வியாழன், 8 டிசம்பர், 2022

வேளாண்மை சார்ந்த படிப்புகளும், வேலைவாய்ப்புகளும்

 

 பிளஸ்-2 முடித்த மாணவர்களின் இறுதிக் கட்ட விருப்பப் பட்டியல்களுள் சில பாடப்பிரிவுகள் உண்டு. அவற்றுள் வேளாண்மைத்துறை சார்ந்த பாடப்பிரிவுகளும் அடங்கும். மருத்துவ பிரிவில் இடம் கிடைக்காத சில மாணவர்கள் தேர்வு செய்வது, வேளாண் படிப்பினை தான். இந்நிலையில் வேளாண்மை சார்ந்த படிப்புகளின் மீது மாணவர்களிடம் தற்போது ஆர்வம் அதி கரித்துள்ளது. இந்திய நாட்டின் முதுகெலும்பாக இருப்பது விவசாயம் தான். 

மாணவர்கள் எதிர்காலத்தில் வளர்ச்சி நிலை யில் இருக்க, சில வேளாண் சார்ந்த படிப்புகளும், அவை வழங்கும் வேலைவாய்ப்புகள் விவ ரங்கள்:

வேளாண் பொறியியல்

இன்று விவசாயமும் தொழில்நுட்பம் ஆகி விட்டது. நாற்று நடுவது, களை பறிப்பது, அறு வடை போன்ற அனைத்திலும் அதற்கான இயந் திரங்கள் வந்துவிட்டன. அதனால் வேளாண் பொறியியல் முக்கியமான பட்டப் படிப்பாக விளங்குகிறது. இந்த வேளாண் பொறியியல் பட்டப் படிப்பு 4 வருட படிப்பாகும். மாணவர்கள் பிளஸ்-2 பொதுத் தேர்வில் எடுத்த மதிப் பெண்ணையும், அந்தந்த கல்வி நிறுவனங்கள் நடத்தும் தேர்வு மதிப்பெண்ணையும் அடிப் படையாக வைத்து இப்படிப்பிற்கான மாண வர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.

பொறியியல் மாணவர் சேர்க்கை மூலம் இந்த படிப்பையும், நீங்கள் விரும்பும் கல்லூரியையும் தேர்வு செய்து கொள்ளலாம். விவசாயத்தில் பொறியியலையும், தொழில்நுட்பத்தையும் உப யோகப்படுத்தும் பணி வேளாண் பொறியாளர் களுடையது. வேளாண் பொறியியல் படிப்பை முடித்தவர்களுக்கு வேளாண் கருவிகள் உற்பத்தி நிறுவனங்கள், புட் பிராசசிங் நிறுவனங் கள், பாசனக் கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்கள் போன்ற வேளாண் தொழில்நுட்ப நிறுவனங் களில் வேலை கிடைக்கும். வங்கிகள், இன்சூ ரன்ஸ் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புக்கான சாத்தியங்கள் உண்டு. தமிழகத்தில் கோவை, தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகம் இப் படிப்பை அளிக்கிறது. 

வேளாண் தகவல் தொழில்நுட்பம் 

அக்ரிகல்ச்சர் இன்பர்மேசன் டெக்னாலஜி படிப்பும், வேளாண் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புதான். இந்த பட்டப்படிப்பானது 4 ஆண்டுகள் கொண்டது. வேளாண் துறையிலும் தகவல் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. விவசாய உற்பத்தி, உணவு, மக்கள் தொகை பெருக்கம் ஆகிய காரணங்களால் இந்த துறை மேலும் முக்கியத் துவத்தை பெறும். இந்தியாவில் உள்ள 65 சதவீதம் பேருக்கு விவசாயம் தான் தொழிலாக இருக்கிறது. கிராமங்களில் வசித்து கொண்டிருப் பவர் விவசாயம், கால்நடை வளர்ப்பு, சுகாதாரம், கல்வி போன்ற விஷயங்கள் தொடர்பான தகவல்களை தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

கிராமங்களில் இருக்கும் மக்களுக்கு தக வல்கள் சென்றடைவதற்கு தொழில்நுட்பம் உத வுகிறது. விவசாயத்திலும், கிராமப்புற முன்னேற் றத்திலும் தகவல் தொழில்நுட்பத்தின் பங்கினைப் பற்றியும், விவசாயம் சந்திக்கும் பிரச்சினை, அதை தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தீர்வு காண்பது பற்றியும் மாணவர்கள் இந்த படிப்பில் அறிந்துகொள்ளலாம். இந்த படிப்பில் அக்ரிகல்சர் இன்பர்மேஷன் சிஸ்டம், ஆப் ஜெக்ட் ஓரியன்டட் புரோகிராமிங், டெவலப் மென்டல் எக்னாமிக்ஸ், கம்ப்யூட்டர் நெட் வொர்க் அண்டு வில்லேஜ் ஏரியா நெட்வொர்க், பி.சி அண்டு அப்ளிகேஷன்ஸ் இன் ரூரல் ஏரியாஸ், ரிமோட் சென்சிங் அண்டு ஜி.அய்.எஸ்., மல்டிமீடியா டெக்னாலஜி, பார்ம் ஆட்டோ மேஷன், ஆபரேட்டிங் சிஸ்டம் அண்டு டேட்டா பேஸ் மேனேஜ்மென்ட் சிஸ்டம் போன்ற பாடங் களை கற்றுத்தருகின்றனர். கோவை, தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தில் அக்ரிகல்சர் இன்பர்மேஷன் டெக்னாலஜி, பி.டெக்., படிப்பாக வழங்கப்படுகிறது.

வேளாண்துறையின் பல படிப்புகள்

வேளாண்துறையில் இது மட்டுமல்லாமல் அக்ரிகல்சுரல் மார்க்கெட்டிங், அக்ரி பைனான்ஸ், அக்ரிகல்சுரல் பாலிசி, அக்ரி பிசினஸ் மேனேஜ்மென்ட், அக்ரிகல்சுரல் ரிசர்ச் அண்ட் ஸ்டாட்டிஸ் டிக்ஸ், சாயில் சயின்ஸ், புட் சயின்ஸ் போன்ற பட்டப்படிப்புகளும் வேளாண் துறையில் முக்கி யத்துவம் வாய்ந்த பட்டப்படிப்புகளாக இருக் கின்றன. அக்ரிகல்சர் அண்ட் எக்ஸ்டென்சன் எஜூகேசன், அக்ரிகல்சரல் ரிசர்ச் அண்ட் அனலைசிஸ், அக்ரிகல்சர் எஜுகேசன் டெக் னிக்ஸ் போன்ற முதுநிலை படிப்புகளும் உள் ளன. பல்வேறு ஆராய்ச்சி படிப்புகளும் உள்ளன. பல்வேறு படிப்புகள் டிப்ளமோ படிப்புகளாகவும் வழங்கப்படுகின்றன. இந்தியா முழுவதும் உள்ள ஏராளமான கல்வி நிறுவனத்தில் இந்த பட்டப் படிப்புகளை பெரும் பாலும் 3 முதல் 4 ஆண்டுகள் வரை படிக்கலாம். இந்த பிரிவினை தேர்வு செய்து படிப்பவர்களுக்கு நல்ல சிறப்பான எதிர்காலம் உள்ளது. 

வேலை

வேளாண் ஆராய்ச்சியாளர், வேளாண் தொழில்நுட்பவல்லுனர், கள ஆய்வாளர், பசுமை வீடு தொழில்நுட்பவல்லுனர், பண்ணை மேலாளர், வேளாண் விற்பனை பிரதிநிதி, வேளாண் உணவுப்பொருள் கிட்டங்கி அதிகாரி, வேளாண் கல்வியாளர், திட்ட வரைவாளர், மண்வள ஆய்வாளர், வேளாண் தொழில் வல்லுனர், வேளாண் நிர்வாக அதிகாரி என பலவிதமான பொறுப்புகளுக்குச் செல்லலாம். அரசு மற்றும் தனியார் வேளாண் நிறுவனங்கள், வேளாண் கருவி தயாரிப்பு நிறுவனங்கள், உர நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் போன்றவற்றிலும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.


பொறியியல் கல்லூரிகளில் தமிழ் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

 

சென்னை, டிச.8- பொறியியல் கல்லூரி களில் தமிழ்ப் பாடங்களை பயிற்றுவிக்க, தமிழ் இலக்கியப் பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் 510 பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 7.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.

இந்நிலையில், தற்போதைய தொழில் நுட்பச் சூழலுக்கேற்ப பொறியியல் பாடத் திட்டம் மாற்றப்பட்டு, நடப்புக் கல்வியாண்டு (2022-2023) முதல் புதிய பாடத் திட்டம் அமல்படுத்தப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக, இளநிலை பொறியியல் படிப்புகளில் முதல் 2 பருவங்களில் (செமஸ்டர்) தமிழர் மரபு, தமிழரும்-தொழில்நுட்பமும் ஆகிய 2 கட்டாயப்பாடங்கள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டன. அதற்கான பாடத் திட்டம் தயாரிக்கப்பட்டு, கல்லூரிகளுக்கு வழங்கப் பட்டுள்ளது. இந்நிலையில், இந்தப் பாடங் களை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களின் கல்வித் தகுதி விவரங்களை அண்ணா பல் கலைக் கழகம் தற்போது வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக பல்கலை. பதிவாளர் ஜி.ரவிக்குமார், அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக் கையில் கூறியிருப்பதாவது:

தமிழர் மரபு, தமிழரும்-தொழில்நுட் பமும் ஆகிய பாடங்களை மாணவர்களுக்கு கற்பிக்க தமிழ் இலக்கியத்தில் பட்டப் படிப்பை முடித்தவர்கள் தகுதியானவர்கள். மேலும், பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி படித்த அறிவியல், பொறியியல், தொழில் நுட்பம் மற்றும் மனிதநேயப் பாடங்களின் பேரா சிரியர்களும் இந்தப் பாடங்களை பயிற்று விக்கலாம். இவ்வாறு சுற்றறிக் கையில் கூறப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம்-சென்னை இடையே மீண்டும் விமான சேவை

கொழும்பு,டிச.8- இலங்கையின் வடக்கு யாழ்ப் பாணத்தில் இருந்து சென்னைக்கு மீண்டும் விமானங்களை இயக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம் இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சி பெறுவதுடன், நலிவடைந்த பொருளா தாரத்தை மீட்டெடுக்கவும் உதவி யாக இருக்கும். இலங்கைக்கு அந்நிய செலா வணியை ஈட்டித் தரும் முக்கிய ஆதாரமாக சுற்றுலாத்துறை விளங்குகிறது. எனினும், 2020 ஆம் ஆண்டில் கரோனா தொற்று பரவி, சுற்றுலாத் துறையை கடுமையாக முடக் கியது. அத்துடன், இலங்கையின் பொருளாதார நெருக் கடிக்கான முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்று. தற்போது யாழ்ப்பாணத்தின் பலாலியில் இருந்து இந்தியாவுக்கான விமானங்கள் விரைவில் இயக்கப்படும், அநேகமாக டிசம்பர் 12ஆம் தேதிக்குள் விமான சேவை தொடங்கப் படும் என இலங்கை விமான போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிறிபாலா டி.சில்வா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.


இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில் 23 அரசு மருத்துவ கல்லூரிகளில் முதுநிலைப் படிப்பு / மெகா வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் ஒரு லட்சத்து 11 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை

 

  


சென்னை,டிச.8- இந்தியாவில் முதல்முறையாக, 23 அரசு மருத் துவக் கல்லூரிகளில் அவசர மருத்து வத்துக்கான முதுநிலை மருத்துவப் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அவசர மருத்துவம் தொடர்பான முதுநிலை மருத்துவப் படிப்பை (எம்டி) சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (7.12.2022) தொடங்கி வைத்தார். பின்னர், விஷ முறிவு மருத்துவ சிகிச்சை குறித்த கையேட்டை வெளியிட்டார். 

அப்போது, செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறிய தாவது: இந்தியாவிலேயே முதல்முறையாக அவசர மருத்து வத்துக்கான பிரத்யேக துறை தமிழ்நாட்டில் உருவாக்கப்பட் டுள்ளது. அதன்படி அவசர மருத்துவத்தில் மருத்துவ பட்ட மேற்படிப்பு எனும் புதிய பாடப்பிரிவு தொடங்கப்படுகிறது. இதுவரை 85 இடங்களுக்கு ஒன்றிய அரசின் அனுமதி கிடைத்துள்ளது. இதில் ஒன்றிய, மாநில அரசுக்கு தலா 50 சதவீத இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மேலும் 5 இடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 இந்த முதுகலை பட்டப்படிப்பு உருவாக்குவதற்கு பல்வேறு இணைத்துறைகளை மேம்படுத்துவது அவசிய மாக இருந்தது, அதனால்தான் 21 தலைக்காய சிறப்பு மருத்துவ நிபுணர்கள், 5 பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவர்கள், 6 வாஸ்குலார் அறுவை சிகிச்சை மருத்து வர்கள், 10 இதய அறுவைசிகிச்சை மருத்துவர்கள், 

49 மயக்கவியல் மருத்து வர்கள் பணியிடங்கள் புதியதாக உருவாக்கப்பட்டு நிரப்பப் பட்டுள்ளது. தமிழ்நாட்டின் இந்த முயற்சி ஒன்றிய அரசால், குறிப்பாக நிட்டி ஆயோக் நிர்வாகத்தால் பாராட்டப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்தியா முழுமைக்கும் இளங்கலை மருத்துவம் படிப்ப வர்களுக்கு இந்த பட்டப் படிப்பு அவசியம் என்று உணர்த்தப்பட்டு, கட்டாயமாக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மெகா வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 

ஒரு லட்சத்து 11 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை

அமைச்சர் சி.வெ.கணேசன் தகவல்

மதுரை,டிச.8- தமிழ்நாட்டில் 68 இடங்களில் மெகா வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தியதன் மூலம், ஒரு லட்சத்து 11 ஆயிரம் இளைஞர்களுக்கு தனியார் தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதாக தொழிலாளர் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்தார். 

மதுரையில் தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை மற்றும் மருந்தகம் (இஎஸ்அய்) பழங்காநத்தம், மணி நகரத் தில் உள்ளது. இவற்றில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் நேற்று (7.12.2022) ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது கை கழுவும் இடம் மோசமாக இருந்தது. அதை அவரே சுத்தப்படுத்தினார். பின்னர் அவர் கூறுகை யில், கடந்த அதிமுக ஆட்சியில் அளவுக்கு அதிகமாக மருந்துகள் கொள்முதல் செய்து முறைகேடு செய்தவர்கள் மீது அரசு தக்க நடவடிக்கை எடுக்கும்.

ஒப்பந்த தொழிலாளர்களின் குறைவான ஊதியம் குறித்த புகாருக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் மொத்தம் 67 லட்சம் பேர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். தமிழ்நாடு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை என்கிற சொல்லை போக்க வேண்டும் என்பதற்காக மிகப்பெரிய கனவு திட்டத்தை நிறைவேற்ற முதலமைச்சர் கூறியுள்ளார்.  இதுவரை தமிழ் நாட்டில் 68 இடங்களில் மெகா வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று அதன் மூலமாக ஒரு லட்சத்து 11 ஆயிரம் இளைஞர்களுக்கு தனியார் தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. 234 சட்டமன்றத் தொகு திகளிலும் வித்தியாசம் பாராமல் வேலைவாய்ப்பு முகாமை நடத்த முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார், என்றார்.

செவ்வாய், 8 நவம்பர், 2022

வங்கி ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தை சீரமைக்க வேண்டும் ஒன்றிய அரசுக்கு தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்

 

திருச்சி, நவ. 8- வங்கி ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தைத் தாமதமின்றிச் சீர மைக்க ஒன்றிய அரசு முன்வர வேண்டும் என இந்தியன் ஸ்டேட் வங்கியின் மேனாள் தொழிற்சங்கத் தலை வர்கள் கூட்டமைப் பின் (AFCCOM) நிர்வாகக் குழுக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறை வேற்றப்பட்டன.

திருச்சியில் 6.11.2022 அன்று நடைபெற்ற இக் கூட்டமைப்பின் நிர்வா கக் குழு கூட்டத் திற்கு இதன் தலைவர் எஸ்.பி. இராமன் தலைமை வகித் தார். துணைத் தலைவர் டி.வி.சந்திரசேகரன் முன் னிலை வகித்தார். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1986ஆம் ஆண்டு முதல் கடந்த 36 ஆண் டுகளாக குறைந்த ஓய்வூ தியத்தில் உடல் நலக் குறைவோடும், விண்ணை முட்டும் விலைவாசியோ டும் அய்ந்து லட்சத்துக்கு மேற்பட்ட வங்கி ஓய்வூதி யர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.  அவர்களில் ஓய்வூதிய தைத் தாமதமின்றி சீர மைத்து உயர்த்த இந்திய வங்கிகள் நிர்வாகத்துக் குத் தகுந்த வழிகாட்டு நெறிகளை ஒன்றிய அரசு வழங்க முன் வரவேண்டும்.

இந்திய ஸ்டேட் வங்கி ஓய்வூதியதாரர்கள் பெறும் தொகையை (Commutation Against Anticipatory Pension)  பத்து ஆண்டுகளுக்கு மட் டுமே பிடித்தம் செய்ய வேண்டும்.

கரோனா நோய் தடுப்பு காலத்தில் ரத்து செய்த மூத்த குடிமகக் களுக்கான ரயில் கட்டண பயண சலுகையை மீண் டும் தாமதமின்றி வழங்க ஒன்றிய அரசு முன் வர வேண்டும்.

நாற்பது ஆண்டு களாக தற்காலிகமாக தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட கிராமப்புற அஞ்சல் ஊழி யர்களை நிரந்தரமாக்கி பணி நிலைமைகளை வரை முறைப்படுத்திட ஒன்றிய அரசு முன்வர வேண்டும்.

மரபணு மாற்றப்பட்ட கலப்பினக் கடுகுக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் விதை உற்பத்திக்கும் வர்த் தக பயன்பாட்டுக்கும் அளித்த அனுமதியை ஒன்றிய அரசு திரும்பப் பெற்று நாட்டு நலனையும் விவசாயிகளையும் காப் பாற்ற முன் வரவேண் டும் என வலியுறுத்தி தீர் மானம் நிறை வேற்றப் பட்டுள்ளன.

இந்நிர்வாகக் குழு கூட்டத்தில் இச்சங்கத் தின் ஒருங்கிணைப்பாளர் எம்.கே.மூர்த்தி, மேனாள் பொதுச் செயலாளர் டி.சிங்காரவேலு, மதுரை எம்.முருகையா, திருச்சி என்.சுப்பிரமணியன், எம்.சந்திரா கில்பர்ட், வேலூர் ஆர்.லோகநா தன், கோயம்புத்தூர் எம். ரகுநாதன், திருவாரூர் என்.பாண்டுரங்கன், திருச்சி கே.வாசுதேவன், தஞ்சாவூர் வி.பூமிநாதன், மதுரை பரவை எஸ். பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஓய்வூதியர் வாழ்நாள் சான்றிதழ்: தமிழ்நாடு அரசாணை வெளியீடு

 

சென்னை, மே 25  ஓய்வூதியர்களுக் கான வாழ்நாள் சான்றிதழை, இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் பேங்க் மற்றும் இ-சேவா மய்யங்கள் மூலம் பெறலாம் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள் ளது. இதுதொடர்பான அர சாணையில் கூறப்பட்டுள்ளதாவது:

கரோனா தொற்று பரவலை முன்னிட்டு, ஆண்டுதோறும் நடத் தப்படும் ஓய்வூதியர் தகவல் திரட்டும் பணிகளுக்கு 2020ஆம் மற்றும் 2021ஆம் ஆண்டு விலக்கு அளித்து உத்தர விடப்பட்டது. இந்நிலையில் தற் போது அது மீண்டும் அமலுக்கு வந்து, எளிமைப்படுத்தப்பட்டுள் ளது.அதன்படி, இனி பயோமெட்ரிக் சாதனத்தை பயன்படுத்தி ஜீவன் பிரமான் இணையதளம் மூலம் டி.எல்.சி. (எ) டிஜிட்டல் லைப் சான்றிதழ் (வாழ்நாள் சான்றிதழ்) பெறமுடியும். இந்திய அஞ்சல் வங்கியின் சேவைகளுடன் இந்த பயோமெட்ரிக் முறை வழியாக அப் டேட் செய்யும் வசதி இணைக்கப் பட்டுள்ளது. ஜீவன் பிரமான் இணையதளத்தில் ஓய்வூதியம் பெறுவோர் வாழ்நாள் சான்றிதழை பெற, தமிழ்நாடு வட்டத்தின் இந்திய அஞ்சல் ஜீவன் பிரமான் இணைய தளத்தில் போதுமான உள்கட்ட மைப்புகள் வசதிகள் செய்யப்பட் டுள்ளன.

இதை கூடுதலாக தகவல் திரட்டுவோரும் பெற முடியும். இவ்வசதிக்காக தமிழ்நாட்டில் 11,018 வங்கி அணுகல் புள்ளிகள் மற்றும் 14,723 வங்கி சேவை வழங்குநர்கள் உள்ளனர். சேவைகளை வழங்கு வதற்கு ஒரு டிஎல்சி-க்கு (வாழ்நாள் சான்றிதழ்) ரூ.70 வசூலிக்க முன்மொழிந்துள்ளனர்.ஓய்வூதியம் பெறுவோர், குடும்ப ஓய்வூதியதாரர் ஓய்வூதியம் பெறுவோர் பெயர், ஆதார் எண் அல்லது விர்ச்சுவல் அய்.டி (பதிவு ஓய்வூதியம் வழங்கும் ஆணையத்துடன் ஆதார் எண்ணை ஏற்கனவே இணைத்திருக்க வேண் டும்), முகவரி, அலைபேசி எண் ஆகியவற்றின் விவரங்களை இந்திய அஞ்சல் கொடுப்பனவு வங்கியுடன் பகிரவும்.

நடப்பு ஆண்டு ஜூலை முதல், இவற்றை முறையாக திரட்டும் செயல்முறையை மேற்கொள்ளவும் அரசு அனுமதி அளிக்கிறது. தொடர்ந்து ஆகஸ்ட் மற்றும் செப் டம்பர் மாதம், ஓய்வூதியம் பெறு வோர் அவர்களின் வசதிக்கேற்ப சேவையை பெறலாம். ஜீவன் பிரமான் இணையதளம் மூலம் டிஜிட்டல் லைப் சான்றிதழ் பெற எண்ணுவோர், பின்வருபவனவற்றில் ஏதேனும் ஒன்றின் சேவை இடத்தை பயன்படுத்தி தங்களுக்கான சேவையை பெறலாம்.

அ) இந்திய அஞ்சல் கட்டண வங்கி கதவுடன் படி சேவை.

ஆ) இ-சேவா மய்யங்கள், பொது சேவை மையங்கள்.

இ) ஜீவன் பிரமான் போர்ட்ட லுடன் இணைக்கப்பட்ட பயோ மெட்ரிக் சாதனம் கொண்ட ஓய்வூ தியர் சங்கங்களுடன் இணைக் கப்பட்ட இடங்கள் இப்படியாக இ-சேவா மய்யம், சிஎஸ்சி, ஓய்வூதியம் பெறுவோர் சங்கம் பயோ-மெட்ரிக் சாதனங்களை கொண்டிருப்பதால், வயதான ஓய்வூதியம் பெறுவோர், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் ஓய்வூதிய அலுவலகம், கருவூலங் களுக்கு நேரில் வந்து கூடுதல் சேவை களை செய்வதற்காக சிரமப்படுவதை தவிர்க்க முடியும்.

ஓய்வூதியர்களின் வாழ்நாள் சான்றிதழ் வீட்டுக்கே சென்று பெறும் திட்டம் அமல்

 

சென்னை, ஜூன் 1 அஞ்சல்துறை மூலம் ஓய்வூதியர்கள் இருப்பிடத்துக்கே சென்று வாழ்நாள் சான்றிதழை பெறுவதற்கான சேவை தொடர்பாக தமிழ்நாடு அரசு மற்றும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசின் நிதித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாநில அரசின் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள், தங்கள் வாழ்நாள் சான்றிதழை ஆண்டுதோறும் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் சமர்ப்பிக்கின்றனர். தற்போது ​​ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் விருப்ப அடிப்படையில், ஓய்வூதியம் வழங்கும் அலுவலரிடம் நேரடியாகச் சென்று பதிவு செய்தல், அஞ்சல் மூலம் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பித்தல் மற்றும் மின்னணு விரல் ரேகை சாதனத்தை பயன்படுத்தி ‘ஜீவன் பிரமான்’ இணையம் மூலம் மின்னணு வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பித்தல் ஆகியவற்றில் ஏதேனும் ஒருமுறையில் வாழ்நாள் சான்றிதழை நேர்காணலில் சமர்ப்பித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரை நடக்கும் நேர்காணலில் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோரின் வயதை கருத்தில்கொண்டும், அவர்கள் நேரில் வருவதில் ஏற்படும் இடர்பாடுகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது.

எனவே, இந்தியா போஸ்ட்பேமென்ட்ஸ் வங்கி மூலம் ஓய்வூதியர்களின் இருப்பிடத்துக்கே சென்று ‘ஜீவன் பிரமான்’ இணையத்தின் வழியாக மின்னணு வாழ்நாள் சான்றிதழை பெறுவதற்கான சேவையை உள்ளடக்கிய 5 முறைகளிலான வருடாந்திர நேர்காணலை நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி, ஒரு மின்னணு வாழ்நாள் சான்றிதழுக்கு ரூ.70 என்ற கட்டணத்தில் ஓய்வூதியர்களின் இருப்பிடத்துக்கே சென்று சேவைகளை வழங்க ஒப்புக் கொண்டுள்ளது.

இதுதொடர்பாக தலைமைச் செயலகத்தில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில் தமிழ்நாடு அரசு - இந்தியா போஸ்ட்பேமென்ட்ஸ் வங்கி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இந் நிகழ்வில், நிதித்துறை செயலர் நா.முருகானந்தம், இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி நிறுவன தலைமை பொதுமேலாளர் குருசரண் ராய் பன்சால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


10 லட்சம் பேர்களுக்கு வேலை பயிர்க் கடன் தள்ளுபடி! குஜராத் வாக்காளர்களுக்கு ராகுல்காந்தி உறுதி

 

புதுடில்லி, நவ.7 பாஜக அரசின் வஞ்சகத்திலிருந்து குஜராத் மக்களை காங்கிரஸ் காப்பாற்றும் என காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டப்பேர வைக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. டிசம்பர் 1 மற்றும் 5ஆம் தேதிகளில், இரண்டு கட்டங் களாக வாக்குப்பதிவு நடை பெறவுள்ளது. டிசம்பர் 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம்ஆத்மி கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. தேர்தல் பிரச்சாரங்களில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பாஜக அரசின் வஞ்சகத்திலிருந்து குஜராத் மக்களை காங்கிரஸ் காப் பாற்றும் என   ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "குஜராத் மக்களுக்கு, 500 ரூபாய்க்கு எல்பிஜி சிலிண்டர், இளைஞர்களுக்கு 10 லட்சம் வேலை வாய்ப்புகள், 3 லட்சம் வரை விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அளித்துள்ளது. இந்த வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றுவோம். பாஜக அரசின் வஞ்சகத்திலிருந்து காங்கிரஸ் உங்களை காப்பாற்றும், மாநிலத்தில் மாற்றத்தின் திருவிழா கொண்டாடப்படும்" என்று தெரிவித்தார்.

ட்விட்டர் - இந்தியாவில் 90விழுக்காட்டினர் பணிநீக்கம்


புதுடில்லி,நவ.8 ட்விட்டர் நிறு வனத்தை எலான் மஸ்க் ரூ.3.75 லட்சம் கோடிக்கு கையகப்படுத்தியுள்ளார். அவர் செலவு குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். முதல் கட்டமாக கணிசமான பணியாளர்களை அடுத்தடுத்து பணி நீக்கம் செய்து வருகிறார்.

இதுகுறித்து ட்விட்டர் நிறுவனத் தின் இந்திய பிரிவு வட்டாரங்கள் கூறியதாவது:

இந்தியாவில் 200 பேர் ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த வாரம் 180-க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிய 10-க்கும் மேற்பட்ட சிலரே இன்னும் பணி யில் தொடர்ந்து வருகின்றனர். பணிநீக்கம் செய்யப்பட்டவர் களில் 70விழுக்காடு வரை தயாரிப்பு மற்றும் பொறியியல் குழுவில் வேலை செய்து வந்தவர்கள்.

இவை தவிர, சந்தைப் படுத்துதல், பொதுக் கொள்கை, பெருநிறுவன தொடர்பு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளை சேர்ந்த பணியாளர்களும் ட்விட்டர் நடவடிக்கை யால் வேலை இழப்புக்கு ஆளாகி உள் ளனர். பன்னாட்டு அளவில் அந்நிறுவனத் தில் 7,500 பேர் பணியாற்றி வந்த நிலையில், சுமார் 3,700 பேர் வேலையை விட்டு நீக்கப் பட்டுள்ளனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

வெள்ளி, 22 ஜூலை, 2022

வாரத்துக்கு 3 நாட்கள் விடுமுறை : ஒன்றிய அரசு முடிவு

பகுதி நேர ஆசிரியர்களுக்கு 10,000 ரூபாயாக ஊதியம் உயர்வு : தமிழக அரசு அரசாணை வெளியீடு


சென்னை,பிப்.2- தமிழகத் தில் பகுதி நேர ஆசி ரியர்கள் 12ஆயிரத்து 483 பேருக்கு  நிபந்தனை களுடன் மாத ஊதியம் ரூ.7,700-லிருந்து ரூ.10,000 ஆக அதிகரித்து வழங்குவதென தமிழக அரசு அறிவித்துள்ளது.

வாரத்தில் மூன்று நாட் கள் முழுவதுமாக பகுதி நேர ஆசிரியர்கள் பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனை யுடன் பகுதி நேர ஆசிரியர் களுக்கான ஊதியம் ரூ.7,700 லிருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆணையில், அரசுப் பள்ளி களில் கல்விசார் இணைச் செயல்பாடுகளை பயிற்று விக்கும் பொருட்டு தோற்று விக்கப்பட்ட 12483 பகுதி நேரப் பயிற்றுநர் பணியிடங் களில் தற்போது பணியில் உள்ள 12,483 பகுதி நேர பயிற்றுநர்களுக்கு நிபந்த னைகளுடன் இவர்களது மாத ஊதியம் ரூ.7700-லிருந்து ரூ.10000 ஆக அதி கரித்து வழங்கிட முடிவு செய்துள்ளது. தற்போது பணியில் உள்ள பகுதி நேரப் பயிற்று நர்களை தேவை யுள்ள பள்ளிகளுக்கு மறு ஓதுக்கீடு செய்து, இனிவரும் காலங்களில் வாரத்திற்கு மூன்று முழு நாட்கள் பணிபுரிவதை உறுதி செய்ய வேண்டும். பகுதி நேரப் பயிற் றுநர்கள் பணி புரியும் சார்ந்த பள்ளி தலைமையாசிரி யர்கள் வழங்கும் கால அட்ட வணையின்படி இவர்கள் பள்ளிக்கு வருகை புரிந்து மாணவர்களுக்கு பயிற்று விக்க வேண்டும். இவர்களுக் கான வருகைப் பதிவேடு சார்ந்த தலைமையாசிரிய ரால் முறையாக பராமரிக் கப்பட வேண்டும். இவர் களின் ஊதியம் வருகைப் பதிவேட்டின்படி தலைமை யாசிரியர் மூலமாகவே விடு விக்கப்பட வேண்டும் என் றும் குறிப்பிட்டுள்ளனர். 

சனி, 2 ஜூலை, 2022

தமிழ்நாடு வணிகர் நலவாரிய உறுப்பினர்களுக்கு குடும்ப நலநிதி ரூ.3 லட்சமாக உயர்வு


சென்னை, ஜூன் 7  தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணை: வணிகர் நல வாரிய உறுப்பினர்களின் வாரிசுதாரர்களுக்கு குடும்பநல உதவித் தொகைரூ.50 ஆயிரமாக வழங்கப்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து, தற்போது வணிகர் நல வாரிய உறுப்பினர்களின் வாரிசு தாரர்களுக்கு குடும்ப நல உதவித் தொகைரூ.1 லட்சமாக வழங்கப்பட்டு வருகிறது. 

திருச்சியில் 5.5.2022 அன்று நடந்த 39ஆவது தமிழக வணிகர் விடியல் மாநாட்டில் முதலமைச்சர், தமிழ்நாடு வணிகர் நல வாரிய உறுப்பினர்கள் உயிரிழக்கும் பட்சத் தில் அவர்களது குடும்பத்திற்கு தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தால் தற்போது வழங்கப்பட்டு வரும் குடும்பநல உதவித்தொகைரூ.1 லட்சத்தில் இருந்துரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிப்பு செய்துள்ளார். 

அதனடிப்படையில், வணிகர் நல வாரியத்தில் நிரந்தர உறுப்பி னராக பதிவு பெற்றுள்ள வணி கர்களுக்கு நிபந்தனைகளுக்குட் பட்டு குடும்ப நல உதவித்தொகை உயர்த்தி வழங்க ஆணை வழங்கு மாறு வணிகவரி ஆணையர் அரசை கேட்டுக்கொண்டார்.

அதன்படி, வணிகர் நல வாரியத்தில் நிரந்தர உறுப்பினராக பதிவு பெற்று குறைந்தது ஓர் ஆண் டாவது உறுப்பினராக இருத்தல் வேண்டும். 

உறுப்பினர் மதிப்புக் கூட்டுவரி அல்லது சரக்குகள் மற் றும் சேவைகள் வரியில் பதிவு பெற் றிருப்பின் முறையாக மாதாந்திர நமுனா தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும். உறுப்பினர் எவரும் வேறு எந்த நல வாரியத்திலும் பதிவு பெற்று நல உதவித் திட்டம் எதுவும் பெற்றிருத்தல் கூடாது. உறுப்பி னரின் மரணம் தற்கொலையாக இருத்தல் கூடாது. 

மேலும், தமிழக வணிகர் விடியல் மாநாட்டில் முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பினை செயல் படுத்தும் விதமாக வணிகர் நல வாரியத்தில் நிரந்தர உறுப்பினராக உள்ள வணிகர்கள் இறக்க நேரிட் டால் அவர்களின் குடும்பத்திற்கு நிபந்தனைகளுக்குட் பட்டு, குடும்ப நல உதவித்தொகைரூ.1 லட்சத்தில் இருந்துரூ.3 லட்சமாக உயர்த்த அரசு முடிவு செய்து ஆணையிடுகிறது.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


வெள்ளி, 10 ஜூன், 2022

தமிழ்நாட்டில் கடைகள், வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் இயங்கலாம்: அரசு அனுமதி

தெய்வ வரி

வியாழன், 26 மே, 2022

100 நாள் வேலை உறுதித் திட்ட தினக்கூலியில் மாற்றம்: தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட அநீதி


21  மாநிலங்கள்யூனியன் பிரதேசங் களில் 5 சதவீதத்திற்கும் குறைவான ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 10 மாநிலங் களுக்கு மட்டுமே 5சதவீதத்திற்கும் அதிக மான உயர்வு கிடைத்துள்ளதுஇவை ஏப் ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது

2022-2023 நிதியாண்டிற்கான கிராமப்புற வேலை உறுதித் திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் புதிய ஊதிய விகிதங்களை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

34 மாநிலங்களில் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 5 சதவீதத்திற்கும் குறைவாகவும், 10 மாநிலங்கள் 5 சதவீதத் திற்கும் அதிகமான உயர்வும் பெறுகின்றனமணிப்பூர்மிசோரம்திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களில் எவ்வித மாற்றமும் மேற் கொள்ளவில்லைஇந்த புதிய ஊதியம் ஏப் ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிர தேசங்களில்அதிகபட்சமாக கோவாவுக்கு 7.14 சதவீதம் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளதுஅதாவது, 2021-2022இல் தினக்கூலியாக ரூ.294 இருந்த நிலையில், 2022-2023க்கு 315ஆக உயர்ந்துள்ளதுகுறைவான ஊதிய உயர்வாக 1.77% மேகலாயாவுக்கு கிடைத்து உள்ளதுஅங்கு தினக்கூலி 226இல் இருந்து 230ஆக உயர்ந்துள்ளதுமேகாலயாவைத் தவிரஅருணாச்சலப் பிரதேசம்நாகாலாந்து  ஆகிய இரண்டு மாநிலங்களும் தினக்கூலி ஊதியம் 2 சதவீதத்திற்கும் குறைவான அதிகரிப்பைக் கண்டுள்ளன.

அசாம்தமிழ்நாடுபுதுச்சேரியில் ஊதியம் 2 முதல் 3 சதவீதம் வரை உயர்த் தப்பட்டுள்ளதுமகாராட்டிராஒடிசாதாத்ராநாகர் ஹவேலிடாமன் மற்றும் டையூவில் 3 முதல் 4% வரையும்குஜராத்உத்தரப்பிரதேசம்உத்தரகாண்ட்ராஜஸ் தான்மேற்கு வங்கம்சிக்கிம்ஹிமாச்சல பிரதேசம்அந்தமான் & நிக்கோபார் தீவுகள்பஞ்சாப்ஆந்திராதெலங்கானா ஆகிய மாநிலங்களில் 4 முதல் 5 சதவீதம் வரையும் ஊதிய உயர்வை பெற்றுள்ளன.

அரியானாசத்தீஸ்கர்மத்தியப் பிர தேசம்பீகார்ஜார்கண்ட்ஜம்மு & காஷ்மீர்லட்சத்தீவுகேரளாகருநாடகா மற்றும் கோவா ஆகிய 10 மாநிலங்கள் மட்டுமே 5 சதவீதத்திற்கும் அதிகமான ஊதிய உயர்வு கிடைத்துள்ளது.  அதாவது, 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான NREGS ஊதியங் கள் ஒரு நாளைக்கு ரூ. 4 முதல் ரூ. 21 வரை அதிகரிக்கப்பட்டுள்ளன.

MGNREGA ஊதிய விகிதங்கள் சிறிமி-கிலி (நுகர்வோர் விலைக் குறியீடு-விவசாயத் தொழிலாளர்மாற்றங்களின்படி நிர்ணயிக் கப்படுகின்றனஇது கிராமப்புறங்களில் பணவீக்கத்தின் அதிகரிப்பைப் பிரதிபலிக் கிறதுபுதிய ஊதிய விகிதங்களின்படிஅய்ந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங் களில் அதிக  NREGS ஊதியம் பெறுவதில் முதலிடத்தில் அரியானா (தினக்கூலி 331 ரூபாய்உள்ளதுஇதைத் தொடர்ந்துகோவா (ரூ315), கேரளா (ரூ311), கருநாடகா (ரூ309), அந்தமான் நிக்கோபார் (308) ஆகும்குறைவான ஊதிய உயர்வில் திரிபுரா (தினக்கூலி ரூ212), பிகார் (ரூ210), ஜார்க்கண்ட் (ரூ210), சத்தீஸ்கர் (ரூ204), மத்திய பிரதேசம் (ரூ204) ஆகும்.

உத்தரப்பிரதேசம்உத்தரகாண்ட் ஆகிய இரண்டுக்கும் ஒரு நாளைக்கு ரூ.213 ஆகவும்அருணாச்சலப் பிரதேசம்சிக்கி முக்கு ரூ.216 ஆகவும்ஒடிசா மற்றும் சிக்கி முக்கு ரூ.222 ஆகவும்மேற்கு வங்கத்தில் ரூ.223 ஆகவும்ஜம்மு-காஷ்மீருக்கு ரூ.227 ஆகவும் ஊதிய தொகை உள்ளது.

இதன் படி தமிழ்நாடு அதிக வரி வரு வாயை ஒன்றிய அரசுக்குக் கொடுத்த போதிலும் தொடர்ந்து அனைத்து விதங் களிலும் தமிழ்நாட்டை ஒன்றிய அரசு புறக்கணித்து வருகிறதுதற்போது நூறுநாள் வேலை வாய்ப்பு ஊதியம் வழங்குவதிலும் பார பட்சம் காட்டி நடந்துள்ளதுஎன்பது தெரிய வருகிறது.

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மாற்றுத் திறனாளிகள் 4 மணி நேரம் வேலை செய்தாலே முழு ஊதியம் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு

 

சென்னை, மே 17  வேலை அட்டை கோரும் தகுதியுடைய மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் நீல நிற  அட்டை வழங்குவதோடு மாநில அரசின் சிறப்பு வழிகாட்டு நெறிமுறை களின்படி  அவர் களுக்கு வேலை  குறித்த காலத் திற்கும் அதற்கான ஊதியத் தினையும்  வழங்குவது உறுதி செய்யப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இது குறித்து வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் தேசிய அளவில் சிறப்பாக செயல்படுத் தப்பட்டு வருகிறது.

இதன்படி திறன்சாரா உடல் உழைப்பினை மேற்கொள்ள விருப்பமுடைய வயது வந்தோரை கொண்ட குடும்பம் ஒன்றிற்கு அதிகபட்சமாக ஆண்டொன் றிற்கு 100 நாள்கள் வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதற்கு 1 மணி நேர உணவு இடைவெளியுடன் கூடிய 8 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். இவ்வேலைக்கான தினசரி ஊதியம் ரூ.281 எனவும் இம்முழு ஊதியத்தினை பெற 37 கன அடி வேலை செய்ய வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவரவர் செய்யும் வேலையின் அளவிற்கேற்ப ஊதி யம் வழங்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் முதன் முறையாக  மாற்றுத் திறனாளிகளுக்கென சிறப்பு ஊரக விலைப் புள்ளி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி மாற்றுத்திறனாளிகள் 4 மணி நேரம் வேலை செய்தாலே முழு ஊதியம் பெறலாம் என வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்படி பணித்தளத்தில் தொழிலாளர் களுக்கு தண்ணீர் வழங்குதல், குழந்தைகளை பராமரித்தல், முன் அளவீடு செய்ய உதவுதல் மற்றும் சிறு வேலைகளான பணித்தளத் தில் அகற்றப்பட்ட மரங்களை அப்புறப்படுத்துதல் (இலை, தழைகள் மற்றும் சிறு மரங்கள்), கரைகளை சமன்படுத்துதல், கரை களின் சரிவுப்பகுதிகளை சீர் செய்தல் போன்ற பணிகள் மட் டுமே செய்ய வரையறுக்கப்பட் டுள்ளது. தமிழகத்தின் இத்தகைய தனித்துவமான  செயல்பாட்டினை ஒன்றிய அரசு பாராட்டியுள்ள தோடு இதர பிற மாநிலங்களும் பின்பற்றி செயல்படுத்த அறிவுறுத் தப்பட்டுள்ளது.

வேலை கோரும் தகுதியுடைய  அனைத்து மாற்றுத்திறனாளி களுக்கும் நீல நிற வேலை அட்டை வழங்கப் பட்டுள்ளது. இவர் களுக்கு 2 கி.மீ தூரத்திற்குள் மட் டுமே வேலை வழங்கப்படுவதுடன் வேலைக்கான ஊதியம் குறிப் பிட்டுள்ள 15 நாட்களுக்குள் அவர்களது வங்கிக்கணக்கில் நேர டியாக ஈடுசெய்யப்பட்டு எவ்வித தாமதமும் ஏற்படாத வண்ணம் அலுவலர்களால் உறுதி செய் யப்படுகிறது. தமிழ்நாட்டில் மாவட்டம் தோறும் ஒவ்வொரு வாரமும் நடைபெறும் மாவட்ட ஆட்சியரின் குறைதீர்ப்பு முகாமில் இவர்களது விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. இதைத்தவிர இரு மாதங் களுக்கு ஒரு முறை மாவட்ட அளவில் குறை கேட்கும் நாள் நடத்த திட்ட இயக்குநர்களுக்கும் வட்டார அளவில் மாதந்தோறும் நடத்த வட்டார வளர்ச்சி அ லுவலர்களுக்கும், தெரிவிக்கப்பட் டுள்ளது.

தற்போது இத்திட்ட தொழிலா ளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் வேலை அட்டை சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவரது கையொப்பத்துடன் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினை செயல்படுத்தும் முகமை கிராம ஊராட்சி ஆதலால் அதன் தலை வரது கையொப்பத்துடன் வழங் கப்படுகிறது. இதற்கான விண்ணப் பத்தினை ஊராட்சி செயலர், ஊராட்சி மன்றத்தலைவர், வட் டார வளர்ச்சி அலுவலர் இதில் எவரேனும் ஒருவரிடம் வழங்க லாம். இவ்வேலை அட்டையினை வழங்க எவ்வித முன் நிபந் தனைகளுமின்றி கோரும் அனை வருக்கும் தகுதியின் அடிப்படை யில் வழங்கப்பட்டு வருகிறது.

தினமும் இரு முறை தொழி லாளர்களது வருகையினை புகைப்படம் எடுத்தல் வேண்டும் என்பது ஒன்றிய அரசின் அறிவு றுத்தலாகும். இதனை மாற்றுத் திறனாளிகளும் சிரமமின்றி மேற் கொள்ள நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. 

எனவே வேலை அட்டை கோரும் தகுதியுடைய மாற் றுத்திறனாளிகள் அனைவருக் கும் நீல நிற அட்டை வழங்குவ தோடு மாநில அரசின் சிறப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி அவர் களுக்கு வேலையும் குறித்த காலத்திற்கும் அதற்கான ஊதியத் தினையும் வழங்குவது உறுதி செய் யப்படுகிறது. இவ்வாறு தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


சுகாதார துறையில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் 13,267 பேருக்கு ஊதிய உயர்வு

 

அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

சென்னை, மே.23 தமிழ்நாடு சுகாதாரத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 13,267 பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

இது தொடர்பாக அவர் சென்னையில் நேற்று  (22.5.2022) செய்தியாளர்களிடம் கூறியதா வது: தமிழ்நாடு சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் தேசிய நலவாழ்வுக் குழுமத்தில் பல்லாயிரக்கணக்கான தொழிலா ளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

அவர்கள் ஊதிய உயர்வுக்காக முதலமைச்சரையும், என்னையும் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு 28,982 பேருக்கு 30 சதவீத ஊதிய சலுகைகள் அளித்து, ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்காக ரூ.89 கோடியே 82 லட்சம் கூடுதலாக செலவாகி யுள்ளது.

மற்றவர்களும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து, முதலமைச்சரின் உத்தரவின்படி 13,267 பேருக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட் டுள்ளது.

தேசிய நலவாழ்வு குழுமத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி யாற்றும் மகளிர், தங்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் எங்கும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகின்ற மகளிர் பணி யாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கப்படுவது இல்லை. எனி னும், இந்த கோரிக்கை முதல மைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, 6 மாதம் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும்.

மருத்துவத் துறையின் கட்ட மைப்பை மேம்படுத்துவதற்காக, மானியக் கோரிக்கையில் 136 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதுமட்டுமின்றி, தினமும் பல்வேறு சிறப்பு அறிவிப்புகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

ஒன்று முதல் 6 வயது குழந்தைகளுக்கான ஊட்டச் சத்து திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நீலகிரியில் தொடங்கி வைத்துள்ளார். ஊட்டச் சத்துக்குறைபாடுகளை போக்க, தேசிய நலவாழ்வுக் குழுமத்தின் கீழ் ஈரோடு அரசு மருத்துவமனை, கரூர்அரசு மருத்துவமனை, சென்னைஅரசு ஸ்டான்லி மருத்துவமனையில் 3 புனர்வாழ்வு மய்யங்களை, ரூ.44 லட்சம் செலவில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பல் மற்றும் வாய் சுகாதார சேவைகளை வலுப்படுத்தும் வகையில், தேசிய நலவாழ்வுக் குழுமத்தின் கீழ் 29 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல் மருத்துவ சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட உள்ளது. இதற் கான மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள், மருத்துவ உப கரணங்களுக்காக ரூ.87 லட்சம் ஒதுக்கப்படும். இவ்வாறு அமைச் சர் தெரிவித்தார்.