சென்னை, ஏப்.2 மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத் தேர்தல் வாக்குப் பதிவு நாளான ஏப்ரல் 18-ஆம் தேதி இயங்கும் தனியார் நிறுவனங்கள், பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலர் ஜி.பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாவட்டத்தின் வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளுக்கும், பெரம்பூர் சட்டப் பேரவை தொகுதிக்குமான இடைத் தேர்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
அன்றைய தினம் அரசு நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், அரசு, தனியார் பள்ளிகள், கல்லூரிகள், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை நாளாக அரசு அறிவித் துள்ளது.
இதை மீறி ஏப்ரல் 18-ஆம் தேதி செயல்படும் தனியார் நிறுவனங்கள், பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விடுதலை நாளேடு, 2.4.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக