• Viduthalai
சென்னை, மே 25 ஓய்வூதியர்களுக் கான வாழ்நாள் சான்றிதழை, இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் பேங்க் மற்றும் இ-சேவா மய்யங்கள் மூலம் பெறலாம் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள் ளது. இதுதொடர்பான அர சாணையில் கூறப்பட்டுள்ளதாவது:
கரோனா தொற்று பரவலை முன்னிட்டு, ஆண்டுதோறும் நடத் தப்படும் ஓய்வூதியர் தகவல் திரட்டும் பணிகளுக்கு 2020ஆம் மற்றும் 2021ஆம் ஆண்டு விலக்கு அளித்து உத்தர விடப்பட்டது. இந்நிலையில் தற் போது அது மீண்டும் அமலுக்கு வந்து, எளிமைப்படுத்தப்பட்டுள் ளது.அதன்படி, இனி பயோமெட்ரிக் சாதனத்தை பயன்படுத்தி ஜீவன் பிரமான் இணையதளம் மூலம் டி.எல்.சி. (எ) டிஜிட்டல் லைப் சான்றிதழ் (வாழ்நாள் சான்றிதழ்) பெறமுடியும். இந்திய அஞ்சல் வங்கியின் சேவைகளுடன் இந்த பயோமெட்ரிக் முறை வழியாக அப் டேட் செய்யும் வசதி இணைக்கப் பட்டுள்ளது. ஜீவன் பிரமான் இணையதளத்தில் ஓய்வூதியம் பெறுவோர் வாழ்நாள் சான்றிதழை பெற, தமிழ்நாடு வட்டத்தின் இந்திய அஞ்சல் ஜீவன் பிரமான் இணைய தளத்தில் போதுமான உள்கட்ட மைப்புகள் வசதிகள் செய்யப்பட் டுள்ளன.
இதை கூடுதலாக தகவல் திரட்டுவோரும் பெற முடியும். இவ்வசதிக்காக தமிழ்நாட்டில் 11,018 வங்கி அணுகல் புள்ளிகள் மற்றும் 14,723 வங்கி சேவை வழங்குநர்கள் உள்ளனர். சேவைகளை வழங்கு வதற்கு ஒரு டிஎல்சி-க்கு (வாழ்நாள் சான்றிதழ்) ரூ.70 வசூலிக்க முன்மொழிந்துள்ளனர்.ஓய்வூதியம் பெறுவோர், குடும்ப ஓய்வூதியதாரர் ஓய்வூதியம் பெறுவோர் பெயர், ஆதார் எண் அல்லது விர்ச்சுவல் அய்.டி (பதிவு ஓய்வூதியம் வழங்கும் ஆணையத்துடன் ஆதார் எண்ணை ஏற்கனவே இணைத்திருக்க வேண் டும்), முகவரி, அலைபேசி எண் ஆகியவற்றின் விவரங்களை இந்திய அஞ்சல் கொடுப்பனவு வங்கியுடன் பகிரவும்.
நடப்பு ஆண்டு ஜூலை முதல், இவற்றை முறையாக திரட்டும் செயல்முறையை மேற்கொள்ளவும் அரசு அனுமதி அளிக்கிறது. தொடர்ந்து ஆகஸ்ட் மற்றும் செப் டம்பர் மாதம், ஓய்வூதியம் பெறு வோர் அவர்களின் வசதிக்கேற்ப சேவையை பெறலாம். ஜீவன் பிரமான் இணையதளம் மூலம் டிஜிட்டல் லைப் சான்றிதழ் பெற எண்ணுவோர், பின்வருபவனவற்றில் ஏதேனும் ஒன்றின் சேவை இடத்தை பயன்படுத்தி தங்களுக்கான சேவையை பெறலாம்.
அ) இந்திய அஞ்சல் கட்டண வங்கி கதவுடன் படி சேவை.
ஆ) இ-சேவா மய்யங்கள், பொது சேவை மையங்கள்.
இ) ஜீவன் பிரமான் போர்ட்ட லுடன் இணைக்கப்பட்ட பயோ மெட்ரிக் சாதனம் கொண்ட ஓய்வூ தியர் சங்கங்களுடன் இணைக் கப்பட்ட இடங்கள் இப்படியாக இ-சேவா மய்யம், சிஎஸ்சி, ஓய்வூதியம் பெறுவோர் சங்கம் பயோ-மெட்ரிக் சாதனங்களை கொண்டிருப்பதால், வயதான ஓய்வூதியம் பெறுவோர், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் ஓய்வூதிய அலுவலகம், கருவூலங் களுக்கு நேரில் வந்து கூடுதல் சேவை களை செய்வதற்காக சிரமப்படுவதை தவிர்க்க முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக