாரர்கள் மருத்து வத்துக்காக செலவு செய் துள்ள தொகை யை வழங்க முடியாது என பிறப்பிக்கப் பட்ட அனைத்து உத்தரவு களும் ரத்து செய்யப் படுகிறது.

மனுதாரர்களுக்கு வழங்க வேண்டிய செலவுத் தொகை யை 6 % வட்டியுடன் வழங்க வேண்டும். தனியார் மருத்துவ மனைகளுக்கு இணையாக அர சு   மருத்துவ மனைகளை யும் தரம் உயர்த்தியிருந்தால் அனைத்து தரப்பினரும் அரசு மருத்து வமனை களிலேயே இலவச சிகிச்சை பெற்றிருப்பர்.

ஆனால் தமிழகத்தில் ஆட்சி யாளர்கள் முதல் அதிகாரிகள் வரை தற்போது தனியார் மருத்துவமனை களை நாடும் நிலை உள்ளது.

எனவே, அரசு மருத்துவ மனைகளின் தரத்தை மேம் படுத்தும் வரை தனியார் மருத்துவமனைகளில் சிகிச் சை பெறும் அரசு ஊழியர் களுக்கும் ஓய்வூதியதாரர் களுக் கும் சட்டப்படி வழங்க வேண்டிய நிதியுதவிகளை அரசும் காப்பீட்டு நிறுவ னங்களும் கண்டிப்பாக வழங்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத் தரவிட்டுள்ளார்.

-  விடுதலை நாளேடு, 29.5.19

ரயில்வே தொழில்பழகுநர் பணிகளில்... இனி தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை

மன்னார்குடி, மே 26  தமிழ கத்தில் உள்ள ரயில்வே தொழிற் சாலைகள் தொழில் பழகுநர் பணிகள் நியமனங் களில் ரயில் வே விதிகளை இதுவரை பின் பற்றாமல் இருந்து வந்தன. இதனால் வட இந்தியர்கள் பணிகளில் சேர துவங்கினர். இதனால் தமிழக இளைஞர் களின் வேலை வாய்ப்பு திட்டமிட்டு பறிக்கப்படுவதாக குற்றச் சாட்டு எழுந்தது. அண் மையில் திருச்சி பொன் மலை, கோவை போத்தனூர் ரயில்வே தொழிற்சாலை தொழில் பழகுநர் தேர்வில் ஏற்கனவே 1984ஆம் ஆண்டு வாரிய உத்தரவின்படி வசிப்பிட தகுதி நிர்ணயம் செய்யப்படாத தால் தான் வட மாநிலத்தவர்கள் அதிக சேர்க்கைக்கு மூல காரண மாக அமைந்து விட்டது.

இந்த சூழலில் ரயில்வே விதிகள் அந்தந்த மாநிலங் களை சேர்ந்தவர்களையே தொழில் பழகுநர் பணி களுக்கு தேர்வு செய்ய வேண் டும் என விதி இருப்பதை தொழிற்சங்க தலை வர்கள் சுட்டிக்காட்டினர். இதனை யடுத்து சென்னை பெரம்பூர் அய்சிஎப் தொழிற் சாலை கடந்த 20ஆம் தேதி 990 தொழில்பழகுநர் பணியிடங் களுக்கு ஆட்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில் 1984ஆம் ஆண்டு ரயில்வே  வாரிய உத்தரவின் படி அந்த விதியை பின்பற்றி தமிழக வேலைவாய்ப்பு மய்யத்தில் பதிவு செய்த வர்கள்  மட்டுமே தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தென்னக ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் மாநில துணை பொதுச்செயலாளர் மனோ கரன் கூறியதாவது:  தொழில் பழகுநர் என அழைக்கப்படும் தொழில் பழகுநர் பயிற்சிக்கான சேர்க் கை போத்தனூர் மற்றும் திருச்சி பொன்மலை ரயில் வே தொழிற் சாலை களில் 2 மாதங்களுக்கு முன்பு நடை பெற்றது. பொன் மலை மய்யத்தில் 1600 வட மாநிலத் தவர்கள், 150 தமிழ கத்தினர் சேர்த்து 1750 பேர், போத் தனூர்  மய்யத்தில் 1187 வட மாநிலத்தவர்கள், 126 தமிழ கத்தினர், 622 மற்ற தென் மாநிலத்தவர்கள் சேர்த்து 1935 பேர் தேர்வு செய்யப் பட்டார்கள். இந்த தேர்வு முறையில் முறை கேடுகள் நடந்துள்ளது.

தமிழக இளைஞர்கள் வேலை வாய்ப்புகள் பறிக்கப் பட்டதாக குற்றச்சாட்டுகள் கடுமையாக எழுந்துள்ளது. இந்த தொழில் பழகுநர்கள் தேர்வு முறையில் ரயில்வே வாரிய உத்தரவுகள் பின் பற்றப் படவில்லை. பொன் மலை மற்றும் போத்தனூர் ரயில்வே தொழிற்சாலைகள் வசிப்பிட தகுதியை வரை யறை செய்ய தவறி விட்டன. இந்த வாய்ப்பை பயன் படுத்தி மற்ற மாநிலத்தவர்கள் விண்ணப்பித்து தேர்வாகி உள்ளனர் என்பதே இதற் கான காரணம் என தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனி யன் சுட்டிக் காட்டியது.

இந்நிலையில் கடந்த மே 20ஆம் தேதி பெரம்பூர் அய்சிஎப் தொழிற்சாலை கார்பென்டர் 80, எலக்ட்ரீசியன் 200, பிட்டர் 260, மெசினிஸ்ட் 80, பெயின்டர் 80, வெல்டர் 290 என மொத்தம் 990 தொழில் பழகுநர் நிய மனத்திற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.  அதில் தமிழக வேலை வாய்ப்பு அலுவ லகத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண் டும் என்ற நிபந்த னையை இணைத்து விட் டது. இத னால் 990 தொழில் பழகு நர்கள் தமிழகத்தில் இருந்து மட்டுமே தேர்வு செய்யப்பட இருக்கி றார்கள்.  இவ்வாறு அவர் கூறி னார்.

-  விடுதலை நாளேடு, 26.5.19

பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் வங்கி தொழிற்சங்க தலைவர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

திருச்சி, மே 15- புதிய ஓய்வூதிய திட்டத்தை தாமத மின்றி திரும்பப் பெற்று பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப் படுத்த வேண்டும் என வங்கி தொழிற்சங்கத் தலைவர்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இந்திய ஸ்டேட் வங்கியின் (SBSU) முன்னாள் தொழிற்சங்கத் தலைவர்களின் (AFCCOM) கூட்டமைப்பின் நிர்வாகக்குழு கூட்டம் திருச்சி ஹோட்டல் சாரதாவில் 12.5.2019 அன்று நடைபெற்றது.

இந்த அமைப்பின் தலைவர் எஸ்.பி.இராமன் கூட்டத்துக்கு தலைமை வகித்தார். தீர்மானங் களை விளக்கிப் பொதுச் செய லாளர் வி.ஆர்.உதயசங்கர் உரை நிகழ்த்தினார்.

இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:- இந்தியன் ஸ்டேட் வங்கியின் பென்ஷன் கார்ப்பசில் (Pension Corpus) 69364 கோடி யும், பொதுத்துறை வங்கிகளின் பென்ஷன் கார்ப்பசில் 1,78,000 கோடியும் இருப்பதைக் கருத்தில் கொண்டு, வங்கி ஓய்வூதியர் களுக்கு பின் தேதியிட்டு ஓய்வூ தியத்தை உயர்த்தித் தரவேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

இந்தியன் ஸ்டேட் வங்கி உள் ளிட்ட அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் நிரந்தரப் பணியிடங்களில்  நிரந்தரப் பணியாளர் களைப் பணியில் அமர்த்தி, தொழிலாளர் நலச்சட்டங்களை முறைப்படி நடைமுறைப்படுத்து வதை இந்திய வங்கிகள் நிர்வாக மும், மத்திய அரசும் உறுதிப் படுத்த வேண்டுமென வலியுறுத் திக் கேட்டுக் கொள்கிறது.

புதிய ஓய்வூதிய திட்டத்தை தாமதமின்றி திரும்பப் பெற்று பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என தீர்மானங்கள் இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக இக்கூட்டத்தில் பங்கேற்றவர்களை நிர்வாக குழு உறுப்பினர் எம்.சந்திரா கில்பர்ட் வரவேற்றார். துணைத் தலைவர் டி.வி.சந்திரசேகரன், பொருளாளர் எஸ்.கண்ணன், உதவிப்பொரு ளாளர் பி.துரைராஜ், உதவிச்செய லாளர் அடையாறு பாபு, நிர்வாகக் குழு உறுப்பினர்கள் திருச்சி என்.சுப்பிரமணியன், மதுரை எம்.முருகையா, திருவண் ணாமலை கே.பி.சாரதி, திருவாரூர் என்.பாண்டுரங்கன் உள்பட தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள நிர்வாகக்குழு உறுப்பி னர்கள் பங்கேற்றனர்.

-  விடுதலை நாளேடு, 15.5.19

வருங்கால வைப்பு நிதிக்கு 8 சதவீதம் வட்டி அரசாணை வெளியீடு

சென்னை, மே 5 வருங்கால வைப்பு நிதிக்கு 8 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. தமிழக நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள ஆணையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதிக்கு இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் மார்ச் 31வரை 8 சதவீத வட்டி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அடுத்த மூன்று மாதங்களுக்கும் இந்த 8 சதவீத வட்டியை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 1 முதல் ஜூன் 30ம் தேதிவரையிலான காலக்கட்டத்திற்கு வருங்கால வைப்பு நிதிக்கு 8 சதவீதம்  வட்டி வழங்கப்படும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

-   விடுதலை நாளேடு, 5.5.19

செவ்வாய், 9 ஏப்ரல், 2019

வ.வசந்தி பணி ஓய்வு பெறுகிறார்!

கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்க செயற்குழு உறுப்பினர் வ.வசந்தி அவர்கள் கோத்ரேஜ் கன்சியூமர் புராடக்டு தொழிற்சாலையில் 37 ஆண்டுகள் பணியாற்றி 11.4.19ல் பணி ஓய்வு பெறுகிறார். அவரை பாராட்டி வழியனுப்பும் நிகழ்ச்சி 10.4.19 பிற் பகல் 3.30 மணி அளவில் தொழிற்சாலை வளாகத்தில் நடைபெறுகிறது.

வியாழன், 4 ஏப்ரல், 2019

தனியார் நிறுவன ஊழியர்கள் ஓய்வூதியத்தை பெறுவதற்கு உச்சநீதிமன்றம் வழிவகை

டில்லி,ஏப்.3, தனியார் நிறுவன ஊழியர்கள் பணி ஓய்வுபெற்ற பிறகு உரிய ஓய்வூதியத்தை பெறுவதற்கு உச்சநீதிமன்றம் வழிவகை செய்துள்ளது.

தனியார் நிறுவன ஊழியர்களுக்கு தற்போது குறைந்தபட்ச ஊதியமாக ரூ.15,000யை உச்சவரம்பாக கொண்டு அதன் அடிப்படையில் EPFO எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு ஓய்வூதியம் வழங்கி வருகிறது.  இது தொடர்பான வழக்கில் வெறும் ரூ. 15,000யை அடிப்படை ஊதியமாக கருதாமல் தனியார் நிறுவன ஊழியர்கள் ஓய்வுபெறும் போது கடைசியாக பெறும் சம்பளத்தின் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

அந்த உத்தரவை எதிர்த்து  EPFO தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

எனவே, இனி வரும் காலத்தில் தனியார் நிறுவன ஊழியர்களின் கடைசி முழு சம்பளத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட ஓய்வூதியம் பெற உச்சநீதிமன்றம் வழிவகை செய்துள்ளது.

அதன்படி இந்த உத்தரவிற்கு முன்பு ஒரு தனியார் நிறுவன ஊழியர் 33 ஆண்டுகள் பணிபுரிந்து கடைசி சம்பளமாக ரூ.50,000 பெற்று ஈபிஎஸ் எனப்படும் ஓய்வூதிய திட்டத்தில் பணம் செலுத்தி வந்திருந்தால் அவர் ஓய்வு பெற்ற பிறகு மாதத்திற்கு ரூ.5,180 பென்சன் கிடைக்கும். ஆனால் தற்போது உச்சநீதிமன்ற உத்தரவிற்கு பிறகு அந்த நபருக்கு ரூ.25,000 ஓய்வூதியம் கிடைக்க வழி பிறந்துள்ளது. அதே போல ஒரு நபர் தன்னுடைய கடைசி சம்பளமாக ரூ.1,00,000 பெற்று இருந்து ரூ.33 ஆண்டுகள் பணியாற்றி இருந்தால் அவருக்கு அதிகபட்சமாக ரூ.50,000 ஓய்வூதியம் கிடைக்கும்.

- விடுதலை நாளேடு, 3.4.19

ஏப்.18-இல் செயல்படும் நிறுவனங்கள் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை

சென்னை, ஏப்.2 மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத் தேர்தல் வாக்குப் பதிவு நாளான ஏப்ரல் 18-ஆம் தேதி இயங்கும் தனியார் நிறுவனங்கள், பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலர் ஜி.பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாவட்டத்தின் வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளுக்கும், பெரம்பூர் சட்டப் பேரவை தொகுதிக்குமான இடைத் தேர்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.

அன்றைய தினம் அரசு நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், அரசு, தனியார் பள்ளிகள், கல்லூரிகள், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை நாளாக அரசு அறிவித் துள்ளது.

இதை மீறி ஏப்ரல் 18-ஆம் தேதி செயல்படும் தனியார் நிறுவனங்கள், பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- விடுதலை நாளேடு, 2.4.19